என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீர் மழை
    X

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீர் மழை

    • சென்னையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டு வந்தது.
    • பல்லாவரம், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, பம்மல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டு வந்தது.

    இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்தது. குறிப்பாக பல்லாவரம், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, பம்மல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    குமரிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் வரும் 5-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுதினம் கனமழைக்கு வாயப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×