என் மலர்
நீங்கள் தேடியது "Omni buses"
- கேரள மாநில போக்குவரத்துத்துறை ஆம்னி பேருந்துகளை சிறைப்பிடித்தது.
- அண்டை மாநிலங்கள் சாலை வரி விதிப்போம் எனக் கூறுவதால் நடவடிக்கை.
தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்பட்டு வந்த ஆம்னி பேருந்துகளில் சுமார் 30 பேருந்துகளை கேரள மாநில போக்குவரத்துத்துறை சிறைப்பிடித்து 70 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இதனால் கேரளாவிற்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்து சங்கங்கள் தெரிவித்தன.
தமிழ்நாட்டில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி விதிப்போம் என கேரள மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களும் சாலை வரி விதிப்போம் என கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் இன்று மாலை முதல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்துகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்து சேவைகள் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்திருந்த நிலையில், தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று பிற்பகல் பேருந்து உரிமையாளர் சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
- கேரள மாநில போக்குவரத்துத்துறை ஆம்னி பேருந்துகளை சிறைப்பிடித்தது.
- அண்டை மாநிலங்கள் சாலை வரி விதிப்போம் எனக் கூறுவதால் நடவடிக்கை.
தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்பட்டு வந்த ஆம்னி பேருந்துகளில் சுமார் 30 பேருந்துகளை கேரள மாநில போக்குவரத்துத்துறை சிறைப்பிடித்து 70 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இதனால் கேரளாவிற்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்து சங்கங்கள் தெரிவித்தன.
தமிழ்நாட்டில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி விதிப்போம் என கேரள மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களும் சாலை வரி விதிப்போம் என கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் நாளை மாலை முதல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்துகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
- கேரள மாநில வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
- கேரள அரசின் உயர்அதிகாரிகளுடன் கலந்துபேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.
கோவை:
தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு நேற்று புறப்பட்டு சென்ற சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களை அந்த மாநில போக்குவரத்து அதிகாரிகள் திடீரென சிறைபிடித்ததுடன், அந்த பஸ்களில் இருந்த பயணிகளை பாதி வழியில் இறக்கி விட்டனர். மேலும் பல்வேறு காரணங்களை கூறி அந்த பஸ்களுக்கு ரூ.70 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
கேரள அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அபராத தொகையை ரத்து செய்ய கோரியும் தமிழகத்தில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு செல்வதற்காக சுமார் 30 ஆம்னி பஸ்கள் இன்று காலை வாளையாறு சோதனைச்சாவடிக்கு வந்தன.
பின்னர் அந்த பஸ்களின் டிரைவர்கள் வாகனத்தில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி விட்டு வாளையாறு சோதனைச்சாவடி முன்பாக திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பஸ்களில் வந்திருந்த பயணிகள் குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் நடுரோட்டில் தவிக்க நேரிட்டது.
இதற்கிடையே வாளையாறு சோதனை சாவடி முன்பாக ஆம்னி பஸ் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் கேரள அரசின் அதிகப்படியான வரிவிதிப்பை கண்டித்தும், ஆம்னி பஸ்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து கேரள மாநில வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அப்போது மேற்கண்ட விவகாரம் தொடர்பாக கேரள அரசின் உயர்அதிகாரிகளுடன் கலந்துபேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.
பின்னர் ஆம்னி பஸ் டிரைவர்கள் போராட்டத்தை கைவிட்டு பயணிகளை மீண்டும் ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு புறப்பட்டு சென்றனர்.
வாளையாறு சோதனைச்சாவடியில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களின் போராட்டத்தால், அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்கப் போவதில்லை என ஆம்னி பேருந்து சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
- தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் சிறைபிடித்து ரூ.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் சிறைபிடித்து ரூ.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் இருந்து கேரளா நோக்கி பயணிகளுடன் சென்ற ஆம்னி பேருந்துகள் தமிழக - கேரள எல்லையான வாளையார் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டன.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்கப் போவதில்லை என ஆம்னி பேருந்து சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
தமிழக-கேரள அதிகாரிகள் பேசி பொதுப் போக்குவரத்து பிரச்சனைக்கு முடிவெடுக்க ஆம்னி பேருந்து சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆம்னி பேருந்து இயக்கப்படாததால் ஓட்டுநர்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கேரளாவிற்குள் சென்றால் தங்களது பேருந்து பறிமுதல் செய்யப்படலாம் என அச்சம் காரணமாக ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. கேரள போக்குவரத்து துறையால் லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்படுவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கடந்த ஆண்டில் தனியார் பஸ்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டது.
- தற்போது ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக தகவல் வந்துள்ளது.
கடலூர்:
கடலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பொதுமக்கள் செல்வதற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு 4 நாட்களும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் கூடுதலாக இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு மீண்டும் 3 நாட்கள் சென்னை மற்றும் பெருநகருக்கு செல்வதற்கு மற்றும் வருவதற்கும் கூடுதல் பஸ் வசதிகள் செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டில் தனியார் பஸ்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் தனியார் பஸ்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட உள்ளது. இதன் மூலமாக அந்தந்த மாவட்டங்களில் இயங்குகின்ற பஸ்கள் கிராமப்புறம் செல்வதற்கும், குறைபாடுகள் இல்லாமல் இயக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளபட்டு உள்ளது.
தற்போது ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக தகவல் வந்துள்ளது. அவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புதிய பஸ்கள் வாங்கி வருகின்றனர். அவர் அவர்கள் தனியாக ஆன்லைன் விண்ணப்பம் கொண்டு வந்துள்ளனர்.
ஏற்கனவே தனியார் ஆம்னி பஸ் சங்கத்தினர் கடந்த 2 ஆண்டுகளாக ஒத்துழைப்பு வழங்குவது போல் இந்தாண்டும் ஒத்துழைப்பு வழங்குகிறோம் என சங்க நிர்வாகிகள் உறுதி அளித்துள்ளனர்.
புதிதாக வருகிறவர்கள் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்து உள்ளோம். இது தொடர்பாக குழு அமைத்து தீவிர விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொள்ளப்படும். எந்த நிறுவனம் ஈடுபட்டாலும் நேரடியாக தகவல் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராதம், மாதந்தோறும் வாகனங்கள் நிறுத்தி வைக்கக்கூடிய நிலை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் காலாவதியான வாகனங்கள் இயக்க முடியாது. ஒரு சில பஸ் உரிமையாளர்கள் விழா நாட்களில் மட்டும் ஒரு சில பஸ்கள் இயக்க நேரிடுகிறது. இதனையும் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்பாடு விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- ஆம்னி பஸ்களுக்கு டிக்கெட் வழங்கும் அலுவலகங்கள் மெயின் பஜாரிலேயே அமைந்துள்ளன.
- ஆம்னி பஸ்கள் நின்று செல்ல நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிறுத்தத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
ஆறுமுகநேரி:
திருச்செந்தூர், உடன்குடி ஆகிய பகுதிகளில் இருந்து ஆறுமுகநேரி வழியாக சென்னை, கோவை, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு தினசரி ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன. அதன்படி மாலையில் தொடங்கி இரவு 9 மணி வரையில் 40-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் ஆறுமுகநேரி மெயின்பஜார் வழியாக செல்கின்றன.
ஆம்னிபஸ்
இவற்றிற்காக டிக்கெட் வழங்கும் தனியார் அலுவலகங்கள் மெயின் பஜாரிலேயே அமைந்துள்ளன. இதனால் பயணிகளை ஏற்றி செல்வதற்காக ஆம்னி பஸ்கள் மெயின் பஜாரில் வழி நெடுக அடுத்தடுத்து நிற்கின்ற நிலை உள்ளது. குறுகிய சாலை என்பதாலும் போக்குவரத்து மிகுந்த நேரம் என்பதாலும் அங்கு போக்கு வரத்து நெரிசல் அதிகரிக்கும் நிலைமைக்கு ஆம்னி பஸ்கள் காரணமாகி விடுகின்றன. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாத நிலையே இருந்து வந்தது. இதனிடையே ஆறுமுகநேரி பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே நீண்ட காலமாக மற்றொரு தீரா பிரச்சனையாக இருந்து வந்த ஒரு ஏக்கர் பரப்பளவு குப்பை கிடங்கு ரூ. 1.40 கோடி செலவில் அகற்றப்பட்டு தற்போது புதிய நிலப்பரப்பாக காட்சி யளிக்கிறது. ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோரின் தீவிர ஆலோ சனைக்கு பிறகு பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே ஆம்னி பஸ்கள் நின்று செல்வதற்கான நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிறுத்தத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பேரூராட்சி மன்றத்தில் தீர்மா னமும் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் ஆம்னி பஸ் நிறுத்தத்திற்கான இடத்தை நெல்லை மண்டல பேரூராட்சி களின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ் நேரில் பார்வை யிட்டார். பஸ் நிறுத்தத்தின் மற்றொரு பகுதியில் ஆட்டுச் சந்தை அமைக்கப்பட இருப்பதையும் அவர் ஆய்வு செய்தார்.
- 4 பஸ்களுக்கு அபராதம் விதிப்பு
- நீண்ட தூரம் செல்லும் தனியார் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வந்தது.
புதுச்சேரி:
ஆயுத பூஜை பண்டிகை யொட்டி இன்று 21-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை 4 தினங்கள் விடுமுறை நாட்களாக உள்ளது.
இந்த விடுமுறையை பயன்படுத்தி பலரும் சொந்த ஊருக்கு செல்வதற்காக ரயில், பஸ், ஆம்னி பஸ் களில் செல்கின்றனர்.
ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பயணிகள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதால் ரெயில் மற்றும் பஸ்களில் டிக்கெட் கிடைக்கவில்லை.
இதனால் நீண்ட தூரம் செல்லும் தனியார் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வந்தது.
அதையடுத்து தமிழக அரசு ஒவ்வொரு ஊருக்கும் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற ஆணையை வெளியிட்டது. அதன் அடிப்படையில் புதுவையை அடுத்த தமிழக பகுதியான மொரட்டாண்டி டோல்கேட்டில் திண்டிவனம் சரக்கு போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் போக்குவரத்து ஆய்வாளர் சுந்தர்ராஜன் தலைமை யிலான போக்குவரத்து துறை அலுவலர்கள் சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து புதுவை நோக்கி வந்த தனியார் பஸ் மற்றும் தனியார் ஆம்னி பஸ்களை நிறுத்தி பரிசோதனையில் ஈடுபட்டனர்.
இதில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 4 ஆம்னி பஸ்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் விதிக்கப்பட்டது.
- தசரா திருவிழாவை காண பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
- பஸ்கள் தேவை அதிகரித்துள்ள நிலையில் அக்டோபர் 21 முதல் 24-ந்தேதி வரை கூடுதல் பேருந்துகளை இயக்குமாறு கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மைசூரு தசரா விழா உலக புகழ்பெற்றது. மைசூரு தசரா விழா கடந்த 15-ந்தேதி மைசூரு சாமுண்டி மலையில் உள்ள காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கோலாகலமாக தொடங்கியது. இது 414-வது தசரா விழா ஆகும்.
தசரா விழா தொடங்கி உள்ளதால் மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நகரில் எங்கு பார்த்தாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடங்கி உள்ளதால், மக்கள் கூட்டம் அதிமாக உள்ளது.
தசரா திருவிழாவை காண பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் ஆயுத பூஜை, விஜய தசமி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர்.
இதனால் பஸ்களில் கூட்டம் நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. எனவே பெங்களூருக்கு வெளியே 500 பேருந்துகளை இயக்குமாறு பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கும், கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகத்திற்கும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பஸ்கள் தேவை அதிகரித்துள்ள நிலையில் அக்டோபர் 21 முதல் 24-ந்தேதி வரை கூடுதல் பேருந்துகளை இயக்குமாறு கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிடையே முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2 நாட்களில் கணிசமாக அதிகரித்துள்ளது. அதாவது டிக்கெட் முன்பதிவு 35 சதவீதம் அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் ஆன்லைனில் டிக்கெட் வாங்கிய பிறகு 46,000-க்கும் மேற்பட்ட நபர்கள் பேருந்துகளில் பயணம் செய்தனர். மேலும் நேற்று அந்த எண்ணிக்கை 56,000 ஆக உயர்ந்தது. இதனால் 2 நாட்களில் 1 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
விழா காலத்தை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து ஐதராபாத் செல்ல ரூ.3,000, மங்களூருவுக்கு ரூ.2,000, பெலகாவிக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000, ஹுப்பள்ளிக்கு ரூ.1,700 முதல் ரூ.1,900 வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கின்றனர். விஜயபுராவுக்கு ஒரு நபருக்கு பயண கட்டணம் 2,500 ரூபாயை தாண்டியுள்ளது.
- தொடர் விடுமுறை முடிந்து வெளியூர் சென்றுள்ள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப உள்ளனர்
- இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஆம்னி பஸ்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சென்னை:
பண்டிகை, விடுமுறை மற்றும் முக்கிய சிறப்பு நாட்களில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்தாலும் கடைசி கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் புறப்படுவதால் போக்குவரத்து சேவையை அதிகமாக்குவது அவசியமாக மாறிவருகிறது.
இந்நிலையில், தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் நடத்தும் ஆம்னி பஸ்களை நாடி வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குறிப்பாக, தொடர் விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதுவதை காணமுடிகிறது.
இதையடுத்து ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்ந்து விடுகிறது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் இரட்டிப்பு கட்டணம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
தற்போது ஆயுதபூஜை விடுமுறை தொடர்ந்து 4 நாட்கள் வந்ததால் ஆம்னி பஸ்களின் கட்டணம் அதிகளவு உயர்த்தப்பட்டு விட்டதாக புகார்கள் எழுந்தன. சில ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட 150 சதவீதத்துக்கும் அதிகமான கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பயணிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதற்கிடையே ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தது. இதற்காக அதிரடி சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறி 120-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டன. அந்த பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படுவதும் தடை செய்யப்பட்டது.
மேலும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக அந்த ஆம்னி பஸ் நிறுவனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. சுமார் 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. பஸ்களை சிறை பிடித்ததோடு அபராதமும் விதிக்கப்பட்டதால் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
ஆம்னி பஸ் கட்டணத்தை ஒழுங்குபடுத்த கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டு இருப்பதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர். தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக தென் மாநில ஆம்னி பஸ்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் நிர்ணயம் இல்லாத போதிலும் அரசுக்கும், பயணிகளுக்கும் பாதிக்காத வண்ணம் சங்கங்களே கட்டணம் நிர்ணயம் செய்து கடந்த 2022 செப்டம்பர் மாதம் போக்குவரத்து அமைச்சர் மற்றும் ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்டணம் ஒப்புதல் பெற்று அதே கட்டணத்தில் இன்று வரை இயக்கி கொண்டுள்ளோம்.
கடந்த 10 நாட்களாக அண்ணாநகர் சரக இணை ஆணையர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலரும் சங்கங்களுடன் இணைந்து சங்கங்கள் நிர்ணயித்த கட்டணத்திற்கு மிகாமல் கண்காணித்து இன்று வரை அதிக கட்டணம் புகார் இல்லாமல் இயங்கி வந்தது.
இந்நிலையில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி மற்றும் 4 நாட்கள் தொடர் விடுமுறை முன்னிட்டு தவறு செய்யாமல் இயங்கிய 120 ஆம்னி பஸ்களை அதிக கட்டணம் என்ற பெயரில் ஆணையரின் தவறான வழிகாட்டுதலின்படி சிறை பிடித்தும், மீண்டும் சிறை பிடிப்பதை நிறுத்தக் கோரியும் இன்று (24-ந்தேதி) மாலை 6 மணி முதல் ஆம்னி பஸ்கள் இயங்காது.
இன்று ஆம்னி பஸ்களில் 1 லட்சத்துக்கு மேலான பயணிகள் முன்பதிவு செய்துள்ளார்கள். அவர்களை போக்குவரத்து துறை சார்பாக வழியில் இறக்கி விடுவதை தவிர்க்கும் பொருட்டு, அனைத்து சங்கங்களும் இணைந்து வேறு வழியில்லாமல் கனத்த இயத்துடன் இதனை அறிவிக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆயுதபூஜை தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து மட்டும் சுமார் 5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். அதுபோல மற்ற நகரங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று இருக்கிறார்கள். அவர்கள் இன்று மாலை முதல் திரும்புவதற்கு ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்திருந்தனர்.
இன்று மட்டும் சுமார் 1 லட்சம் பயணிகள் ஆம்னி பஸ்களில் சொந்த ஊர்களில் இருந்து முன்பதிவு செய்திருக்கிறார்கள். ஆம்னி பஸ் உரிமையாளர்களின் ஸ்டிரைக் அறிவிப்பால் அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மாற்று ஏற்பாடுகள் கடைசி நிமிடத்தில் செய்யமுடியாத நிலையில் பெரும்பாலானோர் இன்று சொந்த ஊர்களில் இருந்து புறப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பயணிகள் ஆம்னி பஸ் ஸ்டிரைக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- தொடர் விடுமுறை முடிந்து வெளியூர் சென்றுள்ள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப உள்ளனர்
- அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் கடந்த இரு தினங்களாக ஆம்னி பஸ்களை அதிகாரிகள் சோதனையிட்டதில் முறையான ஆவணம் இல்லாதது உள்பட பல்வேறு குற்றச்சாட்டின் பேரில் 120 பஸ்கள் பிடித்து வைக்கப்பட்டு உள்ளன.
இந்த பஸ்களில் முறையான ஆவணங்கள் வைத்திருந்தும் சில பஸ்களை பிடித்து வைத்துள்ளதாகவும், இதனால் பஸ்களை விடுவிக்காவிட்டால் இன்று மாலை 6 மணி முதல் பஸ்களை இயக்க மாட்டோம் என்றும் ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆம்னி பஸ் சங்க தலைவர்களுடன் போனில் பேச்சுவர்த்தை நடத்தினார். போக்குவரத்து கழக அதிகாரிகளை சந்தித்து பேசி போராட்டத்தை கைவிடும்படி அவர்களிடம் எடுத்துக் கூறினார். அதன் பேரில் போக்குவரத்து துறை அதிகாரி சண்முகசுந்தரத்தைச் சந்தித்து ஆம்னி பஸ் சங்கத்தினர் பேசினார்கள்.
இதுகுறித்து அமைச்சர் சிவசங்கரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
ஆம்னி பஸ் சங்கத்தினருடன் நான் தொலைபேசியில் பேசினேன். அவர்கள் சில கோரிக்கையை சொல்லி உள்ளனர்.
குறிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்ட பஸ்களில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினார்கள். தவறு இழைக்கும் பஸ் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்த கருத்து மாறுபாடும் இல்லை என்று தெரிவித்தனர். எனவே நான் அதிகாரிகளிடம் சொல்லி உள்ளேன். ஆகவே பிடித்து வைத்துள்ள பஸ்களை ஆய்வுசெய்து தவறு இல்லை என்றால் பஸ்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மற்ற பஸ்கள் நடவடிக்கைக்கு உட்படும். ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
அதேபோல் வெளிமாநில பதிவு பஸ்களை ஓட்டுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இப்போது பண்டிகை விடுமுறை காலமாக இருப்பதால் மக்களை பாதிக்காத வகையில் மேலும் கூடுதல் பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
எப்படி இருந்தாலும் இந்த விஷயத்தில் ஆம்னி பஸ் சங்க நிர்வாகிகளுடன் அரசு அதிகாரிகள் பேசி ஒரு முடிவுக்கு வருவார்கள். எனவே பேச்சுவார்த்தையில் போராட்டம் வாபஸ் ஆகி விடும் என எதிர்பார்க்கிறேன்.
கூடுதல் கட்டணம் பிரச்சினை வராமல் இருப்பதற்காக தீபாவளி பண்டிகைக்கு முன்பாக கடந்த ஆண்டை போலவே ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்.
அதன்பிறகும் அவர்கள் ஏதும் தவறு செய்தால் அது குறித்து புகார் செய்வதற்கு தீபாவளிக்கு முன்பாக தொலைபேசி எண் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே ஆம்னி பஸ்களில் மற்றொரு சங்கமான தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க செயலாளர் மாறன் கூறுகையில், "ஆம்னி பஸ்கள் அனைத்தும் இயங்கும். பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்" என்று கூறினார்.
இந்நிலையில், தமிழ்நாடு ஆம்னி பஸ்கள் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து ஆம்னி பஸ் நிர்வாகிகளுடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. சென்னை கே.கே.நகரில் உள்ள அலுவலகத்தில் போக்குவரத்து துறை இணை ஆணையர் தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் வைத்த கோரிக்கைகளை அதிகாரிகள் கவனமுடன் பரிசீலித்தனர். அரசு தரப்பிலும் பல்வேறு நிபந்தனைகள் வைக்கப்பட்டன. இவைகள் அனைத்தும் பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து ஆம்னி பஸ் நிர்வாகிகள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
- தனியார் பஸ்கள் அதிக கட்டணத்தை வசூல் செய்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
- நாளை சென்னை செல்ல ஆம்னி பஸ்களில் குறைந்த பட்ச இருக்கை கட்டணமே ரூ.1,100 ஆக உயர்ந்துள்ளது.
நெல்லை:
தமிழகத்தில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் ஆம்னி பஸ்கள் உள்ளன.
இந்த ஆம்னி பஸ்கள் அனைத்தும் பண்டிகை நாட்களில் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப பயணக் கட்டணத்தை உயர்த்தி கொள்கின்றன என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
அதிக விலைக்கு கட்டணத்தை உயர்த்தும் பஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தாலும், அந்த அறிவிப்புகளை எல்லாம் எந்தப் பஸ் நிறுவனமும் பொருட்படுத்துவது இல்லை.
பண்டிகை நாட்கள் மட்டுமின்றி தொடர் விடுமுறை நாட்களாக இருந்தாலும், வார இறுதி நாட்களிலும் இது போன்ற கட்டண உயர்வு தொடர் கதையாகவே இருக்கிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது.
வழக்கமாக சென்னை பெருநகரத்தில் இருந்து பள்ளி தொடர் விடுமுறை, பண்டிகை காலகட்டங்களின் போது நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இதனை பயன்படுத்தி தனியார் பஸ்கள் அதிக கட்டணத்தை வசூல் செய்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக ஏராளமானவர்கள் நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு புறப்பட்டுள்ளனர்.
பொதுவாக பயணிகளின் முதல் பயணத் தேர்வாக இருப்பது ரெயில் பயணம் தான். ஆனால் அதற்கு 2 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் புக் செய்யாவிட்டால் இடம் கிடைக்காது என்பதால் இறுதி கட்டத்தில் பயணம் செய்பவர்கள் அரசு பஸ்களை நாடுகின்றனர். அதிலும் இடம் கிடைக்காதவர்கள் கடைசி பயணமாக தனியார் ஆம்னி பஸ்களை பயன்படுத்துகின்றனர்.
இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு தனியார் பஸ் நிறுவனத்தினர் டிக்கெட் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.
நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் இன்று சென்னை, கோவை நகரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களின் கட்டணம் வழக்கத்தை விட கடுமையாக உயர்ந்துள்ளது.
சாதாரண நாட்களில் நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் சாதாரண இருக்கைகளுக்கு ரூ.600 முதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதேநேரத்தில் படுக்கை வசதிக்கு ரூ.900 முதல் வசூலிக்கப்படுகிறது. மேலும் ஏ.சி.படுக்கை வசதிக்கு பஸ்களின் தரத்திற்கு ஏற்ப ரூ.1,200 முதல் 1,500 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்நிலையில் இன்றும், நாளையும் நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் கட்டணம் ரூ.935 முதல் ரூ.3500 வரை என கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏ.சி. அல்லாத சில பஸ்களில் இருக்கை கட்டணம் ரூ.900-ல் இருந்து தொடங்குகிறது. மேலும் நேரங்களுக்கு தகுந்தவாறு ஏ.சி. அல்லாத பஸ்களில் சென்னைக்கு செல்ல கட்டணமாக ரூ.1000 என வசூலிக்கப்படுகிறது. இதேபோல ஏ.சி. வசதியுடன் கூடிய பஸ்களில் இருக்கை கட்டணமாக ரூ.1,150,ரூ.1,400, ரூ.1,580 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏ.சி. சிலீப்பர் சீட்டுக்கு ரூ.1,800 முதல் ரூ.2,000, ரூ.2,100 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம் நாளை இதே பஸ்களில் சென்னை செல்வ தற்கு கட்டணம் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது நாளை சென்னை செல்ல ஆம்னி பஸ்களில் குறைந்த பட்ச இருக்கை கட்டணமே ரூ.1,100 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து சில பஸ்களில் ஏ.சி. இருக்கைக்கு ரூ.1,300, ரூ.1400, ரூ.1500 என கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது.
மேலும் ஏ.சி. சிலீப்பர் இருக்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,200, ரூ.2,300 ரூ.2,400, ரூ.2500, ரூ.2,800, ரூ.3,000, ரூ.3,400 வரை கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது.
இதேபோல நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவட்டார் பகுதிகளில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பஸ்களிலும் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. சாதாரண இருக்கைகளுக்கு ரூ.1000-த்தில் இருந்து தொடங்கி ரூ.1250, ரூ.1300, ரூ.1500 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதேநேரத்தில் ஏ.சி.இருக்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் முதலும், ஏ.சி. படுக்கை வசதிகளுக்கு ரூ.2500 முதல் ரூ.3500 வரை என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல நெல்லையில் இருந்து கோவைக்கு செல்வதற்கு ஏ.சி.அல்லாத பஸ்களில் கட்டணம் ரூ.700 முதல் ரூ.850, ரூ.1000 என உயர்த்தப்பட்டுள்ளது.
அதேநேரம் ஏ.சி.சிலீப்பர் சீட்டுகளுக்கு ரூ.1,139 முதல் ரூ.1200, ரூ.1341, ரூ.1500 என கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
சாதாரணமான நாட்களில் நெல்லையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு செல்வதற்கு குளிர்சாதன வசதி இல்லாத பஸ்களில் ரூ. 650-ம், குளிர்சாதன வசதி கொண்ட பஸ்சில் ரூ.900 முதல் ரூ. 1,200 என்ற நிலையில் டிக்கெட்டுகள் வசூல் செய்யப்படும். ஆனால் இன்று குளிர்சாதன வசதி இல்லாத பஸ்களில் கட்டணம் ரூ.350 வரை உயர்ந்து ஒரு டிக்கெட் ரூ. 1000 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதேபோல் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களின் கட்டணமும் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.200 வரை உயர்ந்து காணப்படுகிறது.
இதேபோல் நெல்லையில் இருந்து சென்னைக்கு செல்லும் பஸ்களின் கட்டணமும் எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்துள்ளது.
- தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு இனி அவகாசம் அளிக்க முடியாது.
- 547 பஸ்கள் 'டிஎன்' எனப்படும் வாகன பதிவு எண்ணை பெறாமலேயே உள்ளது.
சென்னை:
அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று வெளி மாநில பதிவு எண்களை கொண்ட ஏராளமான ஆம்னி பஸ்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆம்னி பஸ்கள், பயணிகளுக்கான ஆம்னி பஸ்கள் போலவே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
எனவே, தமிழகத்தில் இயக்கப்படும் அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற ஆம்னி பஸ்களை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தி இருந்தது. இதற்காக பஸ் உரிமையாளர்களுக்கு ஏற்கெனவே 3 முறை அவகாசம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் இதுபோல் 652 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவது கண்டறியப்பட்டது. இதில் 547 பஸ்கள் 'டிஎன்' எனப்படும் வாகன பதிவு எண்ணை பெறாமலே இருந்து வருகின்றன. மீத முள்ள பஸ்கள் மட்டுமே தமிழகத்தில் மறுபதிவு செய்து இயக்கப்பட்டு வருகின்றன.
எனவே, நாளை (14-ந்தேதி) முதல் உரிய தமிழக பதிவு எண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயங்க போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது. இதை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரும் உறுதிப்படுத்தி உள்ளார். ஆம்னி பஸ்களை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு இனி அவகாசம் அளிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அவகாசம் வேண்டும் என்கிற பட்சத்தில் ஆம்னி பஸ்களின் உரிமையாளர்கள், போக்குவரத்து துறை ஆணையரிடம் அனுமதிக்காக முறையிடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் நாளைமுதல் தமிழகத்தில் இயக்கப்படுவது தடை செய்யப்படும். இனி பயணிகள் அதில் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என போக்குவரத்துத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன், போக்குவரத்து துறை அதிகாரிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்தினார்கள். சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து துறை ஆணையர் அலுவலகத்தில், போக்குவரத்து துறை ஆணையர் சண்முக சுந்தரம் தலைமையில் இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது.






