search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெட்டி உருண்டபோது ஜன்னல் கம்பியை பிடித்து உயிர் தப்பினேன்- பூந்தமல்லி என்ஜினீயர் அதிர்ச்சி பேட்டி
    X

    பெட்டி உருண்டபோது ஜன்னல் கம்பியை பிடித்து உயிர் தப்பினேன்- பூந்தமல்லி என்ஜினீயர் அதிர்ச்சி பேட்டி

    • ஒரு சில தமிழர்களுடன் இணைந்து அருகே உள்ள சாலையில் சென்ற பஸ் மூலம் புவனேஷ்வர் சென்று அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தோம்.
    • நான் எப்படி உள்ளேன் என்பதை தொடர்ந்து ரெயில்வே மற்றும் தமிழக அதிகாரிகள் கேட்டுக் கொண்டு இருந்தனர்.

    பூந்தமல்லி கீழ்மாநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் அமெரிக்காவில் என்ஜினீயராக பணியாற்றினார்.

    தற்போது விசா சம்மந்தமாக கொல்கத்தா சென்றார். பின்னர் பணி முடித்து வீடு திரும்பிய அவர் ஒடிசாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் விரைவு ரெயிலில் வந்தார். இந்த ரெயில் விபத்தில் முருகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து நடந்தது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் இருந்த எஸ்2 பெட்டியில் 250க்கும் மேற்பட்டோர் பயணித்தோம். மாலை 3.30 மணிக்கு கொல்கத்தாவில் ரெயில் புறப்பட்டது. இரவு 7 மணிக்கு மேல் திடீரென பயங்கர சத்தம் கேட்டது. பெட்டிகள் சரிய தொடங்கியது. 10 வினாடியில் அனைத்தும் முடிந்து ஒய்ந்தது. அனைவரும் அலறி அடித்து அங்கும், இங்கும் பதறி ஓடினர். நான் இருந்த பெட்டியில் வெளியேற வழியில்லாததால் ஜன்னல் வழியாக அனைவரும் வெளியே வந்தோம். நான் இருந்த பெட்டியில் பலருக்கு காயம் ஏற்பட்டது.

    ஜன்னல் கம்பியை பிடித்ததால் காயம் ஏதுமின்றி நான் உயிர் தப்பினேன். பின்னர் வெளியே வந்தோம். அனைத்தும் இருட்டாக இருந்தது எத்தனை ரெயில் விபத்துக்குள்ளானது என்பது கூட தெரியவில்லை. பலர் உடல் சிதறி உயிர் இழந்து இருந்தனர்.

    பின்னர் அங்கு தமிழர்கள் யாராவது இருக்கிறார்களா என பார்த்தேன். பின்னர் அங்கிருந்த ஒரு சில தமிழர்களுடன் இணைந்து அருகே உள்ள சாலையில் சென்ற பஸ் மூலம் புவனேஷ்வர் சென்று அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தோம்.

    பின்னர் அங்கிருந்து மீண்டும் பஸ் மூலம் சென்னை வந்து சேர்ந்தேன். நான் எப்படி உள்ளேன் என்பதை தொடர்ந்து ரெயில்வே மற்றும் தமிழக அதிகாரிகள் கேட்டுக் கொண்டு இருந்தனர் என்றார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×