search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
    X

    அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

    • பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்
    • கேக் வெட்டி ஒன்றாக மதிய உணவு அருந்தினர்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 30 ஆண்டுகளுக்கு பின் இன்று ஒன்று கூடி கட்டித்தழுவி ஆரவாரம் செய்து பிரிந்தனர்.

    அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் 1992-94-ம் கல்வியாண்டில் படித்த 52 மாணவர்கள் ஒன்று கூட முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று காலை முதல் ஒவ்வொரு நண்பர்களும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் படித்த அரக்கோணம் அரசு ஆண்கள் வந்தனர்.

    52 பேரில் சுமார் 45 பேர் பள்ளியில் ஒன்று கூடி தங்களது பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மதியம் பள்ளி நண்பர்கள் சேர்ந்து கேக் வெட்டி ஒன்றாக மதிய உணவு அருந்தினர்.

    தங்கள் படித்த பள்ளிக்கு நினைவாக மைக்செட்களை தற்போதைய பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கி குழுவாக புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    Next Story
    ×