என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மக்கள் விரும்பும் கூட்டணியை தே.மு.தி.க. தேர்ந்தெடுக்கும் - பிரேமலதா விஜயகாந்த்
    X

    மக்கள் விரும்பும் கூட்டணியை தே.மு.தி.க. தேர்ந்தெடுக்கும் - பிரேமலதா விஜயகாந்த்

    • தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் காட்டிய வழியில் தொடர்ந்து மக்களுக்காக பாடுபடுவேன்.
    • மக்களுக்கு செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் தே.மு.தி.க. நிச்சயமாக செய்து கொடுக்கும்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி எனும் கேப்டன் ரத யாத்திரை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    பிரசாரத்தில் விஜய பிரபாகரன் பேசுகையில், கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு நம் கையை விட்டு சென்றாலும், வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் நிச்சயமாக தே.மு.தி.க. வெற்றி பெரும் என்றார்.

    அவரைத் தொடர்ந்து பிரேமலதா பேசியதாவது:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் காட்டிய வழியில் தொடர்ந்து மக்களுக்காக பாடுபடுவேன். அவர் தொடங்கிய அன்னதானத் திட்டத்தை தற்பொழுது வரை கேப்டனின் கோவிலில் தினமும் நடைபெற்று வருகிறது. கடந்த 2024 பாராளுமன்றத் தேர்தலில் விருதுநகர் மாவட்ட மக்களின் சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் தான் வெற்றி பெற்றார். ஆனால் அறிவிக்கப்பட்டது வேறொருவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தே.மு.தி.க. மாநாட்டில் கூடிய தொண்டர்கள் மூலம் நமது வெற்றி நிச்சயிக்கப்பட்டு விட்டது.

    கேப்டன் விஜயகாந்த் விட்டுச்சென்ற பணியை இதுவரை அண்ணியாக இருந்து செயல்படுத்தி வந்த நான், இனிமேல் அம்மாவாக மக்களின் குறைதீர்க்க பாடுபடுவேன். மக்கள் விரும்பும் கூட்டணியையே தே.மு.தி.க. கையில் எடுக்கும் என்றும் தே.மு.தி.க. இணையும் கூட்டணியை நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும். அப்பொழுது மக்களுக்கு செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் தே.மு.தி.க. நிச்சயமாக செய்து கொடுக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×