என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "cockroach"
- 3 பேரையும் அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
- சம்மந்தப்பட்ட ஓட்டல் மேலாளர் மற்றும் அதன் இயக்குனர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மேரி உழவர்கரை சிவசக்தி நகரை சேர்ந்த சமூக சேவகர் ஐ.ஜி.வீரராகு. இவரது மனைவி பிரபாதேவி (36). இவர், பா.ஜனதா பிரமுகரான இவர் சம்பவத்தன்று இரவு 10.30 மணியளவில் முத்தியால்பேட்டை தொகுதியில் தேர்தல் பணியை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் இவரும் உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்த பிரியா (40), பூமியான்பேட்டை ஜவகர் நகரை சேர்ந்த கோமதி (44) ஆகியோரும் புதுவை 100-அடி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டனர்.
அப்போது சிக்கன் பிரியாணியில் இறந்துபோன கரப்பான் பூச்சி கிடந்தது. இதனால் 3 பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
இதுபற்றி அவர்கள். ஓட்டல் மேனேஜர் மற்றும் அதன் இயக்குனருக்கு புகார் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து உடனடியாக பிரபாதேவியின் சகோதரர் பிரகாஷ் அங்கு விரைந்து சென்று 3 பேரையும் காரில் ஏற்றிக் கொண்டு மூலகுளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
அங்கு 3 பேரையும் அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பிரபாதேவி பின்னர் இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரில் பாதுகாப்பாற்ற முறையில் தயார் செய்து, கரப்பான் பூச்சி போன்ற பூச்சிகளால் உடலுக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தே, தரமற்ற பிரியாணியை வழங்கி வாந்தி பேதி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகளை ஏற்படுத்திய சம்மந்தப்பட்ட ஓட்டல் மேலாளர் மற்றும் அதன் இயக்குனர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிலிப்பைன்சில் வருகிற 13-ந் தேதி பொது தேர்தல் நடக்க இருக்கிறது. இதையொட்டி தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிபர் ரோட்ரிகோ துதர்தே நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், போஹால் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த பிரசார கூட்டத்தில் அதிபர் ரோட்ரிகோ துதர்தே கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் எதிர்க்கட்சிகள் குறித்து ஆவேசமாக பேசிக்கொண்டிருந்த போது, கரப்பான் பூச்சி ஒன்று அவரது வலது தோள்பட்டையின் மீது வந்து அமர்ந்தது.
இதனை பார்த்ததும், அதிபரின் பெண் உதவியாளர், தன் கையில் வைத்திருந்த காகிதத்தால் கரப்பான் பூச்சியை விரட்ட முயன்றார். ஆனால் அது, அதிபரின் தோள்பட்டையில் மேலும், கீழுமாக ஓடி ஆட்டம் காட்டியது.
இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து ரோட்ரிகோ துதர்தே, தனது கையால் கரப்பான் பூச்சியை தட்டிவிட்டுவிட்டு, ‘இது எதிர்கட்சியின் சதி’ என நகைச்சுவையாக கூறி, பேச்சை தொடர்ந்தார். இதனால் அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்