search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
    X

    அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

    அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

    • அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1999 மற்றும் 2000 -ம் ஆண்டில் 9 மற்றும் 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை நினைவு கூர்ந்து, அப்போது நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1999 மற்றும் 2000 -ம் ஆண்டில் 9 மற்றும் 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் விஜய் கணேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்று தங்களின் பள்ளி பருவ நாட்களையும், ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை நினைவு கூர்ந்து, அப்போது நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.

    தொடர்ந்து, பள்ளிக்கு தேவையான உதவிகள் என்னென்ன என்பது குறித்தும், அதனை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முடிவில் முன்னாள் மாணவர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.

    Next Story
    ×