என் மலர்
நீங்கள் தேடியது "November"
- தமிழ்நாட்டில் நவம்பர் மாதத்திற்கான இயல்பான மழைப்பொழிவு 181.77 மிமீ ஆகும்.
- சென்னையில் நவம்பர் மாதத்திற்கான இயல்பான மழைப்பொழிவு 373.6 மிமீ ஆகும்.
தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரைகளுக்கு இணையாக கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்து வரும் டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் அதிகனமழையை கொடுத்த டிட்வா புயல், டெல்டா பகுதிகளில் கனமழை கொடுத்தது. அதே சமயம் இப்புயலால் சென்னையில் கனமழை எதுவும் பெய்யவில்லை.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நவம்பர் மாதத்திற்கான மழைப்பொழிவு இயல்பை விட குறைவாக பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழ்நாட்டில் நவம்பர் மாத மழைப்பொழிவு இயல்பை விட மிகக் குறைவாகவே பதிவாகியுள்ளது, அதே நேரத்தில் சென்னையில் நவம்பர் மாத மழைப்பொழிவு கடந்த 25 ஆண்டுகளில் 5வது மோசமான நவம்பர் மாதமாக முடிவடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் நவம்பர் மாதத்திற்கான இயல்பான மழைப்பொழிவு 181.77 மிமீ என்றிருக்கும் நிலையில் இந்தாண்டு 149.2 மிமீ மட்டுமே மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
சென்னையில் நவம்பர் மாதத்திற்கான இயல்பான மழைப்பொழிவு 373.6 மிமீ என்றிருக்கும் நிலையில் இந்தாண்டு 104.77 மிமீ மட்மே மழைப்பொழிவு பதிவாகியுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
- திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வெளியிடப்படுகிறது.
- டிசம்பர் 8-ந் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
திருப்பூர் :
இந்தாண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் மாதம் 9-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் இது வெளியிடப்படுகிறது. டிசம்பர் 8-ந்தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந்தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது :- திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பில் வாக்காளர்கள் ஆர்வம் அதிகரித்து வருகிறது. போலி வாக்காளர்களை இதன் மூலம் களைய முடியும். தங்கள் ஓட்டுரிமையை வேறு யாரும் முறைகேடாக பயன்படுத்த முடியாமல் செய்வதற்கும் இது உதவும்.வெளி மாவட்டம், வெளிமாநில தொழிலாளர் நிறைந்த திருப்பூரில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு மூலம் நிச்சயமாகஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன என்றனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் நடந்த ஒரு விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

இதுதொடர்பாக சமூகநலத்துறை அமைச்சருடன் நாளை (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதைத்தொடர்ந்து தமிழக அங்கன்வாடிகளில் படிக்கும் 1 லட்சம் மாணவ-மாணவிகள் அடுத்த ஆண்டு அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் சேர்ப்பதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan






