என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டிரம்ப் போட்ட தடை: ஆப்கானிஸ்தான் வீரர்கள் விளையாடுவதில் சிக்கல்
- அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற 12-ந் தேதி தொடங்கி ஜூலை 13 வரை நடைபெற உள்ளது.
- இந்த தொடரில் ரஷித்கான், ஓமர்சாய், நவீன் உல் ஹக் உள்ளிட்ட ஆப்கன் வீரர்கள் வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேஜர் லீக் கிரிக்கெட் 2023-ல் தொடங்கியது. இந்திய பிரீமியர் லீக் (IPL) உடன் தொடர்புடைய பல அணிகள் இந்த தொடரில் முதலீடு செய்துள்ளன. உதாரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகியவை எம்எல்சி தொடரில் தங்களுக்கான அணிகளை வாங்கியுள்ளன.
அதன்படி சியாட்டில் ஓர்காஸ், மியாமி நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கின்றனர்.
நடப்பு அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற 12-ந் தேதி தொடங்கி ஜூலை 13 வரை நடைபெற உள்ளது. தொடக்கப் போட்டியில் நடப்பு சாம்பியனான வாஷிங்டன் ஃப்ரீடம், சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்சுடன் மோதுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் ரஷித், ஓமர்சாய், நவீன் உல் ஹக் உள்ளிட்ட ஆப்கன் வீரர்கள் வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அது என்னவென்றால் ஆப்கன், பர்மா, காங்கோ, ஈரான் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய அதிபர் ட்ரம்ப் தடை விதித்த நிலையில், இந்த தொடரில் பங்கேற்க முடியாத சூழலில் ஆப்கானிதான் வீரர்கள் உள்ளனர்.
மேஜர் கிரிக்கெட் லீகை 'மிகப்பெரிய விளையாட்டுத் தொடர்' என வரையறுத்து அவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான அனுமதி பெறுவதற்கு ஆலோசித்து வருவதாக மேஜர் லீக் கிரிக்கெட் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.






