search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 வாலிபர்களுக்கு 20 ஆண்டு ஜெயில்
    X

    2 வாலிபர்களுக்கு 20 ஆண்டு ஜெயில்

    • 7 வயது சிறுமி பலாத்கார வழக்கில் கோர்ட்டு உத்தரவு
    • இழப்பீடு வழங்க பரிந்துரை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட் டம் ஆரணியை அடுத்த மேல் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிபாலன். இவரது நண்பர் கள் பாலாஜி, கார்த்திக்.இதில் பாலாஜி என்பவர் மேல்நகர் பகுதியில் கோழி இறைச்சி கடை வைத்து நடத்தி வந்தார்.

    7 வயது சிறுமி பலாத்காரம்

    கடந்த 2013-ம் ஆண்டு அக் டோபர் மாதம் இவர்கள் 3 பேரும் சேர்ந்து 7 வயது மதிக் கத்தக்க 3-ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்று கோழி இறைச்சி கடையில் வைத்து கூட்டு பலாத்காரத் தில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து பாதிக்கப் பட்ட சிறுமி அவரது பெற் றோரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதைய டுத்து சிறுமியின் பெற்றோர் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண் ணாமலை மாவட்ட ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத் தில் அமைந்துள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடை பெற்று வந்தது.

    தலா 20 ஆண்டு சிறை

    இந்த 3 பேர்களில் சமீபத் தில் மணிபாலன் சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார். இந்த நிலையில் வழக்கு விசா ரணை தொடர்பாக அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார்.

    இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசா ரித்து வந்த நீதிபதி பார்த்தசா ரதி தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை கடத்தி பலாத்கா ரம் செய்த பாலாஜி (வயது 36) மற்றும் கார்த்திக் (32) ஆகியோருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ.2ஆயி ரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க நீதி பதி பரிந்துரை செய்தார்.

    Next Story
    ×