search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coromandel Express"

    • ரெயில் பாலசோரில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியது.
    • பதட்டம் அடைந்த சுஜதன்சாகு மனைவியை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை.

    சென்னை:

    ஒடிசா மாநிலம் பாலசோரை சேர்ந்தவர் சுஜதன் சாகு. இவர் சென்னை காட்டுப்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.

    இவரது மனைவி சந்தியா ராணி சாகு, மகன்கள் சுகந்து சாகு (11), சுப்ராந்து சாகு (3) ஆகியோருடன் நேற்று முன்தினம் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாலசோரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு உள்ளார். இந்த ரெயில் பாலசோரில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியது.

    இதனால் பதட்டம் அடைந்த சுஜதன்சாகு மனைவியை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை. அவர்களது கதி என்ன என்று தெரியாமல் சென்னையில் அவர் தவித்து கொண்டிருக்கிறார்.

    • ஒரு சில தமிழர்களுடன் இணைந்து அருகே உள்ள சாலையில் சென்ற பஸ் மூலம் புவனேஷ்வர் சென்று அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தோம்.
    • நான் எப்படி உள்ளேன் என்பதை தொடர்ந்து ரெயில்வே மற்றும் தமிழக அதிகாரிகள் கேட்டுக் கொண்டு இருந்தனர்.

    பூந்தமல்லி கீழ்மாநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் அமெரிக்காவில் என்ஜினீயராக பணியாற்றினார்.

    தற்போது விசா சம்மந்தமாக கொல்கத்தா சென்றார். பின்னர் பணி முடித்து வீடு திரும்பிய அவர் ஒடிசாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் விரைவு ரெயிலில் வந்தார். இந்த ரெயில் விபத்தில் முருகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து நடந்தது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் இருந்த எஸ்2 பெட்டியில் 250க்கும் மேற்பட்டோர் பயணித்தோம். மாலை 3.30 மணிக்கு கொல்கத்தாவில் ரெயில் புறப்பட்டது. இரவு 7 மணிக்கு மேல் திடீரென பயங்கர சத்தம் கேட்டது. பெட்டிகள் சரிய தொடங்கியது. 10 வினாடியில் அனைத்தும் முடிந்து ஒய்ந்தது. அனைவரும் அலறி அடித்து அங்கும், இங்கும் பதறி ஓடினர். நான் இருந்த பெட்டியில் வெளியேற வழியில்லாததால் ஜன்னல் வழியாக அனைவரும் வெளியே வந்தோம். நான் இருந்த பெட்டியில் பலருக்கு காயம் ஏற்பட்டது.

    ஜன்னல் கம்பியை பிடித்ததால் காயம் ஏதுமின்றி நான் உயிர் தப்பினேன். பின்னர் வெளியே வந்தோம். அனைத்தும் இருட்டாக இருந்தது எத்தனை ரெயில் விபத்துக்குள்ளானது என்பது கூட தெரியவில்லை. பலர் உடல் சிதறி உயிர் இழந்து இருந்தனர்.

    பின்னர் அங்கு தமிழர்கள் யாராவது இருக்கிறார்களா என பார்த்தேன். பின்னர் அங்கிருந்த ஒரு சில தமிழர்களுடன் இணைந்து அருகே உள்ள சாலையில் சென்ற பஸ் மூலம் புவனேஷ்வர் சென்று அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தோம்.

    பின்னர் அங்கிருந்து மீண்டும் பஸ் மூலம் சென்னை வந்து சேர்ந்தேன். நான் எப்படி உள்ளேன் என்பதை தொடர்ந்து ரெயில்வே மற்றும் தமிழக அதிகாரிகள் கேட்டுக் கொண்டு இருந்தனர் என்றார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் ரெயில்வே துறையின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்துள்ளது.
    • உடனடியாக ரெயில்வே துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சந்திப்புக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திரியும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம், மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    பின்னர் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் ரெயில்வே துறையின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்துள்ளது. ரெயில்வேயில் புதிய நியமனங்கள் செய்யப்படாமல் ஊழியர்கள் பற்றாக்குறையால் டெக்னிக்கல், பைலட் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகளிலும் ஊழியர்கள் பணி செய்யும் நேரம் அதிகரித்துள்ளது.

    எனவே உடனடியாக ரெயில்வே துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் புல்லட் ரெயில் விட நினைக்கும் மத்திய அரசு முதலில் ரெயில்வே துறையில் ரெயில்களின் வேகம் அதிகரிப்புக்கு தகுந்தவாறு கட்டுமானங்களையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி இந்திய ரெயில்வேயின் தரத்தை உயர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×