search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National"

    • 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது.
    • சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அல்லு அர்ஜுன் பெற்றுக் கொண்டார்.

    இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.

    இதில் 'புஷ்பா' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • சாசக விருது 2022-க்கான விண்ணப்பங்களை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள் அமைச்சகம் வரவேற்றுள்ளது.
    • இதற்கான விண்ணப்பங்கள் https://awards.gov.in என்ற இணையப்பக்கத்தின் மூலம் வருகிற ஜூலை 14 -ந்தேதி வரை வரவேற்கப்படு கின்றன.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டுகளில் சாதனை படைத்த வீரர்கள், வீராங்கனைகள் உள்ளனர். இதைத்தவிர சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள், இளம்பெண்கள் மாவட்ட, மாநில, தேசிய அளவில் விளையாடி வருகின்றனர். மேலும் பலர் சமூக சேவை புரிந்து வருகின்றனர்.

    தேசிய விருது

    இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் சாசகத்துடன் தொடர்புடையவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும், இளைஞர்களிடையே கூட்டாக செயல்படும் உணர்வை மேம்படுத்தவும், சவாலான சூழ்நிலைகளில் விரைந்து செயல்படுவதை ஊக்கப்படுத்தவும், மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகம் டென்சிங் நார்கே தேசிய சாசக விருதினை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக டென்சிங் நார்கே தேசிய சாசக விருது 2022-க்கான விண்ணப்பங்களை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள் அமைச்சகம் வரவேற்றுள்ளது.

    இதற்கான விண்ணப்பங்கள் https://awards.gov.in என்ற இணையப்பக்கத்தின் மூலம் வருகிற ஜூலை 14 -ந்தேதி வரை வரவேற்கப்படு கின்றன. இந்த விருதுக்கான விதிமுறைகளை இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுக்கள் அமைச்சகத்தின் இணையதளத்தில் அறியலாம்.

    ரூ.15 லட்சம்

    இந்த விருது ரூ.15 லட்சம் ரொக்கப்பரிசையும், வெண்கல பதக்கம், சான்றிதழையும் கொண்டது. வழக்கமாக இந்த விருது 4 வகைகளில் வழங்கப்படும். கடந்த 3 ஆண்டுகளாக நிலம், கடல், வான் சாகசங்களுக்கு விருது வழங்கப்படுவதோடு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கதாகும்.

    • திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
    • முதன்முறையாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் அணிவகுப்பில் காவல்துறையுடன் இணைந்து கலந்து கொண்ட மாணவர்களுக்கும், சாரணர் - கவர்னர் விருதுத் தேர்வுக்கு கலந்து கொண்ட மாணவர்களுக்கும் சான்றிதழ்களையும், பரிசுகளையும் தலைமை ஆசிரியர் ராஜா வழங்கி னார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

    விழாவில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்க ளுக்கும், மாநில அளவிலான கலைத்திருவிழாவில் சேவை செய்த மாணவர்களுக்கும், முதன்முறையாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் அணிவகுப்பில் காவல்துறையுடன் இணைந்து கலந்து கொண்ட மாணவர்களுக்கும், சாரணர் - கவர்னர் விருதுத் தேர்வுக்கு கலந்து கொண்ட மாணவர்களுக்கும் சான்றிதழ்களையும், பரிசுகளையும் தலைமை ஆசிரியர் ராஜா வழங்கி னார். உதவித் தலைமை ஆசிரியை சத்யவதி , சாரண ஆசிரியர் திருவருள்செல்வன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பாராட்டினர்.

    • தேசிய பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தமிழக அரசால் 2022-ம் ஆண்டிற்கு வழங்கப்படும்

    பெரம்பலூர்

    தமிழக அரசால் 2022-ம் ஆண்டிற்கு வழங்கப்படும் தேசிய பெண் குழந்தைகள் விருதிற்கு தமிழகத்தை பிறப்பிடமாக கொண்ட 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய வீர தீர செயல் மற்றும் சாதனைகள் புரிந்த கீழ்க்காணும் தகுதிகளுடைய பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் தகுதிகளையுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். உரிய விவரங்களுடன் வருகிற 30-ந்தேதி மாலை 5.30 மணிக்குள் பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் வளாகம் என்ற முகவரியை அணுகி தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்திடுமாறு மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கேட்டுக் கொண்டுள்ளார்

    • தேசிய நூலக வார விழா நிறைவடைந்தது
    • போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள்

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் ஒரு வாரமாக நடைபெற்று வந்த தேசிய நூலக வார விழா நிறைவுப் பெற்றது.

    இந்த நிறைவு நாள் விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் சண்முகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளர் கிருஷ்ணலீலா, ரோட்டரி கிளப் தலைவர் அழகுதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில், அரியலூர் நகர் மன்ற தலைவர் சாந்தி, வாசகர் வட்டத் தலைவர் மங்கையர்க்கரசி, அரியலூர் அரசு கலைக் கல்லூரி தமிழாய்வுத் துறை தலைவர் தமிழ்மாறன், அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை தமிழாசிரியர் தமிழனி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்கலையும் வழங்கினர்.

    அப்போது அவர்கள் பேசுகையில், கல்வி என்ற பெரும் கடலை தனக்குள் தேக்கி வைத்துள்ள நூலகங்கள் தன்னை தேடி வரும் வாசகர்களின் அறிவு பசியினை போக்கி அவர்களை பூரணமான மனிதர்களாக சமூகத்துக்கு தருகின்றன. எனவே நல்ல பயனுள்ள நூல்களை படித்து சமுதாயத்துக்கு தொண்டு ஆற்ற வேண்டும் என்றனர்.

    முன்னதாக முதல்நிலை நூலகர் ஸன்பாஷா வரவேற்றார். முடிவில் நூலக அலுவலக உதவியாளர் மலர்மன்னன் நன்றி தெரிவித்தார்.

    • தேசிய அளவில் 2-வது முறையாக வினாடி-வினா போட்டி மாணவ, மாணவிகள் வலைதளத்தில் பதிவு செய்யலாம்.
    • கடைசி தேதி 20.11.2022 ஆகும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    75-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் வகையில் தேசிய அளவில் 2- வது முறையாக Fit India Quiz Competition நடக்கிறது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவ-மாணவிகள் மத்திய அரசின் வலைதளமான https://fitindia.nta.ac.in-ல் பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ளலாம்.

    இந்த வினாடி-வினா போட்டியில் ஒரு பள்ளியில் 2 மாணவா்கள் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். மாணவா்கள் பதிவு செய்தால் ஒரு மாணவருக்கு ரூ.50 வீதம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இதற்கான கடைசி தேதி 20.11.2022 ஆகும்.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவ, மாணவிகளும் வினாடி-வினா போட்டியில் கலந்து கொண்டு, சிவகங்கை மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சோ்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளியில் பயிலும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு உடல் எடை, உயரம், கண் பரிசோதனை, பல் பரிசோதனை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.
    • அதன்பின் மாணவர்களுக்குஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும் மற்றும் பழங்கள், காய்கறிகள் உண்பதன் பயன்கள் ஆகியவற்றையும் பொம்மலாட்டம் நிகழ்ச்சியின் மூலம் விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

    வள்ளியூர்:

    தேசிய ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு நேரு நர்ஸ்சிங் கல்லூரியின் சார்பாக கோட்டையடி கிராமம் அருள்யா நடுநிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் நேரு நர்சிங் கல்லூரியின் முதுகலை மற்றும் இளங்கலை மாணவிகள் பங்கு கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளியில் பயிலும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு உடல் எடை, உயரம், கண் பரிசோதனை, பல் பரிசோதனை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.

    அதன்பின் மாணவர்களுக்குஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும் மற்றும் பழங்கள், காய்கறிகள் உண்பதன் பயன்கள் ஆகியவற்றையும் பொம்மலாட்டம் நிகழ்ச்சியின் மூலம் விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

    மேலும், இந்நிகழ்ச்சியை சிறப்புடன் நடத்த கல்லூரி முதுகலை பேராசிரியை சுபி ஊக்கமளித்தார்.

    • தேசிய வருவாய் வழி திறன் பயிற்சி நடந்தது.
    • சமூகஅறிவியல் ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் நன்றி கூறினார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள புளியால் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் பயிற்சி நடந்தது.

    ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஒருங்கிணைப்பாளர் பீட்டர் லெமாயு தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் லட்சுமிதேவி, மேற்பார்வையாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் நாகேந்திரன் வரவேற்றார். முதன்மை கருத்தாளராக ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர் மோகன் கலந்து கொண்டு திறன் பயிற்சி அளித்தார். ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர் ராஜ்குமார், செல்வம் செயல்பட்டனர். பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் ஜோசப், முன்னாள் மாணவர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஊரக திரனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், சஜன், ஹரிஹரன் ஆகியோர் பாராட்டப்பட்டனர். சமூகஅறிவியல் ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் நன்றி கூறினார்.

    • காவிரியில் ஏற்பட்டதால் குமாரபாளையத்தில் 150 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.
    • தேசிய பேரிடர் மீட்பு படையினர் 22 பேர் குமாரபாளையம் வந்தனர்.

    குமாரபாளையம்:

    காவிரியில் ஏற்பட்டதால் குமாரபாளையத்தில் 150 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. தொடர்ந்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் 22 பேர் குமாரபாளையம் வந்தனர்.

    மணிமேகலை தெரு, கலைமகள் தெரு, அண்ணா நகர், இந்திரா நகர் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளை ஆய்வு செய்த திருச்செங்கோடு வருவாய் பிரிவு அதிகாரி இளவரசி, மீட்பு படையினரிடம் ஆலோசனை வழங்கினார்.

    இவர்களுடன் வட்டாட்சியர் தமிழரசி, தி.மு.க. நகர செயலர் செல்வம், வருவாய் ஆய்வாளர் விஜய், கிராம நிர்வாக அலுவலர் முருகன், தியாகராஜன், செந்தில்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

    மாற்றுத்திறனாளிகள் அனைத்து நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு அவசியம் என்பதினால் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் விரைவில் தேசிய அடையாள அட்டைநகல் (நீலநிறம்), ஆதார் நகல், புகைப்படம் -1.

    மேலும் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் எவரேனும் நேரில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தில் அணுகி பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக் கொண்டுள்ளார்.

    தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #OPS #ADMK

    தேனி:

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேசிய - மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

    தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நேற்று இரவு நிகழ்ச்சி முடிந்ததும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது எதுவும் கூற முடியாது. கூட்டணி குறித்து உடன்பாடு ஏற்பட்டவுடன் அறிவிக்கப்படும். எங்களிடம் பல்வேறு கட்சியினர் கூட்டணி குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் உள்பட கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் திரும்ப வர வேண்டும். இதற்கான ஞானம் அவர்களுக்குத்தான் வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டி.டி.வி. தினகரனை கட்சியில் சேர்த்துக் கொள்வீர்களா? என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் சிரித்துக் கொண்டே பதில் கூறாமல் சென்று விட்டார்.

    முன்னதாக தேனியில் நடந்த அரசு விழாவில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    தமிழகத்தில் 14 லட்சம் குடிசை வீடுகள் உள்ளன. தற்போது 6 லட்சம் வீடுகளை கட்டிடங்களாக மாற்றும் பணி நடந்து வருகிறது. தேனி மாவடடத்தில் 4 ஆயிரம் குடிசை வீடுகள் ஒரு வருடத்தில் கான்கிரீட் கட்டிடங்களாக மாற்றித்தரப்படும்.

    ஒவ்வொரு வீட்டின் மதிப்பும் ரூ.11 லட்சம் ஆகும். பயனாளி மற்றும் மத்திய அரசின் பங்கு தலா ரூ.1.50 லட்சம் தமிழக அரசு சார்பில் ரூ.8 லட்சம் வழங்கப்படும். நீண்ட நாட்கள் பயனளிக்கும் வகையில் தமிழகத்தில் பெண்கள் ஒவ்வொருவருக்கும் நலத்திட்ட உதவிகளை மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவாக்கினார். அதே வழியில் தற்போது அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே பெண்கள் ஆதரவு எப்போதும் தமிழக அரசுக்கு உண்டு.

    இவ்வாறு அவர் பேசினார். #OPS #ADMK

    ×