search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எந்த அரசுப் பேருந்தும் நிறுத்தப்படவில்லை - அமைச்சர் சிவசங்கர் பதிலடி
    X

    அமைச்சர் சிவசங்கர்

    எந்த அரசுப் பேருந்தும் நிறுத்தப்படவில்லை - அமைச்சர் சிவசங்கர் பதிலடி

    • அரசுப் பேருந்துகள் எதுவும் நிறுத்தப்படவில்லை என போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்தார்.
    • கட்டணமில்லா பயண திட்டம் பெண்களிடம் பெரும் ஆதரவை முதல்வருக்கு பெற்றுத் தந்துள்ளது என்றார்.

    சென்னை:

    பெண்களுக்கு இலவச பயணம் என அறிவித்து விட்டு பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

    இந்நிலையில், எந்த அரசு பேருந்தும் நிறுத்தப்படவில்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், தி.மு.க. ஆட்சி அமைந்தபின் தமிழகத்தில் எந்த அரசு பேருந்தும் நிறுத்தப்படவில்லை.

    கட்டணமில்லா பயண திட்டம் பெண்களிடம் பெரும் ஆதரவை முதல்வருக்கு பெற்றுத் தந்துள்ளது.

    கட்டணமில்லா பயண திட்டத்தில் இதுவரை 277.13 கோடி பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர்.

    கடந்த 5 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு ஓட்டுநர், நடத்துநர் கூட பணிக்கு எடுக்கவில்லை. அவர்களின் ஆட்சியில் நடைபெற்ற தவறை மறைக்க எடப்பாடி பழனிசாமி பொய் அறிக்கையினை வெளியிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×