search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
    X

    தேசிய பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

    • தேசிய பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தமிழக அரசால் 2022-ம் ஆண்டிற்கு வழங்கப்படும்

    பெரம்பலூர்

    தமிழக அரசால் 2022-ம் ஆண்டிற்கு வழங்கப்படும் தேசிய பெண் குழந்தைகள் விருதிற்கு தமிழகத்தை பிறப்பிடமாக கொண்ட 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய வீர தீர செயல் மற்றும் சாதனைகள் புரிந்த கீழ்க்காணும் தகுதிகளுடைய பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் தகுதிகளையுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். உரிய விவரங்களுடன் வருகிற 30-ந்தேதி மாலை 5.30 மணிக்குள் பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் வளாகம் என்ற முகவரியை அணுகி தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்திடுமாறு மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கேட்டுக் கொண்டுள்ளார்

    Next Story
    ×