search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seasonal changes"

    பனிப்பொழிவு, பருவ நிலை மாற்றம் காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சென்னையில் அதிகரித்துள்ளது. #Fever
    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவியது. இதில் பலர் பாதிக்கப்பட்டனர்.

    காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டனர். ஊருக்கு ஊர் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    இதனால் காய்ச்சல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    தெருவுக்கு தெரு கிளினிக்கில் தினமும் காலை, மாலை நேரங்களில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதில் சிலருக்கு மூட்டு வலியுடன் காய்ச்சல் வருவதால் டெங்கு அறிகுறி இருப்பதாக கூறி ரத்த பரிசோதனை செய்து வருகின்றனர்.

    ராயப்பேட்டை, மயிலாப்பூர், மடிப்பாக்கம், பல்லாவரம், கோயம்பேடு, அமைந்தகரை, திருவொற்றியூர் உள்பட பல பகுதிகளில் காய்ச்சலால் ஆஸ்பத்திரிக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    பனிப்பொழிவு, பருவ நிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக காரணம் சொல்லப்படுகிறது.

    ஆனால் அரசு ஆஸ்பத்திரிகளில் விசாரித்ததில் காய்ச்சல் பாதித்தோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவித்தனர். #Fever
    ×