என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

வீடுகளை சூழ்ந்த வெள்ளம்.
வெள்ளகோவிலில் வெளுத்து கட்டிய மழை - வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிப்பு

- மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து மழை பெய்ததால் மழை நீர் சாலையில் ஓடியது.
- இரவு 8 மணி முதல் நடுஇரவு 1 மணி வரை மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் பகுதியில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இதை குளிர்விக்கும் வகையில் நேற்று இரவு 3 மணி நேரம் தொடர்ந்து இடி மின்னலுடன் கனமழை பெய்தது.நேற்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து மழை பெய்ததால் மழை நீர் சாலையில் ஓடியது. இத னால் கல்லாங்காட்டுவலசு, குமா ரவலசு, உப்புபா ளையம் ரோடு குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.உப்புப்பா ளையம் ரோட்டில் வீட்டிற்குள் மழை நீர் புகுந்தது.வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததால் பாதுகாப்பிற்காக ஒரு சில குடும்பத்தினர் இரவோடு இரவாக மேடான பகுதியில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர்.மழைநீர் வீட்டிற்குள் சென்றதால் வீட்டிற்குள் இருந்த கழிவறையில் நீர் புகுந்து சுகாதாரக் கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.கனமழையின் காரணமாக சேனாபதிபாளையம் கிராமம் சக்திபாளையத்தில் உள்ள நல்லசாமி என்பவருக்கு சொந்தமான பசு மாடு ஒன்று இடி தாக்கி இறந்தது. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும். தீத்தாம்பாளையத்தில் வேப்ப மரம் விழுந்தன. இதனால் அப்பகுதியில் இருந்த 4 மின்கம்பங்கள் சாய்ந்தன.
சேரன் நகரில் இடி தாக்கி டிரான்ஸ்பார்மர் பழுதடைந்தன. இதனால் நேற்று இரவு 8 மணி முதல் நடுஇரவு 1 மணி வரை மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. மின் வாரிய ஊழியர்களால் டிரான்ஸ்பார்மர் சரி செய்யப்பட்டு மீண்டும் வினியோகம் செய்யப்பட்டது.நேற்று வெள்ளகோவில் பகுதியில் 76 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
