search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "iPad"

    • காப்புரிமையில் தற்போது இருக்கும் ஐபேட் மாடல், வடிவம் மாறும் ஷெல் கொண்டிருக்கிறது.
    • இரு சாதனங்கள் ஷெல் அருகில் இருக்கும் போது, அவை ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும்.

    ஆப்பிள் நிறுவனம் தனது எதிர்கால சாதனங்களுக்காக ஏராளமான காப்புரிமை மற்றும் டிரேட்மார்க்-களை பெற்று வருகிறது. அந்த வரிசையில், தற்போது பெற்றிருக்கும் புதிய காப்புரிமை பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி ஆப்பிள் நிறுவனம் 2-இன்-1 டிசைன் கொண்ட ஐபேட் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    அமெரிக்க டிரேட்மார்க் மற்றும் காப்புரிமை அலுவலகம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் இதுவரை 53 காப்புரிமைகளை பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி புதிய காப்புரிமையில் தற்போது இருக்கும் ஐபேட் மாடல், வடிவம் மாறும் ஷெல் கொண்டிருக்கிறது. இதனுடன் வெளியாகி இருக்கும் புகைப்படத்தின் படி ஐபேட் மேல்புறம் உறுதியாக இணைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

     

    இதன் மூலம் பயனர்கள் ஐபேட்-ஐ எளிதில் கழற்ற முடியும். இதில் உள்ள ஷெல் பல்வேறு வழிகளில் ஸ்டான்ட் போன்று பயன்படுத்த வழி செய்கிறது. காப்புரிமை விவரங்களின் படி இந்த ஐபேட் ஷெல் அசெம்ப்லி வைபை, ப்ளூடூத் மற்றும் அல்ட்ரா வைடுபேன்ட் உள்ளிட்டவைகளை சப்போர்ட் செய்கிறது. இரு சாதனங்கள் ஷெல் அருகில் இருக்கும் போது, அவை ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும்.

    இதுதவிர, ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் இதர ஐபேட் டிசைன் பற்றிய தகவல்களும் வெளியாகி உள்ளன. அதன்படி புதிய ஐபேட் டிசைன்களில், விர்ச்சுவல் கீபோர்டு மற்றும் ஜெஸ்ட்யூர் டிடெக்ஷன் சப்போர்ட் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. ஐபேட் டிசைன் பற்றிய காப்புரிமை விவரங்கள், ஆப்பிள் நிறுவனம் தொடர்ச்சியாக புதுமைகளை புகுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவது உறுதியாகி இருக்கிறது. 

    • சலுகையின் கீழ் மேக் அல்லது ஐபேட் சாதனங்களை மாணவர்கள் சிறப்பு விலையில் வாங்கிடலாம்.
    • மேக்புக், ஐபேட் மற்றும் மேக் மினி போன்ற சாதனங்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    ஆப்பிள் நிறுவனம் இந்திய மாணவர்கள், ஆசிரியர்களுக்கு விசேஷ சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து இருக்கிறது. இவை பேக் டு யுனிவர்சிட்டி (Back to University) திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை சேர்ந்தவர்கள் ஆப்பிள் சாதனங்களான ஐபேட் மற்றும் மேக் சாதனங்களை தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வாங்கிட முடியும்.

    நேற்று (ஜூன் 22) துவங்கிய சிறப்பு சலுகைகள் வழங்கும் பேக் டு யுனிவர்சிட்டி திட்டம் அக்டோபர் 02-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் கீழ் மேக் அல்லது ஐபேட் சாதனங்களை பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்பு விலையில் வாங்கிட முடியும். தேர்வு செய்யப்பட்ட மேக் சாதனங்களை வாங்கும் போது ஏர்பாட்ஸ், ஐபேட் வாங்கும் போது ஆப்பிள் பென்சில் உள்ளிட்டவைகளை பெற முடியும்.

    ஆப்பிள் கேர் பிளஸ் சேவையின் கீழ் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கல்வி சலுகையின் கீழ் உள்ள சாதனங்கள் அனைத்திற்கும் விசேஷ விலையில் வாங்கிடலாம். ஆப்பிள் மியூசிக் மற்றும் ஆப்பிள் டிவி பிளஸ் சேவையை முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாகவும், அதன் பிறகு மாதம் ரூ. 59 விலையிலும் வாங்கிடலாம்.

    மேக்புக் ஏர், மேக்புக் ப்ரோ, ஐமேக் 24 இன்ச், மேக் மினி, ஐபேட் ப்ரோ 11 இன்ச், ஐபேட் ஏர் 5th Gen உள்ளிட்ட சாதனங்களை இந்த சலுகையில் வாங்கிட முடியும். மேக்புக் வாங்குவோருக்கு ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள ஏர்பாட்ஸ் Gen 2 மாடல் வழங்கப்படுகிறது.

    ஐபேட் ஏர் / ஐபேட் ப்ரோ மாடல் வாங்கும்போது ஆப்பிள் பென்சில் 2nd Gen இலவசமாக வழங்கப்படுகிறது. ஆப்பிள் அறிவித்து இருக்கும் புதிய சலுகைகள் ஆப்பிள் பிகேசி, சகெட் மற்றும் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் வழங்கப்படுகிறது.

    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் மாடல்கள் உற்பத்தி சீனா மற்றும் ஆசிய நாடுகளில் அதிகளவு நடைபெற்று வருகின்றன.
    • ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தியை சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மாற்றும் பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

    சாதனங்களை உற்பத்தி செய்ய சீனாவை சார்ந்து இருப்பதை படிப்படியாக குறைத்துக் கொள்ளும் பணிகளில் ஆப்பிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஐபோன் மாடல்கள் உற்பத்தியை பெருமளவு இந்தியாவுக்கு மாற்றி இருக்கிறது. இந்த நிலையில், ஐபோன்களை போன்றே ஐபேட் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. எனினும், இவ்வாறு செய்து முடிக்க ஏராளமான தடைகளை ஆப்பிள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இதில் மிக முக்கியமானது ஐபேட் மாடல்களை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்ப திறன்களை தயார்படுத்துவதும் ஆகும். அந்த வகையில், இதனை சாத்தியப்படுத்துவது பற்றி இதுவரை இறுதியான முடிவு எட்டப்படவில்லை.

    தனது சாதனங்கள் உற்பத்தியை சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மாற்றுவதில் ஆப்பிள் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் உற்பத்தியை மேற்கொள்வதற்கான இடையூறுகளை சரி செய்த பின் ஐபேட் உற்பத்தி இங்கு துவங்கும் என்றும் கூறப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 2017 முதல் தனது சாதனங்களின் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக இந்தியாவில் பழைய ஐபோன் மாடல்களின் உற்பத்தி நடைபெற்று வந்தது. பின் மெல்ல உற்பத்தி பணிகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வந்தது. அந்த வரிசையில், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 14 மாடல்கள் தற்போது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    • ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஐபேட் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • சமீபத்தில் தான் ஆப்பிள் புதிய ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் மாடல்களை அறிமுகம் செய்து இருந்தது.

    ஆப்பிள் நிறுவனம் 16 இன்ச் அளவில் பெரிய ஐபேட் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புது ஐபேட் மாடல் அடுத்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகாகும் என தெரிகிறது. இது தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடலை விட அளவில் பெரியதாக இருக்கும். புதிய டேப்லெட் மாடல் ஐபேட் மற்றும் மேக்புக் மாடல்களிடையே நிலைநிறுத்தப்படும்.

    சமீபத்தில் தான் ஐபேட் (10th Gen), M2 பிராசஸர் கொண்ட ஐபேட் ப்ரோ மாடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்து இருந்தது. புதிய ஐபேட் மாடல் அடுத்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய தகவல்களின் படி 16 இன்ச் ஐபேட் மாடல் அறிமுகமாகும் பட்சத்தில் ஆப்பிள் இதுவரை உற்பத்தி செய்ததில் பெரிய டேப்லெட் மாடலாக இது அமையும். கிராபிக் டிசைனர்கள் மற்றும் கலைஞர்களுக்கு பயனுள்ள சாதனமாக 16 இன்ச் ஐபேட் இருக்கும்.

    புதிய 16 இன்ச் ஐபேட் மாடலை ஆப்பிள் எவ்வாறு தனது சாதனங்களுடன் நிலைநிறுத்தும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. புதிய மாடல் ஐபேட் ப்ரோ என்று அழைக்கப்படுமா அல்லது ஐபேட் என்றே அழைக்கப்படுமா என்பதும் மர்மமாகவே இருக்கிறது. ஆப்பிள் உருவாக்கும் பெரிய ஐபேட் மாடல் டேப்லெட் மற்றும் லேப்டாப் மாடல்கள் இடையே உள்ள இடைவெளியை மேலும் சிறியதாக்கும்.

    • ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய ஐபேட் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்த டேப்லெட் மாடல் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்று ஏ14 பயோனிக் பிராசஸர் கொண்டிருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ மாடலுடன் புதிய ஐபேட் மாடலையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஐபேட் மாடல் 10.9 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே, ஏ14 பயோனிக் பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் மேம்பட்ட 12MP அல்ட்ரா வைடு செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    யுஎஸ்பி சி போர்ட் கொண்டிருக்கும் புது ஐபேட் மாடல் வைபை 6 கனெக்டிவிட்டி, 5ஜி செல்லுலார் வசதி உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது. ஐபேட் ஒஎஸ் 16 கொண்டிருக்கும் புதிய ஐபேட் மாடலுடன் ஆப்பிள் பென்சில் முதல் தலைமுறை மாடலுக்கான சப்ரோர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஐபேட் (10th Gen) அம்சங்கள்

    10.9 இன்ச் 2360x1640 பிக்சல் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே

    ஏ14 பயோனிக் பிராசஸர்

    64 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி

    ஐபேட் ஒஎஸ் 16

    12MP பிரைமரி கேமரா

    12MP செல்பி கேமரா

    டூயல் மைக்ரோபோன்

    5ஜி (ஆப்ஷன்), வைபை 6, ப்ளூடூத் 5.2

    டச் ஐடி

    28.6 வாட் லித்தியம் அயன் பேட்டரி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய ஐபேட் மாடல் புளூ, பின்க், சில்வர் மற்றும் எல்லோ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை அக்டோபர் 26 ஆம் தேதி துவங்க இருக்கிறது. புதிய ஐபேட் மாடல் விலை ரூ. 44 ஆயிரத்து 900 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 74 ஆயிரத்து 900 ஆகும்.

    • ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் மாடலை ஸ்மார்ட் டிஸ்ப்ளே போன்று பயன்படுத்த புது வசதியை வழங்க இருக்கிறது.
    • அடுத்த ஆண்டு இதற்கான வசதி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் ஐபேட் சாதனத்திற்கான டாக் ஒன்றை உருவாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை கொண்டு ஐபேட் மாடலை ஸ்மார்ட் டிஸ்ப்ளே போன்றும் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. ஐபேட் மாடலுக்கான டாக் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. முன்னதாக ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

    இத்துடன் ஆப்பிள் நிறுவனம் டேப்லெட்-ஐ ஸ்பீக்கர் ஹப் உடன் இணைக்க செய்யும் அம்சத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமேசான் நிறுவனம் தனது ஃபயர் டேப்லெட் மாடல்களில் இதே போன்ற அம்சத்தை ஏற்கனவே வழங்கி வருகிறது. இந்த சாதனம் பயனர்கள் டேப்லெட்-ஐ சார்ஜ் செய்ய டாக் செய்து அதனை ஸ்மார்ட் டிஸ்ப்ளே போன்று பயன்படுத்த வழி செய்கிறது.

    கூகுள் நிறுவனம் சமீபத்தில் தான் தனது பிக்சல் டேப்லெட்-க்கு டாக்-ஐ அறிமுகம் செய்யப் போவதாக அறிவித்தது. இது காந்த வசதி கொண்ட சார்ஜிங் ஸ்டேஷன் மற்றும் ஸ்பீக்கர் போன்று செயல்படும். டேப்லெட் டாக்-இன் மீது வைத்தால் அதனை ஸ்மார்ட் டிஸ்ப்ளே போன்று பயன்படுத்தலாம். இதில் கூகுள் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை வாய்ஸ் மூலம் இயக்க முடியும்.

    கடந்த ஆண்டு வெளியான தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் டிவி மற்றும் ஸ்மார்ட் ஸ்பீக்கர் சாதனத்தை அறிமுகம் செய்வதாக கூறப்பட்டது. இதில் பில்ட்-இன் கேமரா வழங்கப்பட இருப்பதாகவும், இந்த சாதனம் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    • ஆப்பிள் நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் ஐபேட் மாடல் உற்பத்தி துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • இந்த ஐபேட் மாடல் ரிடிசைன் செய்யப்பட்டு குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறை ஐபோன் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே நிகழ்வில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடல்களும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்து அக்டோபர் மாத வாக்கில் முற்றிலும் புதிய ஐபேட் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    புது ஐபேட் மாடல்களுடன் ஆப்பிள் நிறுவனம் பத்தாவது தலைமுறை எண்ட்ரி லெவல் ஐபேட் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஐபேட் மாடல் குறிப்பிடத்தக்க டிசைன் மாற்றங்களை கொண்டிருக்கும். 10-ஆம் தலைமுறை ஐபேட் மாடல் உற்பத்தி துவங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஐபேட் மாடல் ஆப்பிள் ஏ14 சிப்செட் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.


    இந்த டேப்லெட் மாடல் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், இது அளவில் 10.5 இன்ச், மிக மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் பேக் பேனலில் கேமரா பம்ப், ஹோம் பட்டன் மற்றும் டச் ஐடி உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தற்போது விற்பனை செய்யப்படும் 9-ம் தலைமுறை ஐபேட் மாடலில் 10.2 இன்ச் டிஸ்ப்ளே, ஏ13 பயோனிக் சிப், 12MP பிரைமரி கேமரா, ஆப்பிள் பென்சில் சப்போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது. இந்த டேப்லெட் ஸ்பேஸ் கிரே மற்றும் சில்வர் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    • A13 பயோனிக் சிப்பை விட A14 சிப் 30 சதவீதம் கூடுதலாக செயல்திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    • 2022 ஐபேடு, லைட்னிங் போர்ட்டுக்குப் பதிலாக யுஎஸ்பி டைப் சி போர்ட்டைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    ஆப்பிளின் எண்ட்ரி லெவல் ஐபேடுகள் அந்நிறுவனத்தின் மிகவும் பிரபலமான டேப்லெட் ஆகும். புதிய மலிவு விலை ஐபேடுகள் A13 பயோனிக் சிப், டீசண்டான முன்பக்க கேமரா மற்றும் பலவற்றுடன் வருகின்றன. ஆனால் அதன் அடுத்த தலைமுறை ஐபேடுகள் இன்னும் சிறப்பானதாக இருக்கும் என கூறப்படுகின்றன. ஏனெனில் ஆப்பிள் நிறுவனம் தற்போது குறைந்த விலை நுழைவு-நிலை ஐபேடுகளை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

    ஆப்பிள் அதன் எண்ட்ரி லெவல் ஐபேடுக்கு பல மேம்படுத்தல்களைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. குறிப்பாக மற்ற ஐபேடு சீரிஸ்களை விட அதிக வேகத்தைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. J272 என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட 2022 ஐபேடு, லைட்னிங் போர்ட்டுக்குப் பதிலாக யுஎஸ்பி டைப் சி போர்ட்டைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.


    புதிய எண்ட்ரி லெவல் ஐபாட், ஐபாட் ஏர் போன்ற அதே தெளிவுத்திறனுடன் கூடிய ரெடினா டிஸ்ப்ளே கொண்டிருக்கும். ஆனால் இது தற்போதைய மாடலின் 10.2-இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவைவிட 10.5-இன்ச் அல்லது 10.9-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போதைய ஐபேட் மாடல்களில் பயன்படுத்தப்பட்டு வரும் A13 பயோனிக் சிப்பை விட A14 சிப் 30 சதவீதம் கூடுதலாக செயல்திறன் கொண்டிருக்குமாம். செல்லுலார் மாடல்களுக்கு 5ஜி நெட்வொர்க் திறன்களை ஆப்பிள் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ் உற்பத்தி குறித்த புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13 உற்பத்திக்கு தேவையான உபகரணங்களை ஒதுக்க ஐபேட் உற்பத்தியை நிறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் ஆப்பிள் மேற்கொண்ட திட்டத்தில் தற்போது 50 சதவீத ஐபேட் யூனிட்களே உற்பத்தி செய்யப்படுகின்றன.

    ஆசிய சந்தைகளில் உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டது, ஆண்டின் இரண்டாம் பாதியில் அதிக தட்டுப்பாடு போன்ற சூழ்நிலைகளிலும், மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஐபோன் 13 உற்பத்தி சீராக நடைபெற்று வந்தது. உற்பத்தி நிறுவனங்களுடன் நீண்ட கால ஒப்பந்தம் மற்றும் அதிக யூனிட்களை வாங்கும் திறன் உள்ளிட்ட காரணங்களால் இது சாத்தியமானது.

     ஐபோன் 13

    வரும் மாதங்களில் ஐபேட் மாடல்களை விட ஐபோன் 13 மாடலுக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என ஆப்பிள் எதிர்பார்க்கிறது. இதன் காரணமாகவே ஐபோன் 13 உற்பத்தியில் ஆப்பிள் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதுகுறித்து ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டிற்குள் இரண்டு புதிய ஐபேட் மாடல்களை இருவித அளவுகளில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #iPad



    ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல்களை இருவித வேரியண்ட்களில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவை 10.2 இன்ச் மற்றும் 10.5 இன்ச் என இருவித அளவுகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    புதிய 10.2 இன்ச் ஐபேட் தற்சமயம் விற்பனை செய்யப்படும் 9.7 இன்ச் மாடலுக்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர புதிய ஐபேட் ஆப்பிள் நிறுவனத்தின் ஏழாவது தலைமுறை மாடலாக என்றும் கூறப்படுகிறது. இத்துடன் ஆப்பிள் நிறுவனம் 10.5 இன்ச் அளவில் மற்றொரு ஐபேட் மாடலையும் அறிமுகம் செய்ய இருப்பதாக ததகவல் வெளியாகியுள்ளது.



    இருவித அளவுகளில் உருவாகி வருவதாக கூறப்படும் புதிய ஐபேட்கள் தனித்தனியே அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. எனினும், ஸ்கிரீன் அளவுகளை தவிர புதிய ஐபேட்களை ஆப்பிள் எவ்வாறு வித்தியாசப்படுத்தும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. 

    முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிளின் ஏழாம் தலைமுறை ஐபேட்களில் டச் ஐ.டி. மற்றும் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. டச் ஐ.டி. வழங்கப்படுவதால், ஆப்பிள் தனது ஐபேட் மாடலில் ஃபேஸ் ஐ.டி. அம்சத்தை வழங்காது என உறுதியாகியிருக்கிறது.

    ஏற்கனவே வெளியான தகவல்களில் புதிய ஐபேட் அளவுகள் பற்றி எவ்வத விவரமும் வெளியாகவில்லை. இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலத்திற்குள் ஆப்பிள் இரண்டு ஐபேட் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய புதிய ஐபேட் மினி மற்றும் 9.7 இன்ச் ஐபேட் சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #ipadmini5 #Apple



    ஆப்பிள் நிறுவனம் ஐந்தாம் தலைமுறை ஐபேட் மினி சாதனத்தை அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டு என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல்கள் இருவித வெர்ஷன்களில் அறிமுகமாகலாம் என தெரிகிறது.

    ஐபேட்களின் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கில், ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஐபேட் மினி 5 சாதனத்தை அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இதற்கென அதிகளவு ஐபேட் மினி சாதனங்களின் உற்பத்தி டிசம்பர் மாத இறுதியில் துவங்கும் என கூறப்படுதிறது.



    ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 2015 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை தனது சிறிய ஐபேட் மாடலை அறிமுகம் செய்யவில்லை. ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ அக்டோபர் மாதத்தில் வெளியிட்டிருந்த தகவல்களில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஐபேட் மினி, குறைந்த விலை டிஸ்ப்ளே பேனலுடன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவித்திருந்தார்.
     
    ஆறாம் தலைமுறை 9.7 இன்ச் ஐபேட் மாடலுக்கு மாற்றாக ஆப்பிள் புதிய என்ட்ரி லெவல் ஐபேட் மாடலை அறிமுகம் செய்யலாம். இந்த ஐபேட் மாடலில் 10-இன்ச் டிஸ்ப்ளே மெல்லிய ஃபிரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் ஐபேட் சாதனங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், இரு விலை குறைந்த ஐபேட் மாடல்களை அடுத்த ஆண்டு வெளியிடலாம்.

    அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின்படி ஆப்பிள் நிறுவனம் இரண்டு ஐபேட்களின் உற்பத்தி கட்டணத்தை குறைக்கும் நோக்கில் அந்நிறுவனம் கொரியாவில் தயாரிக்கப்படும் எல்.இ.டி. டிஸ்ப்ளேக்களை புதிய சாதனங்களில் வழங்கலாம் என கூறப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் க்ரூப் ஃபேஸ்டைம் அம்சத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.
    ஆப்பிள் நிறுவனம் ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதள வெர்ஷன் செப்டம்பர் மாதம் முதல் பீட்டா பதிப்பில் உருவாக்கப்பட்டு, சமீபத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.

    புதிய ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதளத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சமான க்ரூப் ஃபேஸ்டைம் புதிய இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் நடைபெற்ற ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் நிறுவனம் க்ரூப் ஃபேஸ்டைம் அம்சத்தை பல வாடிக்கையாளர்கள் விரும்பி கேட்டிருந்ததாக அறிவித்தது.

    ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதளத்தை அப்டேட் செய்த ஐ.ஓ.எஸ். பயனர்கள் அதிகபட்சம் 32 பேருடன் ஒரே சமயத்தில் ஃபேஸ்டைம் மூலம் பேச முடியும். இந்த அம்சத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.



    1 -  ஃபேஸ்டைம் ஆப் சென்று வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் ADD பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

    2 - மேல்புறம் இருக்கும் ஆப்ஷனில் நீங்கள் சாட் செய்ய வேண்டியவர்களின் பெயர் அல்லது நம்பர்களை பதிவு செய்ய வேண்டும்.

    3 - இங்கு Add Contact ஆப்ஷனை கிளிக் செய்தும் கான்ட்க்ட் ஆப் மூலம் நீங்கள் சாட் செய்ய வேண்டியவர்களை தேர்வு செய்யலாம்.

    4 - வீடியோ ஆப்ஷனை கிளிக் செய்து வீடியோ கால் அல்லது ஆடியோ ஐகானை கிளிக் செய்து ஃபேஸ்டைம் ஆடியோ கால் மேற்கொள்ள முடியும்.



    க்ரூப் மெசேஜஸ் உரையாடல்களில் இருந்தும் க்ரூப் ஃபேஸ்டைம் கால் துவங்கலாம். மெசஞ்சரில் சாட் செய்யும் நபருடன் அப்படியே கால் செய்து பேச முடியும்.

    1 - சாட் ஸ்கிரீனில் ப்ரோஃபைல் புகைப்படம் அல்லது மை அக்கவுன்ட் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இந்த ஆப்ஷன் உரையாடல்களின் மேல்பக்கம் இடம்பெற்றிருக்கும்.

    2 - ஃபேஸ்டைம் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    க்ரூப் ஃபேஸ்டைம் கால் செய்யும் போது பயனர்கள் இடையே மற்றொரு நபரையும் சேர்க்க முடியும். இதை செய்ய:

    1 - ஸ்கிரீனினை கிளிக் செய்து Moreஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    2 - இனி Add Person ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    3 - அடுத்து நீங்கள் சேர்க்க வேண்டிய நபரின் பெயர், ஆப்பிள் ஐ.டி. அல்லது போன் நம்பர் போன்றவற்றில் ஒன்றை பதிவிட வேண்டும்.

    4 - அல்லது Add பட்டன் கிளிக் செய்து மற்றவர்களை கான்டாக்ட்களில் இருந்தும் தேர்வு செய்யலாம்.

    5 - இறுதியில் ஃபேஸ்டைமில் அந்த நபரை சேர்க்கலாம்.

    க்ரூப் ஃபேஸ்டைம் மேற்கொள்ளும் போது யாரேனும் உங்களுக்கு அழைப்பு விடுத்தால், உங்களுக்கு சைலன்ட் நோட்டிஃபிகேஷன் அல்லது மெசேஜ் வரும். கால் ஆக்டிவாக இருக்கும் போது நோட்டிஃபிகேஷனை கிளிக் செய்து எப்போது வேண்டுமானாலும் உரையாடலில் இணைந்து கொள்ளலாம்.

    குறிப்பு:

    ஆப்பிள் ஐ.ஓ.எஸ். 12.1 குறிப்பில் க்ரூப் ஃபேஸ்டைம் வீடியோ கால்கள் ஐபோன் 5எஸ், ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ், ஐபேட் ஏர், ஐபேட் மினி 2, ஐபேட் மினி 3, ஐபேட் மினி 4 மற்றும் 6ம் தலைமுறை ஐபாட் டச் உள்ளிட்ட சாதனங்களில் மட்டுமே வேலை செய்யும் என தெரிவித்திருக்கிறது.
    ×