என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடுதல் கட்டணம்"

    • கடந்த ஆண்டில் தனியார் பஸ்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டது.
    • தற்போது ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக தகவல் வந்துள்ளது.

    கடலூர்:

    கடலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பொதுமக்கள் செல்வதற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு 4 நாட்களும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் கூடுதலாக இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு மீண்டும் 3 நாட்கள் சென்னை மற்றும் பெருநகருக்கு செல்வதற்கு மற்றும் வருவதற்கும் கூடுதல் பஸ் வசதிகள் செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டில் தனியார் பஸ்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் தனியார் பஸ்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட உள்ளது. இதன் மூலமாக அந்தந்த மாவட்டங்களில் இயங்குகின்ற பஸ்கள் கிராமப்புறம் செல்வதற்கும், குறைபாடுகள் இல்லாமல் இயக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளபட்டு உள்ளது.

    தற்போது ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக தகவல் வந்துள்ளது. அவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புதிய பஸ்கள் வாங்கி வருகின்றனர். அவர் அவர்கள் தனியாக ஆன்லைன் விண்ணப்பம் கொண்டு வந்துள்ளனர்.

    ஏற்கனவே தனியார் ஆம்னி பஸ் சங்கத்தினர் கடந்த 2 ஆண்டுகளாக ஒத்துழைப்பு வழங்குவது போல் இந்தாண்டும் ஒத்துழைப்பு வழங்குகிறோம் என சங்க நிர்வாகிகள் உறுதி அளித்துள்ளனர்.

    புதிதாக வருகிறவர்கள் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்து உள்ளோம். இது தொடர்பாக குழு அமைத்து தீவிர விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொள்ளப்படும். எந்த நிறுவனம் ஈடுபட்டாலும் நேரடியாக தகவல் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதனை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராதம், மாதந்தோறும் வாகனங்கள் நிறுத்தி வைக்கக்கூடிய நிலை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் காலாவதியான வாகனங்கள் இயக்க முடியாது. ஒரு சில பஸ் உரிமையாளர்கள் விழா நாட்களில் மட்டும் ஒரு சில பஸ்கள் இயக்க நேரிடுகிறது. இதனையும் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்பாடு விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • கூடுதல் கட்டணம் பெறும் தனியார் இ-சேவை மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மின் ஆளுமை முகமையின் மூலம் 413 அரசு இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது.

    இதில் மதுரை கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், கூட்டுறவு சங்கங்கள், மகளிர் திட்டம், கிராம தொழில் முனைவோர் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற இ-சேவை மையங்களுக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் சான்றுகள் விண்ணப்பிக்க அரசு நிர்ணயித்த கட்டணத்தினை தவிர கூடுதல் கட்டணம் பெறும் இ-சேவை மையங்கள் பற்றிய புகார்களுக்கு tnesevaihelpdesk@tb.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 மற்றும் 1800 425 1333 மூலமாகவோ புகார்களை தெரிவிக்கலாம்.

    பொதுமக்கள் சான்றிதழ்கள் பெற அரசுக்கு விண்ணப்பிக்க உருவாக்கப்பட்டுள்ள பயனாளர் நுழைவு வசதியினை தனியார் கணினி மையங்கள் மற்றும் ஜெராக்ஸ் மையங்கள் வியாபார நோக்கில் பயன்படுத்துவதாக தெரிய வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு அனுமதி பெறாமல் இ-சேவை பெயரில் தனியார் கணினி மையங்கள் மற்றும் ஜெராக்ஸ் மையங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மட்டும் உருவாக்கிய பயனாளர் நுழைவினை பயன்படுத்தி வருவாய் துறை சான்றுகள், முதியோர் உதவி தொகை போன்ற சான்றுகளை விண்ணப்பம் செய்து சான்றுகளில் எழுத்து பிழை, தவறான ஆவணங்களை இணைத்தல் மற்றும் இடைதரகர்கள் மூலம் கூடுதலாக கட்டணம் பெறுதல் போன்ற பல முறைகேடுகள் நடைபெறுவது என பல்வேறு தரப்பில் புகார்கள் வருகின்றன.

    தனியார் கணினி மையங்கள் பயனாளர் நுழைவினை பயன்படுத்தி பொதுமக்களிடம் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்தாலோ, இ-சேவை என்ற பெயர் பலகை மற்றும் சான்றுகள் சம்பந்தமான விளம்பர பலகைகள் வைத்தாலோ வருவாய் மற்றும் காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    • கோயம்பேடு, போரூர் சுங்கச்சாவடி பகுதிகளில் சிறப்பு ஆம்னி பஸ்களில் சோதனை செய்யப்பட்டது.
    • 49 ஆம்னி பஸ்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு ரூ.92,500 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை போக்குவரத்து ஆணையர் உத்தரவின்படி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை தினங்களை ஒட்டி ஆம்னி பஸ்களில் வழக்கத்துக்கு மாறான அதிக கட்டணம் வசூலிக்கும் புகார் குறித்து கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வருகிற 2.1.2023 வரை சென்னை வடக்கு சரக பகுதியில் சோதனை நடத்தப்படுகிறது.

    இதன்படி கோயம்பேடு, போரூர் சுங்கச்சாவடி பகுதிகளில் சிறப்பு ஆம்னி பஸ்களில் சோதனை செய்யப்பட்டது. இதில் வழக்கத்திற்கு மாறாக அதிக கட்டணம் வசூலிக்கும் புகார் மற்றும் வரி செலுத்தப்படாமல் இயக்கப்படும் பிற மாநில ஆம்னி பஸ்கள் குறித்து சோதனை நடத்தப்பட்டது.

    இதில் 49 ஆம்னி பஸ்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு ரூ.92,500 அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும் வழக்கத்துக்கு மாறான அதிக கட்டணம் வசூலித்ததாக புகார் பெறப்பட்ட ஆம்னி பேருந்துகளில் இருந்து 9 பயணிகளுக்கு ரூ.9,200 அதிக கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டது.

    இதுபோன்ற வரி செலுத்தப்படாமல் அதிக கட்டணம் வசூலிப்பது மற்றும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் விதிகளின்படி தொடர்ந்து கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 40-க்கும் மேற்பட்ட இப்பகுதி பொதுமக்கள், வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டனர்.
    • பொதுமக்கள் கடும் ஆத்திரம் அடைந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஏரியூர்,

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகில் உள்ள, தருமபுரி- சேலம் மாவட்ட எல்லையை கடந்து செல்ல, மேட்டூர் நீர்த்தேக்கத்தை கடக்க வேண்டி உள்ளது.

    இந்த மேட்டூர் நீர்த்தேக்கத்தை கடந்து செல்வதற்காக, ஒட்டனூர்- கோட்டையூர் இடையே ஒரு பரிசல் துறையும், நாகமரை- பண்ணவாடி இடையே மற்றொரு பரிசல் துறையும் உள்ளது.

    இதை பயன்படுத்தி இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளும், சேலம் மாவட்ட பகுதிக்கு சென்று வருகின்றனர். மேலும் விவசாய பயிர்களையும், சேலம் மாவட்ட வார சந்தைகளுக்கு, கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இதற்காக பரிசல் பயண கட்டணம், தனிநபருக்கு 5 ரூபாய் எனவும், இருசக்கர வாகனத்திற்கு 10 ரூபாய் எனவும் இருந்தது.

    இது கடந்த மூன்று ஆண்டுகளில், படிப்படியாக உயர்ந்து, தற்போது தனி நபருக்கு 20 ரூபாய் எனவும், இரு சக்கர வாகனத்திற்கு 40 ரூபாய் எனவும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    கடந்த வாரம் புதிய டெண்டர் விடப்பட்டது. இதில் டெண்டர் எடுத்தவர்கள் 50 லட்சத்திற்கும் மேல் ஏலம் போனதால், கட்டுபடியாகாது என மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து, கூடுதல் கட்டணத்திற்கு அனுமதி வாங்கியுள்ளனர்.

    தொழில் போட்டி காரணமாக அதிக விலைக்கு ஏலம் எடுத்து விட்டு, அதற்கான தொகையை பொதுமக்களிடம் வசூலிக்க ஒப்பந்ததாரர்கள் முயற்சிப்பதும், அதற்கு ஏரியூர் அதிகாரிகள் துணை போவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    ஏரியூர் அதிகாரிகள் பொது மக்களின் நலனில் அக்கறை கட்டாமல், பொதுமக்களிடம் எவ்வித கருத்தும் கேட்காமல், பரிசல் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக, 100 மடங்கு கட்டண உயர்வை மேற்கொண்டு உள்ளனர். இதனால் இப்பகுதி பொது மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    இத்தகைய கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, இப்பகுதி பொதுமக்கள் கடந்த இரண்டாம் தேதி ஏரியூர் காவல் நிலையம் மற்றும் ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா ஆகியோரிடம் மனு அளித்தனர்.

    மேலும் 40-க்கும் மேற்பட்ட இப்பகுதி பொதுமக்கள், வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டனர். அப்போது ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா 50 லட்சம் ரூபாய்க்கு மேல் டெண்டர் எடுத்தவர்கள், குறைவான கட்டணம் வசூலித்தால் கட்டுப்படியாகாது. எனவே கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்தோம் என தெரிவித்தனர்.

    இதனால் பொதுமக்கள் கடும் ஆத்திரம் அடைந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    உடனடி கட்டண குறைப்பு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், விரைவில் சாலை மறியல் போராட்டம் செய்யப் போவதாகவும் தெரிவித்தனர்.

    ஆனால் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் இன்று காலை திடீரென கரையோரத்தில் பரிசலை இழுத்துக்கட்டி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும்

    மாவட்ட கலெக்டர் நேரில் வந்து உரிய பேச்சு வார்த்தை நடத்தி எங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

    • கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் கட்டண கழிப்பறை ஒப்பந்ததாரர்கள் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மூடப்பட்டுள்ள பெண்கள் இலவச கழி ப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி நகர், மற்றும் புறநகர் பஸ்ஸ்டாண்டுக்கு தினந்தோறும் தருமபுரி மாவட்டம் மட்டும் இன்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் தருமபுரி நகர், புறநகர் பஸ்ஸ்டாண்டில் உள்ள தலா இரண்டு என மொத்தம், நான்கு கட்டண கழிப்பறைகளை தனி யாருக்கு ஏலம் விட்டுள்ள நகராட்சி நிர்வாகம், சிறுநீர் கழிக்க ஒரு ரூபாய், மலம் கழிக்க, 3 ரூபாய் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது.

    ஆனால், தருமபுரி புறநகர் பஸ்ஸ்டாண்டில் உள்ள ஒரு கட்டண கழிப்பறையில் கட்டண விபரம் இல்லாமல் உள்ளது.

    மற்றொரு கழிப்பறை யில் சிறுநீர், மலம் கழிக்கும் கட்டணம் அழிக்கப்பட்டு ள்ளது. இங்கு சிறு நீர் மற்றும் மலம் கழிக்க பொது மக்களிடம் இருந்து, கட்டாயமாக, 5 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.

    இதே போன்று நகர் பஸ்ஸ்டாண்டில் கட்டண விபரங்கள் உள்ள போதும், சிறுநீர், மலம் கழிக்க, ஐந்து ரூபாய் வசூல் செய்யப்படு கிறது.

    கட்டணம் குறித்து பொது மக்கள் கேட்டால், அங்கு பணியில் உள்ளவர்கள், தாங்கள் சொல்லும் கட்டணத்தை தராவிட்டால் கழிவறையில் செல்ல அனுமதிக்க மறுக்கின்றனர்.

    இதனால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வருவதுடன், வேறு வழியின்றி கூடுதல் கட்டணம் கொடுத்து இயற்கை உபாதை கழிக்கும் நிலை தொடர்ந்து வருகிறது.

    மேலும், தருமபுரி பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் ஆண்கள் இலவச சிறுநீர் கழிப்பிடம் பயன்பாட்டுக்கு உள்ள போதும், பெண்கள் இலவச சீறுநீர் கழிப்பிடம் பயன்பாட்டில் இல்லாததால், பெண் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

    நகராட்சி நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் கட்டண கழிப்பறை ஒப்பந்ததாரர்கள் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மூடப்பட்டுள்ள பெண்கள் இலவச கழி ப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுகுறித்து தருமபுரி நகராட்சி தி.மு.க., சேர்மன் லட்சுமி நாட்டான் மாது விடம் கேட்ட போது, தருமபுரி பஸ்ஸ்டாண்டுக்கு வரும் பொதுமக்களின் நலன் கருதி, நகராட்சி நிர்வாகம் கட்டண கழிப்பறைகளுக்கு சிறுநீர், மலம் கழிக்க, குளிக்க கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.

    இதை மீறி கூடுதல் கட்டணம் வசூல் செய்யதால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    • விதிகளை மீறும் ஆம்னி பஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்து இருந்தது.
    • 223 பஸ்கள் விதிகளை மீறி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    சென்னை:

    பண்டிகை காலங்களில் வெளியூர் செல்லும் மக்களிடம் ஆம்னி பஸ்களில் தாறுமாறான கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம். இது தொடர்பாக உரிமையாளர்களுடன் பேசி கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டது.

    தீபாவளி பண்டிகையின் போது விதிகளை மீறும் ஆம்னி பஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்து இருந்தது.

    கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்கள் 6699 ஆம்னி பஸ்களை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது 1223 பஸ்கள் விதிகளை மீறி செயல்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது

    இதையடுத்து அந்த பஸ்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது அபராதமாக ரூ.18 லட்சத்து 76 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

    கூடுதல் கட்டணம் வசூலித்த எட்டு ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். இதேபோல் ஊர்களுக்கு சென்றவர்கள் நாளை முதல் திரும்பி வர தொடங்குவார்கள். அப்போதும் ஆம்னி பஸ்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பண்டிகை காலங்களில் பொதுவாக ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுகிறது.
    • பொதுமக்களின் தேவையை அறிந்து கட்டணம் அதிகளவில் வசூலிப்பதால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    சென்னை:

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை மற்றும் பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் தென் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் வெளியூர் பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

    பண்டிகை காலங்களில் பொதுவாக ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுகிறது. அதேபோல தற்போது கட்டணம் அதிகரித்துள்ளது.

    சென்னையில் இருந்து திருச்சி, கோவை, நாகை, நெல்லை செல்லும் ஆம்னி பேருந்துகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    ஆம்னி பேருந்துகளில் விழாக்கால கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்ல அதிகபட்ச கட்டணம் - ரூ.3700 என்றும் தற்போது ரூ.4100 வரை வசூலிக்கப்படுகிறது.

    பொதுமக்களின் தேவையை அறிந்து கட்டணம் அதிகளவில் வசூலிப்பதால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஒரு நிலையான கட்டணத்தை வசூலிக்காமல் பண்டிகை காலத்தை மையமாக வைத்து கட்டணத்தை உயர்த்தி வருவதை அரசு தடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

    • ஆம்னி பஸ்களில் ஏறினாலே குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.
    • ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் உரிமையாளர்களை தொடர்ந்து எச்சரித்து வருகிறோம்.

    சென்னை:

    சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பண்டிகை காலங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. அதனை தொடர்ந்து புத்தாண்டு பண்டிகையும் வர இருக்கிறது.

    மேலும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் நேற்று சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

    சென்னையில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளில் முன்பதிவு இருக்கைகள் அனைத்தும் ஏற்கெனவே நிரம்பி விட்டன. இதன் காரணமாக சொந்த ஊர் செல்ல புற்ப்பட்டு வந்தவர்கள் ஆம்னி பஸ்களை நாடினார்கள்.

    இதை கருத்தில் கொண்டு நேற்று திடீரென்று ஆம்னி கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

    சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் விரைவு பஸ்களில் இருக்கைகள் ஏற்கெனவே நிரம்பி விட்டதால் நேரடி பஸ்கள் கிடைக்கவில்லை. இதன் காரணமாக மதுரை சென்று அங்கிருந்து மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணிகள் பஸ் நிலையங்களில் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதனால் ஆம்னி பஸ்களையே நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஆம்னி பஸ்களில் ஏறினாலே குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து நெல்லைக்கு ரூ.3,000 வசூலிக்கப்பட்டது. வழக்கமாக நெல்லைக்கு ரூ.2,000 கட்டணம் ஆகும். ஆனால் ரூ.1,000 கூடுதலாக வசூலிக்கப்பட்டது.

    இதேபோல் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு ரூ.3,700 முதல் ரூ.4,100 வரை வசூலிக்கப்பட்டது. இது ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ளதை விட அதிகமாகும். அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் பலர் ஊருக்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதுபற்றி போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், 'கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்படுவதால், மக்கள் சிரமமின்றி பயணிக்கலாம். ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வு என்று வரும் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றனர்.

    இதுகுறித்து ஆம்னி பஸ் சங்கத்தினர் கூறுகையில், ' ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் உரிமையாளர்களை தொடர்ந்து எச்சரித்து வருகிறோம். கூடுதலாக வசூலித்த உரிமையாளர்களிடம் இருந்து பயணிகளுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும்' என்றனர்.

    • 1,892 பேருந்துகளில் கட்டணம் வசூல் கண்டுபிடிப்பு.
    • அபராதம் மூலம் ரூ. 36.55 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலித்த 1,892 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ. 36.55 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் 15,659 ஆம்னி பேருந்கள் சோதனை செய்யப்பட்டதில் 1,892 பேருந்துகளில் கட்டணம் வசூல் கண்டுபிடிக்கப்பட்டது.

    தமிழகம் முழுவதும் ஜனவரி 10 முதல் 21ம் தேதி வரை சிறப்பு குழுக்கள் மூலம் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பதிவு செய்து தமிழ்நாட்டில் சுமார் 1,000 பேருந்துகள் இயங்குகின்றன.

    மேலும், விதிகளுக்கு புறம்பாக தமிழகத்தில் இயங்கும் ஆம்னி பேருந்துகளை வரைமுறைப்படுத்த காலக்கெடு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • இவ்வளவு பணம் செலுத்திய பிறகும் குறைந்த பட்சம் சரியான இருக்கையாவது எதிர்பார்க்க முடியாதா? என்று பதிவிட்டிருந்தார்.
    • பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.

    ஏர் இந்தியா விமான பயணத்தின் போது உடைந்த இருக்கைகள் மற்றும் குஷன் வசதி இல்லாத இருக்கைகள் தொடர்பாக கடந்த சில நாட்களாக பயணிகள் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் டெல்லியில் இருந்து பெங்களூரு சென்ற ஏர்இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் உடைந்த இருக்கை தொடர்பாக பதிவிட்ட பதிவு தற்போது எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த பயனர் ஜன்னலோர இருக்கைக்காக கூடுதலாக ரூ.1,000 செலுத்தி உள்ளார். ஆனால் விமானத்தில் ஏறியதும் அவரது இருக்கை உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இருக்கையை புகைப்படம் எடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர் தனது பதிவில், ஏப்ரல் 4-ந் தேதி டெல்லியில் இருந்து பெங்களூருக்கு சென்ற போது ஜன்னலோர இருக்கைகக்காக கூடுதலாக ரூ.1,000-ம் செலுத்தினேன். ஆனால் அதன் பிறகு எனது இருக்கை உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

    இவ்வளவு பணம் செலுத்திய பிறகும் குறைந்த பட்சம் சரியான இருக்கையாவது எதிர்பார்க்க முடியாதா? என்று பதிவிட்டிருந்தார். மேலும் தனது பதிவுடன் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகத்தையும் போஸ்ட்டில் சேர்ந்திருந்தார்.

    அவரது இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து ஏர்இந்தியா நிறுவனம் சார்பில் அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில், ஏமாற்றம் அளிக்கும் அனுபவத்திற்கு வருந்துகிறோம். தயவு செய்து உங்கள் முன்பதிவு விபரங்களை எங்களுக்கு மெசேஜ் செய்யுங்கள். சரிபார்த்து உங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எக்ஸ்பிரஸ் பஸ் சேவை குறைந்தபட்சம் 120 கி.மீ. வரை செல்ல வேண்டும் என்ற விதி புறக்கணிக்கப்படுகிறது.
    • டவுன் பஸ்களுக்கு ஸ்டேஜ், புறநகர் பஸ்களுக்கு கிலோ மீட்டர் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அரசு போக்குவரத்து கழக பஸ்களுக்கு அதன் சேவையின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ், அல்ட்ரா டீலக்ஸ், மாநகர பேருந்து ஆகியவற்றிற்கு தனித்தனியே கட்டண விகிதம் உள்ளது.

    நீண்ட தூரம் செல்லும் பஸ்கள், 300 கி.மீ. தூரத்திற்குள் செல்லும் பஸ்கள், டவுன் பஸ்கள் என்ற அடிப்படையில் இயக்கப்படுகின்ற பேருந்துகளுக்கு கட்டணம் வெவ்வேறு விதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    டவுன் பஸ்களுக்கு 2வது, 3வது மற்றும் 4வது நிலைகளுக்கு (ஸ்டேஷ்) கட்டணம் முறையே ரூ.6, ரூ.7, ரூ.8 ஆக இருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக நிறுத்தங்களுக்கு இடையே உள்ள குறைந்த தூரத்திற்கு கூட பயணிகளிடம் ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    உதாரணமாக எடுத்து கொண்டால், திருவள்ளூர்-சுங்கச்சாவடி வழித்தடத்தில் நிறுத்தங்கள் 2 கி.மீ. தொலைவில் இருந்தாலும் பயணிகளிடம் ரூ.10 கட்டணம் வசூலிக்கின்றனர்.

    சென்னையில் புறநகர் பகுதிகளில் சில பஸ்களில் 1 கி.மீ.க்கும் குறைவான இடைவெளியில் ஸ்டேஜ்கள் அமைக்கப்பட்டு உள்ளதால் செயற்கையாக நிறுத்தங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பயணிகள் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

    புறநகர் சேவைகளில் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் அதன் சாதாரண சேவைகளுக்கு அனுமதிக்கப்பட்ட 58 பைசாவுக்கு பதிலாக கிலோ மீட்டருக்கு 75 பைசா வசூலிக்கிறது. இந்த அதிக கட்டணம் குறைவான நிறுத்தங்களை கொண்ட எக்ஸ்பிரஸ் பஸ் சேவைக்கானது.

    எக்ஸ்பிரஸ் பஸ் சேவை குறைந்தபட்சம் 120 கி.மீ. வரை செல்ல வேண்டும் என்ற விதி புறக்கணிக்கப்படுகிறது. பல பேருந்துகள் விரைவு கட்டணத்தில் 25 கி.மீ. மட்டுமே இயக்கப்பட்டு பயணிகளை ஏமாற்றி வருகின்றன.

    அந்த பஸ்களில் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் குறைந்தபட்ச கட்டண விதிமுறைகளை மீறியும், பயண தூரத்தின் அடிப்படையில் கட்டணத்தை கணக்கிடுவதில் தவறான முறையில் பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பது தொடர்கிறது.

    இதுகுறித்து விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனரிடம் கேட்டதற்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டண விகிதப்படி தான் வசூலிக்கிறோம். கூடுலாக வசூலிக்கவில்லை.

    டவுன் பஸ்களுக்கு ஸ்டேஜ், புறநகர் பஸ்களுக்கு கிலோ மீட்டர் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஒரு சில இடங்களுக்கு 19 ரூபாய் இருந்தால் அதனை 20 ரூபாயாக மாற்றியும் ரூ.21 ஆக இருந்தால் ரூ.20 ஆகவும் நிர்ணயித்து வசூலிக்கிறோம். 2018-ல் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட போது என்ன நிர்ணயிக்கப்பட்டதோ அதனை பின்பற்றுகிறோம் என்றார்.

    • பொங்கல் பண்டிகையை யொட்டி சிறப்பு பஸ்கள்.
    • முன்பதிவு டிக்கெட் முழுவதும் விற்றுத்தீர்ந்து விட்டன.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை யொட்டி சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    வழக்கமான ரெயில்கள் மற்றும் சிறப்பு ரெயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட் முழுவதும் விற்றுத்தீர்ந்து விட்டன. இந்த நிலையில் பொதுமக்கள் பலர் ஆம்னி பஸ்களை நாடுவது வழக்கம்.

    பொங்கல் பண்டிகையை யொட்டி பயணிகள் நெரி சலை கருத்தில் கொண்டு ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படு வதை தடுக்கவும், விதிமீ றல்களில் ஈடுபடும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், 30 சிறப்பு குழுக்களை போக்குவரத்து ஆணையரகம் அமைத்து உள்ளது.இதுகுறித்து தமிழக போக்குவரத்து துறை ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:-

    தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், ஆம்னி பஸ்கள் அதிகமாக இயக்கப்படும். பொங்கல் பண்டிகை நெருங்க உள்ள தால் ஆம்னி பஸ்கள் அதிக அளவில் இயக்கப்பட உள்ளது. மேலும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். வரி நிலுவை, அதிக சுமை, பர்மிட் இல்லாமல் இயக்குவது போன்ற விதிமீறல்களும் காணப்படும்.

    இதுகுறித்து சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு குழுவி லும் 3 பேர் இருப்பார்கள். அடுத்த வாரம் முதல் இந்த சிறப்பு குழுக்கள் செயல்படும்.

    இந்த குழுவினர் நெடுஞ் சாலை மற்றும் முக்கிய பஸ் நிலையங்களில் திடீர் சோதனை நடத்துவார்கள். ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தாலோ, விதிமீறல்கள் காணப்பட் டாலோ அபராதம் விதிக்கப் படும். மேலும் பஸ்களின் அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×