என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விருதுநகரில் கேஸ் சிலிண்டர் கசிவால் தீ விபத்து- குடிசைகள் வீடுகள் எரிந்து சேதம்
    X

    விருதுநகரில் கேஸ் சிலிண்டர் கசிவால் தீ விபத்து- குடிசைகள் வீடுகள் எரிந்து சேதம்

    • தீ மளமளவென அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியதால் 20-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயின.
    • தீ விபத்து ஏற்பட்ட உடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    விருதுநகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பல் சாம்பலாயின.

    விருதுநகர் மாவட்டம் மேலத்தெரு பேட்டையில் இன்று அதிகாலையில் ராஜா என்பவரது வீட்டில் கேஸ் சிலிண்டர் கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த தீ மளமளவென அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியதால் 20-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயின.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

    தீ விபத்து ஏற்பட்ட உடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பல் சாம்பலாயின. தீ விபத்தில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் இழந்து விட்டதாக பெண்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

    Next Story
    ×