நேரு நர்சிங் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து வாரவிழா

பள்ளியில் பயிலும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு உடல் எடை, உயரம், கண் பரிசோதனை, பல் பரிசோதனை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை மேற்கொள்ளப்பட்டன. அதன்பின் மாணவர்களுக்குஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும் மற்றும் பழங்கள், காய்கறிகள் உண்பதன் பயன்கள் ஆகியவற்றையும் பொம்மலாட்டம் நிகழ்ச்சியின் மூலம் விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
விழாவில் ஒரு மாணவருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்ட காட்சி.
விழாவில் ஒரு மாணவருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்ட காட்சி.
Published on

வள்ளியூர்:

தேசிய ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு நேரு நர்ஸ்சிங் கல்லூரியின் சார்பாக கோட்டையடி கிராமம் அருள்யா நடுநிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நேரு நர்சிங் கல்லூரியின் முதுகலை மற்றும் இளங்கலை மாணவிகள் பங்கு கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளியில் பயிலும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு உடல் எடை, உயரம், கண் பரிசோதனை, பல் பரிசோதனை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.

அதன்பின் மாணவர்களுக்குஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும் மற்றும் பழங்கள், காய்கறிகள் உண்பதன் பயன்கள் ஆகியவற்றையும் பொம்மலாட்டம் நிகழ்ச்சியின் மூலம் விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

மேலும், இந்நிகழ்ச்சியை சிறப்புடன் நடத்த கல்லூரி முதுகலை பேராசிரியை சுபி ஊக்கமளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com