search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள்- எம்.எல்.ஏ. உறுதி
    X

    அரசு பள்ளியில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார்.

    அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள்- எம்.எல்.ஏ. உறுதி

    • போதிய வகுப்பறை வசதிகளின்றி மாணவர்கள் மிகவும் சிரமம்.
    • விரைவில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சகடமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மேலப்போலகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சேஷமூலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கொட்டாரக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது,

    பழுதடைந்த பள்ளிக் கட்டடங்கள் அரசாணையின் அடிப்படையில் இடிக்கப்ப ட்டுவிட்ட நிலையில், போதிய வகுப்பறை வசதி இன்றி மாணவர்கள் மிகுந்த சிரமங்களுடன் படித்து வருகின்றனர்.

    தற்காலிக கூடாரங்களிலும் தனியார் கட்டடங்களிலும் தற்போது பல பள்ளிகள் இயங்கி வருகின்றன.

    எனவே, விரைவில் இந்தப் பள்ளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதற்கு அரசு ஒதுக்கியுள்ள சிறப்பு நிதியின் மூலம் விரைவில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்படும் என்று உறுதியளித்தார்.

    ஆய்வின் போது, தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்வ.செங்கு ட்டுவன், வி.சி.க. ஒன்றிய செயலாளர் கு.சக்திவேல் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×