search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rodrigo Duterte"

    பிலிப்பைன்ஸ் அதிபரின் பிரசார கூட்டத்தில் இடையூறு ஏற்படுத்திய கரப்பான் பூச்சியால் அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது. #PhilippinePresident #Cockroach
    மணிலா:

    பிலிப்பைன்சில் வருகிற 13-ந் தேதி பொது தேர்தல் நடக்க இருக்கிறது. இதையொட்டி தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிபர் ரோட்ரிகோ துதர்தே நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில், போஹால் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த பிரசார கூட்டத்தில் அதிபர் ரோட்ரிகோ துதர்தே கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் எதிர்க்கட்சிகள் குறித்து ஆவேசமாக பேசிக்கொண்டிருந்த போது, கரப்பான் பூச்சி ஒன்று அவரது வலது தோள்பட்டையின் மீது வந்து அமர்ந்தது.

    இதனை பார்த்ததும், அதிபரின் பெண் உதவியாளர், தன் கையில் வைத்திருந்த காகிதத்தால் கரப்பான் பூச்சியை விரட்ட முயன்றார். ஆனால் அது, அதிபரின் தோள்பட்டையில் மேலும், கீழுமாக ஓடி ஆட்டம் காட்டியது.

    இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து ரோட்ரிகோ துதர்தே, தனது கையால் கரப்பான் பூச்சியை தட்டிவிட்டுவிட்டு, ‘இது எதிர்கட்சியின் சதி’ என நகைச்சுவையாக கூறி, பேச்சை தொடர்ந்தார். இதனால் அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது.
    பெண்கள் அழகாக இருப்பதால் தான் கற்பழிப்பு சம்பவம் அதிகமாக நடக்கிறது என பிலிப்பைன்ஸ் அதிபரான ரோட்ரிகோ டியூட்ரெட் பேச்சு சர்ச்சையானது. #RodrigoDuterte #Philippines
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் அதிபராக ரோட்ரிகோ டியூட்ரெட் பதவி வகிக்கிறார். போதை மருந்து கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொண்டார். அதன் விளைவாக ஆயிரக்கணக்கானோர் சுட்டு கொல்லப்பட்டனர்.

    இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி இவர் பொது மேடைகளில் பேசும் பேச்சுகளும் பிரச்சினைக்குரியதாக மாறிவிடுகிறது. கடந்த ஆண்டு சிறுமிகள் கற்பழிப்பு குறித்து பேச்சு சர்ச்சைக்குரியதானது.

    அதுபோன்று தற்போதும் இதுபோன்ற சிக்கலில் அவர் மாட்டிக்கொண்டார். இவர் தனது சொந்த ஊரான தவாயோவில் நடந்த விழாவுக்கு சென்று இருந்தார். இதற்கு முன்பு இங்கு இவர் மேயராக பதவி வகித்தார்.

    அந்த விழாவில் பேசும் போது, ‘‘போலீஸ் அறிக்கையின்படி தவாயோ நகரில் பல கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இங்கு பல அழகிய பெண்கள் உள்ளனர். அதனால் தான் இங்கு அதிக அளவில் கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. முதலில் பெண்கள் சம்மதிக்க மாட்டார்கள். வேண்டாம் என்பார்கள், மறுப்பு தெரிவிப்பார்கள். அதனால் தான் கற்பழிப்பு சம்பவம் நடக்கிறது என்று பலமாக சிரித்தபடி ‘ஜோக்’ அடித்தார்.



    இது விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது. அதிபர் டியூட்ரெட்டின் இப்பேச்சுக்கு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    செய்தி தொடர்பாளர் இதற்கு விளக்கம் அளித்துள்ளனர். அதிபர் அடித்த இந்த ‘ஜோக்’ கை இவ்வளவு பெரிதுபடுத்துவது ஏன் என்று தெரியவில்லை. இதன்மூலம் கற்பழிப்பு குறித்த ஜோக்குகளை பெண்கள் விரும்பவில்லை என தெரிகிறது என்றார். #RodrigoDuterte #Philippines
    ×