search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fake"

    • நிர்வாகம் பரம்ஜித் கவுர் விண்ணப்பத்தை நிராகரித்தது, மேலும் சிங் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
    • பயோமெட்ரிக் கருவியில் பதிந்த அவரது கைரேகைகள் உண்மையான வேட்பாளரின் கைரேகைகளுடன் பொருந்தாததால் சிக்கினார்.

    பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட் பகுதியில் உள்ள ஆங்ரேஸ்சிங் என்ற நபர்,சுகாதாரப் பணியாளர்களுக்கான அரசாங்க தேர்வின் போது தனது காதலி போல் வேடம் போட்டு போலியாக நடிக்க முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டார்.

    அதிகாரிகளின் அறிக்கைகளின்படி, "ஆங்ரேஸ்சிங் பெண் வேடத்தில் ஜனவரி 7 ஆம் தேதி கோட்காபுராவின் டிஏவி பப்ளிக் பள்ளியில் தேர்வு எழுத வந்துள்ளார். அதற்காக, மேக்கப், பொட்டு மற்றும் சல்வார் கமீஸ் அணிந்து போலி வாக்காளர் மற்றும் ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி தேர்வு எழுத வந்தார்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆவணங்கள் இருந்தபோதிலும், பயோமெட்ரிக் கருவியில் பதிந்த அவரது கைரேகைகள் உண்மையான வேட்பாளரின் கைரேகைகளுடன் பொருந்தாததால் சிங்கின் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.

    முதற்கட்ட விசாரணையில், அவர் தனது காதலி பரம்ஜித் கவுர் என்ற பெண்ணுக்காக போலி ஆவணங்களை பயன்படுத்தி தன்னை பெண்ணாக சித்தரித்து தேர்வு எழுத வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, நிர்வாகம் பரம்ஜித் கவுர் விண்ணப்பத்தை நிராகரித்தது, மேலும் சிங் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    சிங்கின் மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் இப்போது கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் என்றும், முழுமையான விசாரணையில் அவரது செயல்களுக்கான கூடுதல் காரணத்தை கண்டறியப்படும் என்றும் எஸ்பி சிங் கூறினார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் போலி இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன.
    • மேலும் கட்டண தொகை விண்ணப்ப எண் விவரங் கள் அடங்கிய ஒப்புகை சீட் டும் வழங்குவதில்லை.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள தாலுகாக்கள், யூனியன் அலுவலகம், நகராட்சி, பேருராட்சி உள்பட பல்வேறு பகுதிகளில் பொது இ-சேவை மையம், தமிழ்நாடு அரசு கேபில் டி.வி. கார்ப்பரேசன், கூட்டுறவு கடன் சங்கம், மகளிர் திட்டம் உள்பட சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மையங்கள் செயல்படுகிறது.

    இந்த மையங்கள் மூலமாக வருமானச் சான்று, இருப்பிட சான்று, சாதி, முதல் பட்டாதாரி, விதவை சான்று உள்பட அனைத்து சான்றுகளுக்காக விண்ணப்பிக்க பொதுமக்கள் தங்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையங்களுக்கு செல்கின்றனர்.

    இம்மையங்களில் அரசு நிர்ணயித்துள்ள. பெரும் பாலன சேவைகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டண மாக ரூ.60 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    ஆனால் அபிராமம், கமுதி, கடலாடி சாயல்குடி பகுதியில் உள்ள பெரும் பாலான இடங்களில் கம்யூட் டர் சென்டர், ஜெராக்ஸ் கடை வைத்துள்ள பலர் உரிய அங்கிகாரம் பெறாமலேயே இ-சேவை மையம் செயல்படுத்த தொடங்கி விட்டனர். இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    அரசு துறை சான்று களுக்கு விண்ணப்பிக்க ஆதார் விவரங்களுடன் பொதுமக்கள் கணக்கு எண் உருவாக்க வேண்டியது அவசியமாகிறது. எவ்வித பயிற்ச்சிகளும் இல்லாததல் அங்கீகாரம் பெறாத இ-சேவை மையத்தினர். கணக்கு எண் உருவாக்க தகவல் களை தவறாக பயன் படுத்துகின்றனர். அதன்பின் குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் ஒருவரின் ஆதார் எண்ணை பெற்று மீண்டும் கணக்கு எண் உருவாக்குகின்றனர்.

    ஒருவருக்கு உருவாக்கப் பட்ட இந்த எண்ணை பயன்படுத்தி தங்கள் மையத்தை நாடிவரும் வெவ்வேறு நபர் களுக்கு சான்றுபெற விண்ணப்பிக்கின்றனர். மேலும் கட்டண தொகை விண்ணப்ப எண் விவரங் கள் அடங்கிய ஒப்புகை சீட் டும் வழங்குவதில்லை. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமுக ஆர்வலரிடம் கேட்டபோது:-

    இந்த பகுதி கிராமங்கள் நிறைந்த பகுதி ஆதலால் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இ-சேவை மையம் எது என்று தெரியாமல் கம்யூட்டர் கடை வைத் திருக்கும் கடைக்கு செல்வதால் அதை சாதகமாக பயன்படுத்தி கடை உரிமை யாளர்கள் சான்றிதழுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதுடன் சான்றிதழும் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். மேலும் காலதாமதமும் ஏற்படுகிறது. இந்த நிலையை போக்க சமந்தப்பட்ட துறையினர் காண்காணிக்கவேண்டும் என்றார்.

    • காளிமுத்து என்பவரையும், பெரியண்ணன் மனைவி தங்கம்மாள் என்பவரையும் தனது பெற்றோர் என கூறி அவர்கள் இறந்து விட்டதாக இறப்புச் சான்றிதழ் பெற்றுள்ளார்.
    • காளிமுத்து திருமணம் ஆகாமலேயே இறந்தவர் ஆவார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரை சேர்ந்த துரைசாமி மனைவி சாந்தி. இவர் அதே பகுதியைச் காளிமுத்து என்பவரையும், பெரியண்ணன் மனைவி தங்கம்மாள் என்பவரையும் தனது பெற்றோர் என கூறி அவர்கள் இறந்து விட்டதாக இறப்புச் சான்றிதழ் பெற்றுள்ளார். இதில் காளிமுத்து திருமணம் ஆகாமலேயே இறந்தவர் ஆவார். அதுமட்டுமின்றி, வருவாய்த்துறைக்கு விண்ணப்பித்து, 2019 மார்ச் 13 அன்று காளிமுத்துக்கும், 2021 மார்ச் 18–-ல் தங்கம்மாளுக்கும் தானே வாரிசு என போலியாக வாரிசு சான்றிதழ் பெற்றுள்ளார்.

    இதுகுறித்து தகவலறிந்த தங்கம்மாளின் மகனான வாழப்பாடியில் வசித்து வரும் சேகர் என்பவர், சாந்தி, தனது தாயார் பெயரில் போலியாக வாங்கிய வாரிசு சான்றிதழை ரத்து செய்யக் கோரி, ஆத்துார் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய ஆத்துார் கோட்டாட்சியர் சரண்யா, சாந்தி போலியாக பெற்ற 2 வாரிசு சான்றிதழ்களையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

    இதனையடுத்து, தனது தாய் தங்கம்மாள் பெயரில் போலி வாரிசு சான்றிதழ் பெற்று, தனது சொத்துக்களை அபகரிக்க முயற்சிக்கும் சாந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஏத்தாப்பூர் போலீசில் சேகர் புகார் தெரிவித்தார். போலீசார் நடவடிக்கை எடுக்காததால் ஆத்துார் நீதித்துறை முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

    மனுவை விசாரணை செய்த ஆத்துார் நடுவர் நீதிமன்ற நீதிபதி முனுசாமி, போலி வாரிசு சான்றிதழ் பெற்ற சாந்தி மற்றும் பொய் சாட்சியளித்த சாந்தியின் மகன் ராஜேந்திரன், மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பரமணி. பாப்பா ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திட ஏத்தாப்பூர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதன் பேரில் சாந்தி, ராஜேந்திரன், சுப்பரமணி மற்றும் பாப்பா ஆகிய 4 பேர் மீதும், 3 பிரிவுகளின் கீழ் ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நால்ரோடு பகுதியில் ஒருவர் திருட்டுத்தன மாக தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ஒருவர் நின்று கொண்டு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கீரம்பூர் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள நால்ரோடு பகுதியில் ஒருவர் திருட்டுத்தன மாக தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ஒருவர் நின்று கொண்டு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டி ருப்பது தெரியவந்தது.

    அவர் வைத்திருந்த அனைத்து வெளி மாநில லாட்டரி சீட்டுகளும் போலியா னவை என்றும், வெள்ளைத்தாளில் பிரிண்ட் எடுத்து விற்பனை செய்து கொண்டிருப்பதும் தெரியவந்தது.

    அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கோனூர் ஆதி திராவிடர் தெருவை சேர்ந்த ஜான் கண்ணாடி (வயது 53) என்பதும் அவரிடமிருந்து போலி லாட்டரி சீட்டுகள், செல்போன், மோட்டார் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர் நல சங்க மாநில கூட்ட மைப்பின் மேற்கு மண்டல கூட்டம் நாமக்கல்லில் நடந்தது.
    • போலி யான ஆன்லைன் வியா பாரத்தை தடுக்க மத்திய மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு கார் வியா பாரிகள் மற்றும் ஆலோசகர் நல சங்க மாநில கூட்ட மைப்பின் மேற்கு மண்டல கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    தமிழகத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் வாகனம் சம்பந்தமான சான்றுகளுக்கு விண்ணப் பித்தால் மிகுந்த தாமதமா கிறது. இதை விரைவு படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவ தும் பொதுமக்கள் ஆன்லைன் மூலம் வரும் போலியான விளம்பரத்தை நம்பி உபயோகப்ப டுத்தப்பட்ட காரை வாங்கு வதற்காக பணம் செலுத்தி ஏமாறு கின்றனர் .எனவே போலி யான ஆன்லைன் வியா பாரத்தை தடுக்க மத்திய மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் சங்கத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உபயோக படுத்தப்பட்ட கார் விற்பனை மேளா நடத்த வேண்டும். கார் மற்றும் வாகன வியாபார தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்க ணக்கான வாகன ஆலோ சகர்கள் ஆன்லைன் வர்த்த கத்தால் மிகவும் நலிவடைந்து வருகின்றனர். எனவே இவர்களுக்கு ஒரு நல வாரி யம் அமைக்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    • மேலாளராக வேலை செய்து வந்தார்.
    • இதையடுத்து போலீசார் ராஜேஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குனியமுத்தூர்,

    ஈரோடு சஞ்சை நகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது 49). இவர் கோவை குனியமுத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஷோரூம் வைத்துன்னார்.

    இவர் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது மோட்டார் சைக்கிள் ஷோரூமில் குனியமுத்தூரை சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் மேலாளராக வேலை செய்து வந்தார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது வாடிக்கையாளர்கள் அளிக்க வேண்டிய ரூ.17 லட்சத்து 75 ஆயிரத்து 700 பணத்தை, அவரது வங்கி கணக்கிற்கு ரூ.7 லட்சத்து 61 ஆயிரமாகவும், ரொக்கமாக ரூ.10 லட்சத்து 14 ஆயிரத்து 700-யையும் பெற்று கொண்டார்.

    அதன் பின்னர் அந்த பணத்தை ராஜேஷ் குமார் நிர்வாகத்திடம் ஒப்படைக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென வேலைக்கு வர வில்லை. பணத்துடன் மாயமாகி விட்டார். எனவே பணத்தை எடுத்து மோசடி செய்த ராஜேஷ் குமார் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தரவேண்டும்.

    இவ்வாறு அந்த புகார் மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பகுதிகளில் சிலர் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லாட்டரி சீட்டுகளை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.
    • இவரிடமிருந்து ரூ.53 ஆயிரம், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பகுதிகளில் சிலர் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லாட்டரி சீட்டுகளை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.

    போலி லாட்டரி சீட்டு விற்பனை

    இந்த லாட்டரி சீட்டுகளை இவர்களே பிரிண்ட் அடித்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் பரமத்தி வேலூர் மற்றும் பரமத்தி சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளிமாநில லாட்டரி சீட்டுகள் அமோகமாக விற்பனையாவதாக பரமத்தி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    8 பேர் கைது

    தகவலின் அடிப்படையிலா லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சேர்ந்த தங்கபாண்டி (வயது 24), ராஜ்குமார் (24), சதாசிவம் (25), கரூர் மாவட்டம், வெங்கமேட்டை சேர்ந்த மகாதேவன் (37), காந்தி நகரைச் சேர்ந்த சுப்பிரமணி (51),நாமக்கல் அருகே உள்ள வரப்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி (60), சுங்ககாரன்பட்டியைச் சேர்ந்த வேலுச்சாமி (37) மற்றும் ஒருவர் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து ரூ.52 ஆயிரத்து 700 ரொக்கத்தையும், 3 இருசக்கர வாகனங்களையும், ஏராளமான வெளி மாநில லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் பரமத்தியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பரமத்தியைச் சேர்ந்த திருக்கேதீஸ்வரன் (29), திலீபன் (27) மற்றும் மரவாபாளையத்தைச் சேர்ந்த ரகு(26) ஆகிய 3 பேர்களையும் பரமத்தி போலீசார் கைது செய்தனர்.

    வெளிமாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல்

    அவர்களிடமிருந்து ரூ.700-ஜ பறிமுதல் செய்து விற்பனைக்கு வைத்திருந்த வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலி மதுபான ஆலை இயங்கிய விவகாரத்தில் மயிலாடுதுறை சீர்காழி சிங்கார தோப்பு பகுதி குமார் என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
    • போலி மதுபான ஆலை நடத்திய விவகாரத்தில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஈரோடு:

    ஈரோடு சூளை பூசாரி தோட்டத்தில் உள்ள ஒரு குடோனில் செயல்பட்டு வந்த போலி மதுபான தயாரிப்பு ஆலையை கடந்த மாதம் 9-ந் தேதி ஈரோடு மதுவிலக்கு போலீசார் கண்டுபிடித்தனர்.

    போலி மதுபானம் தயாரித்ததாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, எலந்த குளம் பள்ளர் தெருவை சேர்ந்த வீரபாண்டி (51), மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த முகேஷ் (38) உள்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் போலி மதுபான ஆலை விவகாரத்தில் சீர்காழி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    மதுவிலக்கு போலீசார் சீர்காழி பகுதியில் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் ஈரோட்டில் போலி மதுபான ஆலை இயங்கிய விவகா ரத்தில் தொடர்புடைய மயிலாடு துறை சீர்காழி சிங்கார தோப்பு பகுதியில் இருந்த குமார் (48) என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

    அவரை ஈரோடு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கடந்த 2-ந் தேதி நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

    ஈரோட்டில் போலி மதுபான ஆலை நடத்திய விவகாரத்தில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி சென்றுள்ளது.
    • சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர்,

    திருப்பூர் மாவட்ட கலெக்டராக வினீத் இருந்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கலெக்டர் வினீத் பெயரில், அவரது புகைப்படத்துடன் வாட்ஸ்-அப் எண்ணில் இருந்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி சென்றுள்ளது. அதில் எவ்வாறு இருக்கிறீர்கள்? வேலை எவ்வாறு செல்கிறது? என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    போலி வாட்ஸ் அப் கணக்கு

    இதற்கு அரசு அதிகாரிகள் சிலர் பதில் அனுப்பியுள்ளனர். இதன் பின்னர் வங்கி விவரம் உள்ளிட்ட பணம் தொடர்பான விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் இது குறித்து கலெக்டர் வினீத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

    அப்போது அவரது பெயரில், அவரது புகைப்படத்தை பயன்படுத்தி வாட்ஸ்-அப் கணக்கு போலியாக தொடங்கி, மர்ம ஆசாமிகள் மோசடியில் ஈடுபட முயற்சி செய்தது தெரியவந்தது. இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலீசில் புகார்

    இதற்கு முன்பு திருப்பூர் மாவட்ட கலெக்டராக விஜயகார்த்திகேயன் இருந்த போது, அவரது பெயரில் போலியாக பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி சிலரிடம் மர்ம ஆசாமிகள் பணம் கேட்டனர். இது தொடர்பாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த சம்பவம் குறித்து கலெக்டர் வினீத் கூறியதாவது:- போலி யாக வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கி, பலருக்கும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் விசா ரணையில் முதற்கட்டமாக அந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது, செல்போன் டவர் ராஜஸ்தானில் காண்பித்துள்ளது. இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனது பெயரில் இருந்தோ அல்லது புகைப்படத்தை பயன்படுத்தியோ ஏதாவது எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்தால் போலீசில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

    சாத்தூர் அருகே ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என கூறி நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார். #FakeSubInspector
    சாத்தூர்:

    சாத்தூரை அடுத்த படந்தால் அருகே தென்றல் நகரில் வசித்து வரும் பழனிசாமி என்பவரது மகன் கண்ணன்(வயது39). இவர் ரெயில்வேயில் சப்-இன்ஸ்பெக்டர் என்று கூறி சாத்தூரில் நிதி நிறுவனம் நடத்தி அதிக வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.

    இதனை அறிந்த படந்தால் கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த தகவலின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் கண்ணன் கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் என்றும் நிதிநிறுவனத்தில் பணம் பெற்றவர்கள் ஏமாற்றிவிடாமல் இருக்க சப்-இன்ஸ்பெக்டர் என கூறியதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

    இதனைத்தொடர்ந்து அவர் வசித்து வந்த வீட்டை சோதனையிட்டதில் ரெயில்வே காவலர் உடை மற்றும் அவரது மோட்டார் சைக்கிளில் கண்ணன் ஆர்.பி.எப். என்று எழுதி இருந்ததும் தெரிய வந்தது. காவலர் உடையையும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்த போலீசார், கண்ணனையும் கைது செய்தனர். அவரை சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

    ஜெயலலிதாவின் மகள் என்று அம்ருதா தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை என்று ஐகோர்ட்டில் தமிழக அரசின் வழக்கறிஞர் வாதம் செய்தார். #Amrutha #Jayalalithaa
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி, சென்னை ஐகோர்ட்டில் பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்ற பெண் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதனைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.



    இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், அரசு பிளடர் ராஜகோபாலன், மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பிரகாஷ், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சார்பில் வக்கீல் தொண்டன் சுப்பிரமணியன், தீபக் சார்பில் எஸ்.எல்.சுதர்சனம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அதன் விவரம் வருமாறு:-

    மனுதாரர் வக்கீல்:- என்.டி.திவாரி வழக்கில், ஒருவரை மரபணு சோதனைக்கு செல்லவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே, இதுபோன்ற சோதனைக்கு உத்தரவிட ஐகோர்ட்டுக்கு அதிகாரம் உண்டு. மரபணு சோதனையில் பெற்றோர் என்று நிரூபணம் ஆகவில்லை என்றால், அதனால் அவருக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருதமுடியாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கில் கூறியுள்ளது.

    தீபக் வக்கீல்:- மனுதாரர் அம்ருதாவுக்கு தற்போது 37 வயது. அவரிடம் கண்டிப்பாக ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பள்ளிச்சான்றிதழ் என்று ஏதாவது ஒரு ஆதாரமாவது இருக்கும். ஆனால் அவற்றில் ஒன்றைக்கூட தாக்கல் செய்யவில்லை. அ.தி.மு.க. உறுப்பினர் அட்டையை மட்டும் தாக்கல் செய்துள்ளார்.

    மனுதாரர் வக்கீல்:- இவர்களை பொறுத்தவரை சந்தியாவுக்கு ஜெயக்குமார், ஜெயலலிதா என்ற இருவர் மட்டுமே வாரிசு. 3-வதாக பிறந்த சைலஜா என்பவரை இவர்கள் ஏற்கவில்லை. ஆனால் சந்தியாவுக்கு அவரது கணவர் இறந்த பின்னர் சைலஜா பிறந்ததால் அவரை பெங்களூருவில் வைத்து வளர்த்துள்ளார்.

    அரசு பிளடர்:- சைலஜா உயிருடன் இருந்தபோது இதுபோன்ற குற்றச்சாட்டை சுமத்தியதால் அவர் மீது ஜெயலலிதா கிரிமினல் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார்.

    மனுதாரர் வக்கீல்:- பின்னர் அந்த வழக்கை வலியுறுத்த விரும்பவில்லை என்று ஜெயலலிதா தரப்பில் கூறியதால், அந்த அவதூறு வழக்கு தள்ளுபடியாகிவிட்டது என்று கூறப்படுகிறது. சைலஜாவுக்கும், சாரதி என்பவருக்கும் திருமணம் நடந்தது. அதனால் தனக்கு பிறந்த குழந்தையை அவர்களது குழந்தையாக வளர்க்கும்படி ஜெயலலிதா ஒப்படைத்துள்ளார். அதேநேரம் இந்த உண்மையை சைலஜா சாகும்வரை அம்ருதாவிடம் சொல்லவில்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம் சாரதி இறக்கும் தருவாயில் உண்மையை கூறியுள்ளார்.

    அதன்பின்னர் தான் ஜெயலலிதா தன் தாய் என்று அம்ருதாவுக்கு தெரியவந்துள்ளது. மனுதாரரின் பிரச்சினை இரண்டு தலைமுறைக்கு முன்பே தொடங்கிவிட்டது. ஒரு குழந்தை யாருக்கு பிறந்தது என்று அறிவியல் தான் உறுதியான முடிவை அறிவிக்கும். சட்டம் இதுபோல அறிவிக்க முடியாது. அதனால் மரபணு சோதனைக்கு உட்படுத்தினால் தான் மனுதாரர் யாருடைய மகள்? என்று தெரியவரும். அதனால் அம்ருதா, தீபா ஆகியோரது ரத்தமாதிரிகளை கொண்டு மரபணு சோதனை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.

    தீபக் வக்கீல்:- தீபக்கின் பாட்டி சந்தியா 1971-ம் ஆண்டு உயில் எழுதிவைத்துள்ளார். அதில் சைலஜாவின் பெயரே இல்லை.

    நீதிபதி எஸ்.வைத்தியநாதன்:- சைலஜா படித்துள்ளாரா? அவர் சந்தியாவின் மகள் என்று வெளியில் ஏன் சொல்லவில்லை?

    மனுதாரர் வக்கீல்:- அவர் நன்றாக படித்தவர். இந்துஸ்தான் விமான நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். பல கேள்விகள் இவர்களது வாழ்க்கையில் உள்ளது.

    நீதிபதி:- ஆமாம், சைலஜா யார்? என்பதில் கேள்விக்குறி. அம்ருதா யார் மகள்? என்பதும் கேள்விக்குறி முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்திலும் கேள்விக்குறி. எல்லாவற்றிலும் கேள்விக்குறி தான்.

    மனுதாரர் வக்கீல்:- அம்ருதா ஜெயலலிதாவின் மகள் என்பது உண்மை. எனவே மரபணு சோதனைக்கு உத்தரவிட வேண்டும். அதில் நிரூபிக்கவில்லை என்றால், அதனால் ஏற்படும் பின்விளைவுகளை மனுதாரர் சந்திக்க தயாராக உள்ளார்.

    அட்வகேட் ஜெனரல்:- இந்த வழக்கு ஜெயலலிதாவின் சொத்துகளை குறிவைத்து தொடரப்பட்டுள்ளது. இதில் கூட்டுச்சதி உள்ளது. 1980-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந்தேதி அம்ருதா பிறந்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது. அதே ஆண்டு ஜூலை 6-ந்தேதி நடந்த 27-வது ‘பிலிம்பேர்‘ விருது நிகழ்ச்சியில் ஜெயலலிதா கலந்துகொண்டார். அந்த வீடியோ காட்சியை பாருங்கள். (இவ்வாறு கூறி அந்த வீடியோ காட்சியை ‘லேப்-டாப்பில்‘ நீதிபதிக்கு போட்டுக்காட்டினார்) நிறைமாத கர்ப்பிணியாக ஜெயலலிதா இல்லை. எனவே, இது முழுக்க முழுக்க பொய் வழக்கு. இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது எதுவுமே உண்மை இல்லை. அனைத்து விவரங்களும் நகைச்சுவையாக உள்ளது.

    1996-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை ஜெயலலிதாவை சந்தித்தாகவும், போயஸ் கார்டனில் அதிக நாட்கள் வசித்ததாகவும் மனுதாரர் கூறுகிறார். ஆனால் ஒரு புகைப்படம் கூடவா அவருடன் எடுத்திருக்கவில்லை? 242 வினாடிகள் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசியதாக ரசீதை மனுதாரர் தாக்கல் செய்துள்ளார். ஆனால், அந்த போனில் ஜெயலலிதாவிடம் தான் பேசினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே, எந்த ஆதாரமும் இல்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்.

    நீதிபதி வைத்தியநாதன்:- இந்த வழக்கை பார்த்தாலே ஒரு சினிமா படம் போல் உள்ளது. ‘கிளைமாக்ஸ்’ காட்சியை நான் எழுத வேண்டும்.

    இவ்வாறு கூறி விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.  #Amrutha #Jayalalithaa  #tamilnews 
    நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 3-ம் இடத்துக்கு தள்ளப்படும், மாநில கட்சிகள் கூட்டணி, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறும் என்று அருண் ஜெட்லி கூறினார். #ArunJaitley #Congress #Manufacturing
    புதுடெல்லி:

    மத்திய மந்திரி அருண் ஜெட்லி தனது முகநூல் பக்கத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    2019-ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல், தங்களுக்கான தேர்தல் இல்லை என்பதை காங்கிரஸ் தலைவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். பிரதமருக்கும், அவருடைய போட்டியாளர்களுக்கும் இடையிலான புகழ் இடைவெளி மிகப்பெரிதாக உள்ளது.

    மொத்த மக்களவை தொகுதிகளில் 50 சதவீத தொகுதிகள் உள்ள உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி இல்லவே இல்லை. அல்லது, 3-வது, 4-வது இடத்தில் உள்ளது. எனவே, காங்கிரஸ் கட்சி மொத்தம் 225 தொகுதிகளில்தான் போட்டியிடும் நிலையில் உள்ளது. அங்கெல்லாம் பா.ஜனதாவுடன்தான் நேரடி போட்டி நிலவும்.

    எனவே, தேர்தல் முடிவில், காங்கிரஸ் கட்சி 3-வது இடத்துக்கு ஓரம்கட்டப்படும். மாநில கட்சிகள் அடங்கிய கூட்டாட்சி முன்னணி, எதிர்க்கட்சி அந்தஸ்தை கைப்பற்றும்.

    காங்கிரஸ் கட்சி, ஊழல் புகாரில் சிக்கித் தவித்த கட்சி. ஆனால், பிரதமர் மோடியோ ஊழலற்ற ஆட்சியை தந்து வருகிறார்.

    எனவே, காங்கிரஸ் கட்சி கண்டுபிடித்த உத்திதான், இட்டுக்கட்டுவது. உண்மையான பிரச்சினை இல்லை என்றால், புதிதாக உருவாக்குவது. அப்படி போலியாக உருவாக்கியதுதான், ‘ரபேல்’ போர் விமான ஒப்பந்த விவகாரம். ஆனால் அது எடுபடவில்லை.

    அது, அரசுக்கும், அரசுக்கும் இடையிலான ஒப்பந்தம். இதில், தனிநபர் சம்பந்தப்படவில்லை. தங்களது போர் திறனுக்கு அந்த விமானம்தான் ஏற்றது என்று ராணுவப்படைகள் விருப்பம் தெரிவித்தன. ரபேல் போர் விமானங்களின் விலையை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி மந்திரிகளும் சொல்லவில்லை. ஏனென்றால், இது தேசநலன் சம்பந்தப்பட்ட விவகாரம்.

    பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்தித்தபோது, அவர் இது ரகசிய ஒப்பந்தம் அல்ல என்று தன்னிடம் கூறியதாக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் அந்த கூற்று, உடைத்து எறியப்பட்டு விட்டது.

    முன்பு, போபர்ஸ் ஊழலில் காங்கிரஸ் கட்சி சிக்கி தவித்தபோது, அதை திசைதிருப்ப வி.பி.சிங் மகன் பெயரில் செயின்ட் கிட்ஸ் தீவில் போலியாக ஒரு வங்கிக்கணக்கு உருவாக்கப்பட்டது. ‘நாங்கள் ஊழல்வாதி என்றால், நீங்களும் ஊழல்வாதிதான்’ என்று காட்டுவதற்காக காங்கிரஸ் கட்சி அப்படி செய்தது. அதுபோன்றுதான் இப்போதும் செய்கிறது.

    காங்கிரஸ் கட்சியின் மற்றொரு வியூகம், மதச்சார்பின்மைக்கு புதிய அர்த்தம் கொடுத்து, சிறுபான்மையினர் ஓட்டுகளை பெறுவது. ‘இந்து பாகிஸ்தான்’ என்ற சொற்றொடரும், தலீபான்களுடன் இந்துக்களை ஒப்பிடுவதும் சிறுபான்மையினர் ஓட்டுகளை பெறுவதற்கான நோக்கம்தான். அதன்மூலம், இந்துக்களுடன் பகையை உண்டாக்க பார்க்கிறது. ஆனால், அது காங்கிரஸ் கட்சிக்கே பாதிப்பை உண்டாக்கி விடும்.

    இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார்.  #ArunJaitley #Congress #Manufacturing  #tamilnews 
    ×