search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விரைவில் இ-சேவை மையமாக மாறும் ரேஷன் கடைகள்: ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடிவு
    X

    விரைவில் இ-சேவை மையமாக மாறும் ரேஷன் கடைகள்: ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடிவு

    • அடுத்த 6 மாதத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளிலும் இ.சேவை மையமும் செயல்படும் வகையில் மாற்றி அமைக்கப்படுகிறது.
    • முதல் கட்டமாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பொது விநியோக திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

    கூட்டுறவு துறை மூலம் தமிழகத்தில் 33 ஆயிரம் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளில் அத்தியாவசிய உணவு பொருட்கள் மலிவான விலையில் விற்கப்படுகிறது.

    இதன் மூலம் இத்துறைக்கு போதிய வருமானம் வருவது இல்லை. என்றாலும் பொதுமக்களின் அத்தியாவசிய சேவையாக கருதி இதனை செய்து வருகிறது.

    பல மாநிலங்களில் ரேஷன் கடைகளுடன் இ.சேவை மையம் செயல்படுவதால் பொதுமக்களுக்கு உதவியாக இருப்பதோடு வருவாய் ஈட்டி வருகிறது. அதே போல தமிழகத்திலும் ரேஷன் கடைகளுடன் இ.சேவை மையங்களை தொடங்க கூட்டுறவு துறை திட்டமிட்டு உள்ளது. ரேஷன் கடைகளை லாபகரமாக செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

    அடுத்த 6 மாதத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளிலும் இ.சேவை மையமும் செயல்படும் வகையில் மாற்றி அமைக்கப்படுகிறது. முதல் கட்டமாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    பாஸ்போர்ட் எடுப்பதற்கான ஆன்லைன் மூலம் சமர்பித்தல், மின்சாரம், குடிநீர், கழிவுநீர், சொத்துவரி, டெலிபோன் உள்ளிட்ட கட்டணங்கள் செலுத்துதல், ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த மையத்தில் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    முதலில் கிராமப் பகுதிகளில் இத்திட்டத்தை செயல்படுத்தவும் இதற்கான இடம் தேர்வு செய்வது ஒரு சிக்கலான விஷயம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இத்திட்டத்தை செயல்படுத்த இந்திய அஞ்சல் கட்டண வங்கி, இந்திய தேசிய பேயிமென்ட் கழகம் மற்றும் தனியார் சேவை வழங்குபவர்களுடன் கூட்டுறவு துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    தமிழகத்தில் 11 ஆயிரத்து 867 தபால் அலுவலகங்கள் உள்ளன. இதில் கிராமப் புறங்களில் 10 ஆயிரத்து 259 செயல்படுகின்றன. இந்த தபால் நிலையங்கள் கிராமங்களில் செயல்படும் சுமார் 26 ஆயிரம் ரேஷன் கடைகளை நிறைவு செய்கின்றன. அவர்களால் 12 ஆயிரத்து 525 கிராம பஞ்சாயத்துகளை எளிதாக கட்டுப்படுத்த முடியும் என்று அதிகாரி நம்பிக்கை தெரிவிக்கிறார்.

    பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பங்களை வழங்குதல், திருத்தங்களை செய்து பயன்பாட்டு பில் தொகை செலுத்துதல் மற்றும் ஆதார் தரவை புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகளை தமிழக ரேஷன் கடைகள் விரைவில் வழங்க உள்ளன.

    Next Story
    ×