search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rape case"

    • பலாத்கார வழக்கில் நடவடிக்கை எடுக்க தவறியதால் நடவடிக்கை
    • டி.ஐ.ஜி. உத்தரவு

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 52). விவசாயி. இவரது மனைவி சிவகாமி. தம்பதியினருக்கு 2 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர்.

    மாணிக்கம் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை மாணிக்கம் புத்துகோவில் அருகே உள்ள பெத்த கல்லுப்பள்ளி ரெயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணிக்கத்தின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மாணிக்கம் மற்றும் அவரது நண்பர் கோவிந்தன்(85) ஆகியோர் சேர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து கடந்த 4-ந் தேதி வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார்.

    போலீஸ் விசாரணைக்கு பயந்து அவர் ரெயில் முன்பு பாய்ந்தது தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து தகவல் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. இதை தொடர்ந்து வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆகியோர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.

    அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தவறிய அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தியை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டனர்.

    மேலும் இந்த வழக்கை விசாரிக்க நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் வழக்கில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் (85) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கார்த்திகாயினியை சமரச பேச்சுவார்த்தைக்கு வருமாறு ரமேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.
    • வழக்குப்பதிவு செய்த போலீசார் ரமேசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திருச்சி:

    திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகேயுள்ள வடக்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). இவர் ராமநாபுரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதற்கிடையே இவர் வரன் தேடி திருமண தகவல் மையத்தில் தனது பெயர், விபரங்களுடன் பதிவு செய்து வைத்திருந்தார்.

    இந்நிலையில் அந்த தகவல் மையம் மூலம் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த கார்த்திகாயினி (36) என்பவர் பேராசிரியர் ரமேசுக்கு அறிமுகமானார். தொடர்ந்து செல்போன் எண்களை பகிர்ந்து கொண்ட இருவரும் மனம் விட்டு பேசியுள்ளனர். திருமணம் செய்துகொள்ளவும் முடிவெடுத்து இருந்ததாக கூறப்படுகிறது. அதனை காரணமாக கொண்டு ரமேஷ், கார்த்திகாயினி இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

    இதற்கிடையே அவர்களுக்குள் திடீரென்று மனக்கசப்பு ஏற்பட்டு கருத்து வேறுபாடு உருவானது. ஒருவருக்கொருவர் வசை பாடிக்கொண்டதோடு கார்த்திகாயினி சென்னையில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் பேராசிரியர் ரமேஷ் தன்னை கற்பழித்துவிட்டதாகவும், தாக்கியதாகவும் கூறியிருந்தார். அந்த வழக்கில் பேராசிரியர் ரமேஷ் தற்போது ஜாமீனில் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் கார்த்திகாயினியை சமரச பேச்சுவார்த்தைக்கு வருமாறு ரமேஷ் அழைப்பு விடுத்துள்ளார். அதனை ஏற்றுக்கொண்ட அவரும், தனது உறவினர்கள் சிலருடன் திருவெறும்பூர் காட்டூருக்கு வந்துள்ளார். அப்போது மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் பேராசிரியர் ரமேஷ் தன்னை தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக திருவெறும்பூர் போலீசில் கார்த்திகாயினி புகார் அளித்தார்.

    அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரமேசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கற்பழிப்பு வழக்கில் ஜாமீனில் இருந்த அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீண்டும் கைதாகி இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த சுபாஷ் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார்.
    • தனிப்படை போலீசார் சுபாசை கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    சேலம்:

    கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 38). இவரும் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்தனர். இந்நிலையில் அந்த மாணவி கடந்த 2008-ம் ஆண்டு மேல் படிப்பிற்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார்.

    சுபாசும் காதலை தொடர்வதற்காக அங்கு வந்து தங்கி உள்ளார். அப்போது காதலர்கள் இருவரும் நெருங்கி பழகி உள்ளனர். இந்த நிலையில் சுபாஷ் ஆசைவார்த்தை கூறி அந்த மாணவியை கற்பழித்தார். இதனால் மாணவி கடந்த 2008-ம் ஆண்டு கர்ப்பம் அடைந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் அளித்தனர்.

    இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஆட்டையாம்பட்டி போலீ சார் சுபாசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த சுபாஷ் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து கடந்து 2013-ம் ஆண்டு சேலம் கோர்ட்டு சுபாஷிற்கு பிடிவாரண்டு பிறப்பித்தது.

    பின்னர் தனிப்படை போலீசார் சுபாசை கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் கேரளாவில் பதுங்கி இருந்த சுபாசை நேற்று போலீசார் கைது செய்தனர்.

    • 7 வயது சிறுமி பலாத்கார வழக்கில் கோர்ட்டு உத்தரவு
    • இழப்பீடு வழங்க பரிந்துரை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட் டம் ஆரணியை அடுத்த மேல் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிபாலன். இவரது நண்பர் கள் பாலாஜி, கார்த்திக்.இதில் பாலாஜி என்பவர் மேல்நகர் பகுதியில் கோழி இறைச்சி கடை வைத்து நடத்தி வந்தார்.

    7 வயது சிறுமி பலாத்காரம்

    கடந்த 2013-ம் ஆண்டு அக் டோபர் மாதம் இவர்கள் 3 பேரும் சேர்ந்து 7 வயது மதிக் கத்தக்க 3-ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்று கோழி இறைச்சி கடையில் வைத்து கூட்டு பலாத்காரத் தில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து பாதிக்கப் பட்ட சிறுமி அவரது பெற் றோரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதைய டுத்து சிறுமியின் பெற்றோர் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண் ணாமலை மாவட்ட ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத் தில் அமைந்துள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடை பெற்று வந்தது.

    தலா 20 ஆண்டு சிறை

    இந்த 3 பேர்களில் சமீபத் தில் மணிபாலன் சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார். இந்த நிலையில் வழக்கு விசா ரணை தொடர்பாக அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார்.

    இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசா ரித்து வந்த நீதிபதி பார்த்தசா ரதி தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை கடத்தி பலாத்கா ரம் செய்த பாலாஜி (வயது 36) மற்றும் கார்த்திக் (32) ஆகியோருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ.2ஆயி ரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க நீதி பதி பரிந்துரை செய்தார்.

    கற்பழிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ஒடிசா மந்திரி பிரதீப் மஹாரதி ராஜினாமா செய்யக்கோரி காங்கிரஸ், பா.ஜ.க. போராட்டத்தில் ஈடுபட்டனர். #Congress #BJP #PradeepMaharathy
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற பிப்லி கூட்டு கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் கோர்ட்டு அளித்த தீர்ப்பு குறித்து அந்தமாநில வேளாண்மைத் துறை மந்திரி பிரதீப் மஹாரதி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து இருந்தார். இதனை கண்டித்து மந்திரி பிரதீப் பதவி விலகக்கோரி நேற்று காங்கிரஸ் மகளிர் அணியினர் துடைப்பத்துடன் அவரது வீட்டை முற்றுகையிட்டனர். தக்காளி, முட்டை ஆகியவற்றையும் மந்திரி வீட்டின் மீது வீசினர். இதுதொடர்பாக 40 பேரை போலீசார் கைது செய்தனர்.



    பா.ஜனதா மகளிர் அணியினரும் 24 மணி நேரத்தில் மந்திரி பிரதீப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதல்-மந்திரிக்கு இறுதி கெடு விதித்தனர். மந்திரியை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியும் நடத்தினார்கள். 24 மணி நேரத்தில் அவர் ராஜினாமா செய்யவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். #Congress #BJP #PradeepMaharathy
    கன்னியாஸ்திரி பாலியல் புகாரில் சிக்கிய பிராங்கோ முல்லக்கலை போலீசார் இன்று கொச்சியில் கைது செய்துள்ளனர். #KeralaNun #FrancoMulakkal
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பி‌ஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.

    கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்ததால் கோட்டயம் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு பிராங்கோ முல்லக்கல் நேரில் ஆஜரானார்.



    வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பிராங்கோ கூறியதாக தகவல்கள் வெளியானது. 

    பாலியல் புகாரில் சிக்கியது தொடர்பாக பிராங்கோ முல்லக்கல் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை நேற்று அறிவித்தது. 

    இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் பிராங்கோ முல்லக்கலிடம்  போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் அவரை கொச்சி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். #KeralaNun #FrancoMulakkal
    பாலியல் புகாரில் சிக்கிய பிராங்கோ முல்லக்கல், பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை இன்று அறிவித்துள்ளது. #KeralaNun #FrancoMulakkal #Vatican
    வாடிகன்:

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பி‌ஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.

    கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்ததால் கோட்டயம் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு பிராங்கோ முல்லக்கல் நேற்று நேரில் ஆஜரானார்.



    வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பிராங்கோ கூறியதாக தகவல்கள் வெளியானது.

    இதற்கிடையே, இன்றும் இரண்டாவது நாளாக பிராங்கோ முல்லக்கலிடம்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கியது தொடர்பாக பிராங்கோ முல்லக்கல் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை இன்று அறிவித்துள்ளது.  #KeralaNun #FrancoMulakkal #Vatican
    பெண்கள் அழகாக இருப்பதால் தான் கற்பழிப்பு சம்பவம் அதிகமாக நடக்கிறது என பிலிப்பைன்ஸ் அதிபரான ரோட்ரிகோ டியூட்ரெட் பேச்சு சர்ச்சையானது. #RodrigoDuterte #Philippines
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் அதிபராக ரோட்ரிகோ டியூட்ரெட் பதவி வகிக்கிறார். போதை மருந்து கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொண்டார். அதன் விளைவாக ஆயிரக்கணக்கானோர் சுட்டு கொல்லப்பட்டனர்.

    இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி இவர் பொது மேடைகளில் பேசும் பேச்சுகளும் பிரச்சினைக்குரியதாக மாறிவிடுகிறது. கடந்த ஆண்டு சிறுமிகள் கற்பழிப்பு குறித்து பேச்சு சர்ச்சைக்குரியதானது.

    அதுபோன்று தற்போதும் இதுபோன்ற சிக்கலில் அவர் மாட்டிக்கொண்டார். இவர் தனது சொந்த ஊரான தவாயோவில் நடந்த விழாவுக்கு சென்று இருந்தார். இதற்கு முன்பு இங்கு இவர் மேயராக பதவி வகித்தார்.

    அந்த விழாவில் பேசும் போது, ‘‘போலீஸ் அறிக்கையின்படி தவாயோ நகரில் பல கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இங்கு பல அழகிய பெண்கள் உள்ளனர். அதனால் தான் இங்கு அதிக அளவில் கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. முதலில் பெண்கள் சம்மதிக்க மாட்டார்கள். வேண்டாம் என்பார்கள், மறுப்பு தெரிவிப்பார்கள். அதனால் தான் கற்பழிப்பு சம்பவம் நடக்கிறது என்று பலமாக சிரித்தபடி ‘ஜோக்’ அடித்தார்.



    இது விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது. அதிபர் டியூட்ரெட்டின் இப்பேச்சுக்கு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    செய்தி தொடர்பாளர் இதற்கு விளக்கம் அளித்துள்ளனர். அதிபர் அடித்த இந்த ‘ஜோக்’ கை இவ்வளவு பெரிதுபடுத்துவது ஏன் என்று தெரியவில்லை. இதன்மூலம் கற்பழிப்பு குறித்த ஜோக்குகளை பெண்கள் விரும்பவில்லை என தெரிகிறது என்றார். #RodrigoDuterte #Philippines
    பாவ மன்னிப்பு கோரிய பெண்ணை பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கேரள அரசு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Kerala #SupremeCourt
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தனது திருமண வாழ்வுக்கு முன்னதாக  நடந்த தவறு குறித்து பாவமன்னிப்பு கேட்பதற்காக சென்ற பெண்ணை வற்புறுத்தி பாதிரியார்கள் சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த பெண்ணின் கணவர் மூலம் வெளிச்சத்துக்கு வந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் பாதிரியார்கள் மீது குற்றவழக்குகள் பதியப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாதிரியாரின் ஜாமீன் மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

    இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக வருகிற ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், ஆகஸ்ட் 6-ம் தேதி வரை குற்றம்சாட்டப்பட்டுள்ள பாதிரியார்கள் ஜார்ஜ் மற்றும் சோனி வர்க்கீஸ் ஆகியோரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. #Kerala #SupremeCourt
    டெல்லி மாணவி நிர்பயா வழக்கின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவரது தந்தை செய்தியாளர்களை சந்தித்தார். #NirbhayaVerdict
    புதுடெல்லி:

    மரண தண்டனையை எதிர்த்து டெல்லி நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்துள்ள சுப்ரீம் கோர்ட் அவர்களின் மரண தண்டனையை இன்று உறுதி செய்துள்ளது.

    இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் வாசலில் நிரூபர்களுக்கு பேட்டியளித்த நிர்பயாவின் தந்தை 'இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் முன்னர் அளித்த தீர்ப்பில் மறு ஆய்வு என்ற பெயரில் கால தாமதம் ஏற்படுத்தப்பட்டது.

    இதனால், பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல் மேலும் அதிகமாகி உள்ளது. தற்போது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு மரண தண்டனையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், காலம் தாழ்த்தாமல், குற்றவாளிகளை விரைவாக தூக்கிலிட வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.



    இதேபோல், சுப்ரீம் கோர்ட்டில் இன்றைய தீர்ப்பை வரவேற்றுள்ள நிர்பயாவின் தாய் ஆஷா தேவி, நீதிமன்றத்தின் மீது நாங்கள் வைத்துள்ள நம்பிக்கை காப்பாற்றப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். நீதி தாமதமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், விரைவாக தூக்கு தண்டனையை நிறைவேற்றி இதர பெண்கள் மற்றும் குழந்தைகளை காக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  #NirbhayaVerdict
    பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் குற்றவாளிகள் பூமிக்கு பாரமானவர்கள் என்றும், வாழ்வதற்கே அருகதையற்றவர்கள் என்றும் மத்திய பிரதேச முதல்மந்திரி தெரிவித்தார். #ShivrajSinghChouhan
    போபால்:

    மத்திய பிரதேச மாநில முதல்மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாண்ட்சவர் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

    பாலியல் வன்கொடுமை வழக்குகளை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களில் ஒரே விதமான தீர்ப்பு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் வன்கொடுமை குற்றவாளிகளுக்கான தண்டனைகள் விரைவில் வழங்கப்படும் எனவும் சவுகான் கூறினார்.



    தொடர்ந்து பேசிய அவர், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரர்கள் வாழ்வதற்கே அருகதையற்றவர்கள் என்றும், பூமிக்கு பாரமாக அவர்கள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

    மேலும், மாண்ட்சவர் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ஆதரவாக தாம் இருப்பதாகவும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிக்கு விரைவில் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் எனவும்  மத்திய பிரதேச முதல்மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறினார். #ShivrajSinghChouhan
    ×