search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "E-service"

    • மேல்முறையீட்டு மனுவை ஆர்.டி.ஓ. ஆய்வு செய்து 30 நாட்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.
    • உரிமைத் தொகை மறுக்கப்பட்டவர்களுக்கு மற்றொரு வாய்ப்பாக மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு விண்ணப்பம் செய்ததில் 57 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை மறுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு என்ன காரணத்துக்காக உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து விண்ணப்பதாரர்களுக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது.

    அதில் கார் வைத்திருப்பது, சொத்து அதிகம் இருப்பது, மின்சாரம் அதிகம் பயன்படுத்தியது போன்ற காரணங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

    உரிமைத் தொகை மறுக்கப்பட்டவர்களுக்கு மற்றொரு வாய்ப்பாக மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    இ-சேவை மையம் வழியாகத்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அதில் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் பெண்கள் கூட்டம் அலை மோத தொடங்கி உள்ளது.

    இ-சேவை மையம் திறப்பதற்கு பல மணி நேரத்துக்கு முன்பே பெண்கள் காத்து நிற்கின்றனர். வருகிற 30-ந் தேதிக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று தேதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளதால் அரசு நடத்தும் இ-சேவை மையங்கள், தனியார் இ-சேவை மையங்கள், இண்டர்நெட் மையங்களிலும் பெண்கள் கூட்டம் தினமும் அதிகரித்து வருகிறது.

    நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு விடுவதால் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. மணலி மண்டல அலுவலகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் அங்கிருந்த கதவு கண்ணாடி உடைந்தது. இ-சேவை மையத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் பொருட்களும் கீழே விழுந்து உடைந்துவிட்டது.

    இ-சேவை மைய ஊழியர் கீதாவை பெண்கள் நெருக்கியதால் அவர் மயங்கி விழுந்துவிட்டார். இப்போது அவர் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இப்படி ஒவ்வொரு இ-சேவை மையங்களிலும் பெண்கள் பொறுமை இழந்து வாக்குவாதம் செய்யும் சம்பவங்கள் தினமும் அரங்கேறி வருகிறது.

    மேல்முறையீடு செய்ய வரும் பெண்கள் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் செல்போனில் வந்துள்ள குறுஞ்செய்தியை காண்பித்து விண்ணப்பித்து விட்டு செல்கின்றனர்.

    இந்த மேல்முறையீட்டு மனுவை ஆர்.டி.ஓ. ஆய்வு செய்து 30 நாட்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த விண்ணப்பங்களை தேர்வு செய்ய அவர்களது வீடுகளுக்கு சென்று விசாரிக்க தேவையான ஊழியர்களை தாசில்தார் ஏற்பாடு செய்து வருகிறார்.

    இதன் அடிப்படையில் கள ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆய்வுக்கு பிறகு தகுதியான பயனாளிகள் உரிமைத் தொகை திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளனர்.

    இதற்கிடையே மேல் முறையீடு செய்த பெண்கள், எம்.எல்.ஏ.க்களை அணுகி எனக்கு பணம் வரவில்லை. பணம் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று சிபாரிசுக்கு வந்து செல்கின்றனர்.

    இதே போல் கவுன்சிலர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களிடமும் நிலைமையை எடுத்து கூறி ரூ.1000 பணம் கிடைக்க உதவிடுமாறு கேட்டு வருகின்றனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் போலி இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன.
    • மேலும் கட்டண தொகை விண்ணப்ப எண் விவரங் கள் அடங்கிய ஒப்புகை சீட் டும் வழங்குவதில்லை.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள தாலுகாக்கள், யூனியன் அலுவலகம், நகராட்சி, பேருராட்சி உள்பட பல்வேறு பகுதிகளில் பொது இ-சேவை மையம், தமிழ்நாடு அரசு கேபில் டி.வி. கார்ப்பரேசன், கூட்டுறவு கடன் சங்கம், மகளிர் திட்டம் உள்பட சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மையங்கள் செயல்படுகிறது.

    இந்த மையங்கள் மூலமாக வருமானச் சான்று, இருப்பிட சான்று, சாதி, முதல் பட்டாதாரி, விதவை சான்று உள்பட அனைத்து சான்றுகளுக்காக விண்ணப்பிக்க பொதுமக்கள் தங்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையங்களுக்கு செல்கின்றனர்.

    இம்மையங்களில் அரசு நிர்ணயித்துள்ள. பெரும் பாலன சேவைகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டண மாக ரூ.60 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    ஆனால் அபிராமம், கமுதி, கடலாடி சாயல்குடி பகுதியில் உள்ள பெரும் பாலான இடங்களில் கம்யூட் டர் சென்டர், ஜெராக்ஸ் கடை வைத்துள்ள பலர் உரிய அங்கிகாரம் பெறாமலேயே இ-சேவை மையம் செயல்படுத்த தொடங்கி விட்டனர். இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    அரசு துறை சான்று களுக்கு விண்ணப்பிக்க ஆதார் விவரங்களுடன் பொதுமக்கள் கணக்கு எண் உருவாக்க வேண்டியது அவசியமாகிறது. எவ்வித பயிற்ச்சிகளும் இல்லாததல் அங்கீகாரம் பெறாத இ-சேவை மையத்தினர். கணக்கு எண் உருவாக்க தகவல் களை தவறாக பயன் படுத்துகின்றனர். அதன்பின் குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் ஒருவரின் ஆதார் எண்ணை பெற்று மீண்டும் கணக்கு எண் உருவாக்குகின்றனர்.

    ஒருவருக்கு உருவாக்கப் பட்ட இந்த எண்ணை பயன்படுத்தி தங்கள் மையத்தை நாடிவரும் வெவ்வேறு நபர் களுக்கு சான்றுபெற விண்ணப்பிக்கின்றனர். மேலும் கட்டண தொகை விண்ணப்ப எண் விவரங் கள் அடங்கிய ஒப்புகை சீட் டும் வழங்குவதில்லை. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமுக ஆர்வலரிடம் கேட்டபோது:-

    இந்த பகுதி கிராமங்கள் நிறைந்த பகுதி ஆதலால் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இ-சேவை மையம் எது என்று தெரியாமல் கம்யூட்டர் கடை வைத் திருக்கும் கடைக்கு செல்வதால் அதை சாதகமாக பயன்படுத்தி கடை உரிமை யாளர்கள் சான்றிதழுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதுடன் சான்றிதழும் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். மேலும் காலதாமதமும் ஏற்படுகிறது. இந்த நிலையை போக்க சமந்தப்பட்ட துறையினர் காண்காணிக்கவேண்டும் என்றார்.

    • கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்காக காவேரி புரம், வாஞ்சிநகரை சேர்ந்த காமாட்சி என்பவருக்கு போலியான வருமான சான்றிதழ் தயாரித்து வழங்கி உள்ளார்.
    • இ-சேவை மைய கணினி ஹார்டு டிஸ்க்குகளை வருவாய்த்துறையினர் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ராம மூர்த்தி நகரை சேர்ந்தவர் கோபால். இவருடைய மகன் மோகன்ராஜ் (வயது 33). இவர் மேட்டூர் காமத் பூங்கா எதிரே இ- சேவை மையம் நடத்தி வருகிறார்.

    வருவாய்த்துறையினர் ஆய்வு

    இவர் கொளத்தூரில் உள்ள பள்ளி ஒன்றில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்காக காவேரி புரம், வாஞ்சிநகரை சேர்ந்த காமாட்சி என்பவருக்கு போலியான வருமான சான்றிதழ் தயாரித்து வழங்கி உள்ளார்.

    மாணவர் சேர்க்கை ஆய்வின்போது இந்த போலி சான்றிதழ் கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் காமாட்சியின் குழந்தை, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் பள்ளியில் சேர்க்க முடியாமல் போனது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட காமாட்சி மேட்டூர் தாசில்தாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், மோகன்ராஜ் நடத்தி வந்த அழகி இ-சேவை மைய கணினி ஹார்டு டிஸ்க்குகளை வருவாய்த்துறையினர் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் விருதா சம்பட்டி, சின்னண்ணன் மகன் வேலாயுதம் என்ப வருக்கு வாரிசு சான்றிதழ், கமலேஷ் என்பவருக்கு ஓ.பி.சி. சான்றிதழ்களை அசல் சான்றிதழ் போலவே மோகன்ராஜ் தயாரித்து கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    4 பிரிவுகளில் வழக்கு

    இந்த மோசடி தொடர்பாக நவப்பட்டி குரூப் கிராம நிர்வாக அலு வலர் திருநாவுக்கரசு மேட்டூர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட இ-சேவை மைய உரிமையாளர் மோகன்ராஜ் மீது மோசடி, ேபாலியாக அரசு ஆவணம் தயாரித்தல், பொதுமக்களை ஏமாற்றி பணம் பெறுதல், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    தனிப்படை அமைப்பு

    இதை அறிந்த மோகன் ராஜ் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க மேட்டூர் போலீசார் சார்பில் தனிப்படை அமைக்கப்பட் டுள்ளது. ெதாடர்ந்து தனிப்படை போலீசார், தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • ஆசிரியர் தகுதி தேர்வுதாள் மற்றும் 2-ம் சான்றிதழ்களின் மறு பிரதி தேர்வு வாரியம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
    • ரூ.160-யை இ-சேவை மையத்தில் செலுத்தி மனுபிரதி சான்றிழ் பெற்றுக் கொள்ள வேண்டும்.

    சென்னை:

    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை இ-சேவை மையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆசிரியர் தகுதித் தேர்வு 2012, 2013, 2017 மற்றும் 2019 ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வுதாள் மற்றும் 2-ம் சான்றிதழ்களின் மறு பிரதி தேர்வு வாரியம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    மேற்படி சான்றிதழ்கள் சார்ந்த தேர்வர்களுக்கு இணையதளத்தின் அரசின் இ-சேவை மையம் வழியாக வழங்க இருப்பதால் முதன்மை கல்வி அலுவலரின் வழியாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பப்படும் மறுபிரதி கோரும் விண்ணப்பங்களை இனி வரும் காலங்களில் நேற்று (15-ந் தேதி) முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

    மேற்கண்ட மறுபிரதி சான்றிதழ்கள் பெறுவதற்கு இ-சேவை மையத்தை அணுக வேண்டும். விண்ணப்பதாரர்களிடம் மனுபிரதி கட்டணத் தொகை ரூ.100 (ஆசிரியர் தேர்வு வாரிய வங்கி கணக்கு) மற்றும் இ-சேவை நிறுவனத்திற்கான சேவை கட்டணத் தொகை ரூ.60 சேர்த்து மொத்த தொகை ரூ.160-யை இ-சேவை மையத்தில் செலுத்தி மனுபிரதி சான்றிழ் பெற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அடுத்த 6 மாதத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளிலும் இ.சேவை மையமும் செயல்படும் வகையில் மாற்றி அமைக்கப்படுகிறது.
    • முதல் கட்டமாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பொது விநியோக திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

    கூட்டுறவு துறை மூலம் தமிழகத்தில் 33 ஆயிரம் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளில் அத்தியாவசிய உணவு பொருட்கள் மலிவான விலையில் விற்கப்படுகிறது.

    இதன் மூலம் இத்துறைக்கு போதிய வருமானம் வருவது இல்லை. என்றாலும் பொதுமக்களின் அத்தியாவசிய சேவையாக கருதி இதனை செய்து வருகிறது.

    பல மாநிலங்களில் ரேஷன் கடைகளுடன் இ.சேவை மையம் செயல்படுவதால் பொதுமக்களுக்கு உதவியாக இருப்பதோடு வருவாய் ஈட்டி வருகிறது. அதே போல தமிழகத்திலும் ரேஷன் கடைகளுடன் இ.சேவை மையங்களை தொடங்க கூட்டுறவு துறை திட்டமிட்டு உள்ளது. ரேஷன் கடைகளை லாபகரமாக செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

    அடுத்த 6 மாதத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளிலும் இ.சேவை மையமும் செயல்படும் வகையில் மாற்றி அமைக்கப்படுகிறது. முதல் கட்டமாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    பாஸ்போர்ட் எடுப்பதற்கான ஆன்லைன் மூலம் சமர்பித்தல், மின்சாரம், குடிநீர், கழிவுநீர், சொத்துவரி, டெலிபோன் உள்ளிட்ட கட்டணங்கள் செலுத்துதல், ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த மையத்தில் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    முதலில் கிராமப் பகுதிகளில் இத்திட்டத்தை செயல்படுத்தவும் இதற்கான இடம் தேர்வு செய்வது ஒரு சிக்கலான விஷயம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இத்திட்டத்தை செயல்படுத்த இந்திய அஞ்சல் கட்டண வங்கி, இந்திய தேசிய பேயிமென்ட் கழகம் மற்றும் தனியார் சேவை வழங்குபவர்களுடன் கூட்டுறவு துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    தமிழகத்தில் 11 ஆயிரத்து 867 தபால் அலுவலகங்கள் உள்ளன. இதில் கிராமப் புறங்களில் 10 ஆயிரத்து 259 செயல்படுகின்றன. இந்த தபால் நிலையங்கள் கிராமங்களில் செயல்படும் சுமார் 26 ஆயிரம் ரேஷன் கடைகளை நிறைவு செய்கின்றன. அவர்களால் 12 ஆயிரத்து 525 கிராம பஞ்சாயத்துகளை எளிதாக கட்டுப்படுத்த முடியும் என்று அதிகாரி நம்பிக்கை தெரிவிக்கிறார்.

    பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பங்களை வழங்குதல், திருத்தங்களை செய்து பயன்பாட்டு பில் தொகை செலுத்துதல் மற்றும் ஆதார் தரவை புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகளை தமிழக ரேஷன் கடைகள் விரைவில் வழங்க உள்ளன.

    • மதுரையில் இ-சேவை மையத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்
    • அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

    மதுரை

    மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ அலுவலகத்தில் இ-சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கிராமப்புற வறுமை ஒழிப்பு குழுக்கள், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத் துறை, கிராமப்புற தொழில் முனைவோர் மற்றும் கண்டோன்மெண்ட் போர்டு ஆகியவை மூலம் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

    தமிழகத்தின் அனைத்து எம்.எல்.ஏ. அலுவலகங்களிலும் இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏற்பாட்டில் ஏற்கனவே இ-சேவை மையம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த மையத்துக்கு மேஜை, கணினி, பயனர் எண், கடவுச்சொல் ஆகியவை அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளன. இதில் அனைத்து சேவைகளும் தொகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன.

    • இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • இத்திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். tnesevai.tn.gov.in, tnega.tn.gov.இந்த

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இணைய முறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். இத்திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். tnesevai.tn.gov.in, tnega.tn.gov.in இணையதள முகவரிகளை பயன்படுத்தலாம்.

    ஏப்ரல் 14-ந் தேதி இரவு 8 மணி வரை மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பம் கட்டணம் ரூ.3 ஆயிரம் மற்றும் நகர புறத்துக்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆகும்.

    விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். மேலும் விண்ணப்பதாரருக்கு உரிய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆகியவை விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் வழங்கப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • கூடுதல் கட்டணம் பெறும் தனியார் இ-சேவை மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மின் ஆளுமை முகமையின் மூலம் 413 அரசு இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது.

    இதில் மதுரை கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், கூட்டுறவு சங்கங்கள், மகளிர் திட்டம், கிராம தொழில் முனைவோர் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற இ-சேவை மையங்களுக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் சான்றுகள் விண்ணப்பிக்க அரசு நிர்ணயித்த கட்டணத்தினை தவிர கூடுதல் கட்டணம் பெறும் இ-சேவை மையங்கள் பற்றிய புகார்களுக்கு tnesevaihelpdesk@tb.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 மற்றும் 1800 425 1333 மூலமாகவோ புகார்களை தெரிவிக்கலாம்.

    பொதுமக்கள் சான்றிதழ்கள் பெற அரசுக்கு விண்ணப்பிக்க உருவாக்கப்பட்டுள்ள பயனாளர் நுழைவு வசதியினை தனியார் கணினி மையங்கள் மற்றும் ஜெராக்ஸ் மையங்கள் வியாபார நோக்கில் பயன்படுத்துவதாக தெரிய வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு அனுமதி பெறாமல் இ-சேவை பெயரில் தனியார் கணினி மையங்கள் மற்றும் ஜெராக்ஸ் மையங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மட்டும் உருவாக்கிய பயனாளர் நுழைவினை பயன்படுத்தி வருவாய் துறை சான்றுகள், முதியோர் உதவி தொகை போன்ற சான்றுகளை விண்ணப்பம் செய்து சான்றுகளில் எழுத்து பிழை, தவறான ஆவணங்களை இணைத்தல் மற்றும் இடைதரகர்கள் மூலம் கூடுதலாக கட்டணம் பெறுதல் போன்ற பல முறைகேடுகள் நடைபெறுவது என பல்வேறு தரப்பில் புகார்கள் வருகின்றன.

    தனியார் கணினி மையங்கள் பயனாளர் நுழைவினை பயன்படுத்தி பொதுமக்களிடம் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்தாலோ, இ-சேவை என்ற பெயர் பலகை மற்றும் சான்றுகள் சம்பந்தமான விளம்பர பலகைகள் வைத்தாலோ வருவாய் மற்றும் காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    • சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இ-சேவை ஊழியர்கள் தனியார் மையங்களை பரிந்துரை செய்கின்றனர்.
    • நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு சிவகங்கையை சேர்ந்த வடிவேல் முருகன் என்ற ஆட்டோ டிரைவர் தனது குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காக இருப்பிட சான்றிதழ் கோரி விண்ணப்பம் செய்தார்.

    இதற்காக பலமுறை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள இந்த இ-சேவை மையத்திற்கு வந்ததாகவும், அங்கு கருவி வேலை செய்யவில்லை என்றும், மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் பல்வேறு காரணங்களை கூறி சேவை மைய ஊழியர், தனியார் மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்குமாறு தெரிவித்தாராம்.

    இதுகுறித்து ஆட்டோ டிரைவர் கூறுகையில், அன்றாடம் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தும் நான் தனியார் மையங்களில் அதிக பணம் கொடுத்து குழந்தைக்கு சான்றிதழ் பெறுவது கடினமான செயல் என்று வருத்தம் தெரிவித்தார்.

    இதுபோன்று அரசு இ-சேவை மையங்களில் குறைகள் இருப்பின் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் இ-சேவை ஊழியர்கள் தனியார் மையங்களை பரிந்துரை செய்கிறார்கள் என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.ஊழியர்கள், பரிந்துரை, E-service, private

    ×