என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Major League Cricket"

    • மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டூ பிளெசிஸ் செயல்பட்டு வருகிறார்.
    • எம் ஐ நியூயார்க் அணிக்கு எதிராக டூ பிளெசிஸ் சதம் விளாசினார்.

    2025 மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - எம்ஐ நியார்க் அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தில் முதல் பேட்டிங் செய்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 223 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டூ பிளெசிஸ் 103 ரன்கள் குவித்தார். இதனையடுத்து களமிறங்கிய எம் ஐ நியூயார்க் அணி 184 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

    இந்நிலையில் இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டூ பிளெசிஸ் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

    அதன்படி டி20 கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக அதிக (8) சதங்கள் அடித்த வீரர் என்ற புதிய மைல்கல்லை டூபிளெசிஸ் எட்டினார். 7 சதங்களுடன் முதலிடத்தில் இருந்த பாபர் அசாம் மற்றும் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளிங்கர் சாதனையை முறியடித்து இவர் அசத்தியுள்ளார்.

    • அமெரிக்காவில் மேஜர் லீக் டி20 கிரிக்கெட்டின் 3வது சீசன் நடந்து வருகிறது.
    • இதன் லீக் போட்டி ஒன்றில் சான் பிரான்சிஸ்கோ அணி வெற்றி பெற்றது.

    ஆக்லாந்து:

    அமெரிக்காவில் மேஜர் லீக் டி20 கிரிக்கெட்டின் 3வது சீசன் நடந்து வருகிறது.

    இதன் லீக் போட்டி ஒன்றில் சான் பிரான்சிஸ்கோ அணியும், வாஷிங்டன் அணியும் மோதின. முதலில் ஆடிய சான் பிராசின்ஸ்கோ அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 269 ரன்கள் குவித்தது.

    அடுத்து ஆடிய வாஷிங்டன் அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் சான் பிரான்சிஸ்கோ அணி 123 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    பேட்டிங்கில் அசத்திய சான் பிரான்சிஸ்கோ அணியின் நியூசிலாந்து வீரர் பின் ஆலன் 51 பந்தில், 19 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 151 ரன் குவித்து வெற்றிக்கு வழி வகுத்தார்.

    இந்நிலையில், டி 20 அரங்கில், ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் வரிசையில் பின் ஆலன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல், எஸ்டோனியாவின் சாஹில் சவுகான் ஆகியோர் தலா 18 சிக்சர் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

    • அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற 12-ந் தேதி தொடங்கி ஜூலை 13 வரை நடைபெற உள்ளது.
    • இந்த தொடரில் ரஷித்கான், ஓமர்சாய், நவீன் உல் ஹக் உள்ளிட்ட ஆப்கன் வீரர்கள் வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    மேஜர் லீக் கிரிக்கெட் 2023-ல் தொடங்கியது. இந்திய பிரீமியர் லீக் (IPL) உடன் தொடர்புடைய பல அணிகள் இந்த தொடரில் முதலீடு செய்துள்ளன. உதாரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகியவை எம்எல்சி தொடரில் தங்களுக்கான அணிகளை வாங்கியுள்ளன.

    அதன்படி சியாட்டில் ஓர்காஸ், மியாமி நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கின்றனர்.

    நடப்பு அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற 12-ந் தேதி தொடங்கி ஜூலை 13 வரை நடைபெற உள்ளது. தொடக்கப் போட்டியில் நடப்பு சாம்பியனான வாஷிங்டன் ஃப்ரீடம், சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்சுடன் மோதுகிறது.

    இந்நிலையில் அமெரிக்காவின் மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் ரஷித், ஓமர்சாய், நவீன் உல் ஹக் உள்ளிட்ட ஆப்கன் வீரர்கள் வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    அது என்னவென்றால் ஆப்கன், பர்மா, காங்கோ, ஈரான் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய அதிபர் ட்ரம்ப் தடை விதித்த நிலையில், இந்த தொடரில் பங்கேற்க முடியாத சூழலில் ஆப்கானிதான் வீரர்கள் உள்ளனர்.

    மேஜர் கிரிக்கெட் லீகை 'மிகப்பெரிய விளையாட்டுத் தொடர்' என வரையறுத்து அவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான அனுமதி பெறுவதற்கு ஆலோசித்து வருவதாக மேஜர் லீக் கிரிக்கெட் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

    • டெக்சாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களே சேர்த்தது.
    • சியாட்டில் ஓர்காஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    டல்லாஸ்:

    மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சியாட்டில் ஓர்காஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டெக்சாஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

    அதன்படி களமிறங்கிய டெக்சாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களே சேர்த்தது. சியாட்டில் அணி தரப்பில் ஆண்ட்ரூ டை 3 விக்கெட், இமாத் வாசிம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 127 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சியாட்டில் ஓர்காஸ் அணி களம் இறங்கியது.

    சியாட்டில் அணியின் தொடக்க ஆட்டக்காரரான டி காக்கின் அதிரடியால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இறுதியில் சியாட்டில் ஓர்காஸ் அணி 15 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 127 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    சியாட்டில் அணி தரப்பில் டி காக் 50 பந்தில் 88 ரன் குவித்தார். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் 2-ம் இடம் பிடித்த டெக்சாஸ் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது. டெக்சாஸ் அணி தனது அடுத்த ஆட்டத்தில் எம்.ஐ நியூயார்க் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

    • மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் முன்னேறியுள்ளது.
    • தனது சிக்சரால் காயமடைந்த ரசிகையை நேரில் சந்தித்து பொல்லார்ட் ஆறுதல் கூறினார்.

    அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்ற இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு வாஷிங்டன் ஃப்ரீடம், சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ஸ், டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், மீதமிருக்கு இடத்திற்கான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்தின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியானது 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி 17 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியானது நடப்பு மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.

    இந்நிலையில் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய நியூயார்க் அணியின் கேப்டன் பொல்லார்ட் சிக்சர்களைப் பறக்கவிட்டு அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த நிலையில், அவர் விளாசிய ஒரு சிக்சரானது மைதானத்தில் இருந்த ரசிகை ஒருவரை காயமடைய செய்தது. இதனையடுத்து மைதானத்தில் இருந்த மருத்துவர்கள் அந்த ரசிகைக்கு முதலுதவி செய்து சிகிச்சை அளித்தனர்.

    இதனையடுத்து போட்டி முடிந்து பொல்லார்ட், தனது சிக்சரால் காயமடைந்த ரசிகையை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேற்கொண்டு அவர் தனது கையொப்பமிட்ட தொப்பியையும் அந்த ரசிகைக்கு பரிசளித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×