என் மலர்
நீங்கள் தேடியது "additional charge"
- கூடுதல் கட்டணம் பெறும் தனியார் இ-சேவை மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மின் ஆளுமை முகமையின் மூலம் 413 அரசு இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது.
இதில் மதுரை கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், கூட்டுறவு சங்கங்கள், மகளிர் திட்டம், கிராம தொழில் முனைவோர் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற இ-சேவை மையங்களுக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சான்றுகள் விண்ணப்பிக்க அரசு நிர்ணயித்த கட்டணத்தினை தவிர கூடுதல் கட்டணம் பெறும் இ-சேவை மையங்கள் பற்றிய புகார்களுக்கு tnesevaihelpdesk@tb.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 மற்றும் 1800 425 1333 மூலமாகவோ புகார்களை தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் சான்றிதழ்கள் பெற அரசுக்கு விண்ணப்பிக்க உருவாக்கப்பட்டுள்ள பயனாளர் நுழைவு வசதியினை தனியார் கணினி மையங்கள் மற்றும் ஜெராக்ஸ் மையங்கள் வியாபார நோக்கில் பயன்படுத்துவதாக தெரிய வருகிறது.
மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு அனுமதி பெறாமல் இ-சேவை பெயரில் தனியார் கணினி மையங்கள் மற்றும் ஜெராக்ஸ் மையங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மட்டும் உருவாக்கிய பயனாளர் நுழைவினை பயன்படுத்தி வருவாய் துறை சான்றுகள், முதியோர் உதவி தொகை போன்ற சான்றுகளை விண்ணப்பம் செய்து சான்றுகளில் எழுத்து பிழை, தவறான ஆவணங்களை இணைத்தல் மற்றும் இடைதரகர்கள் மூலம் கூடுதலாக கட்டணம் பெறுதல் போன்ற பல முறைகேடுகள் நடைபெறுவது என பல்வேறு தரப்பில் புகார்கள் வருகின்றன.
தனியார் கணினி மையங்கள் பயனாளர் நுழைவினை பயன்படுத்தி பொதுமக்களிடம் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்தாலோ, இ-சேவை என்ற பெயர் பலகை மற்றும் சான்றுகள் சம்பந்தமான விளம்பர பலகைகள் வைத்தாலோ வருவாய் மற்றும் காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
- நெல்லை மாநகர பகுதி மக்கள் தொகை பெருக்கம், வணிக வளாகங்கள், வாகனங்களின் போக்குவரத்து அதிகரிப்பு காரணமாக பெரும்பாலான இடங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகிறது.
- இதனை சரி செய்யும் விதமாக மாநகர பகுதியில் போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கு மக்கள் தொகை பெருக்கம், வணிக வளாகங்கள், வாகனங்களின் போக்குவரத்து அதிகரிப்பு காரணமாக பெரும்பாலான இடங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகிறது.
இதனை சரி செய்யும் விதமாக மாநகர பகுதியில் போக்குவரத்து அதிகம் உள்ள சாலையான டவுன்-குற்றாலம் சாலை, எஸ்.என். ஹைரோடு, வண்ணார்பேட்டை புறவழிச்சாலை, மத்திய சிறை வழியாக செல்லும் திருவனந்தபுரம் சாலை உள்ளிட்ட சாலை களை அகலப்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் ஒரு பகுதியாக பழைய பேட்டை சோதனை சாவடியில் இருந்து டவுன் தொண்டர் சன்னதி வரையிலும் ஒடுக்கமாகவும், சேதமடைந்தும் காணப்பட்ட சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் நெடுஞ் சாலைத்துறை தற்போது பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக கண்டியப்பேரி முக்கு முதல் தொண்டர் சன்னதி வரை யிலும் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு விட்டது.
தொடர்ந்து கண்டியப்பேரி வளைவு பகுதியில் உள்ள பழைய பாலம் சிறிய அளவில் இருப்பதால் அந்த பகுதியில் விபத்துக்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே அதனை யும் அகலப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த பாலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு புதிதாக காலம் கட்டும் பணி அங்கு நடைபெற்று வரு கிறது.
இதனால் அந்த பகுதி வழியாக சிறிய ரக வாக னங்கள் மட்டும் செல்வதற்கு தற்காலிக சாலை அமைக்கப் பட்டுள்ளது. அதே நேரத்தில் நெல்லையில் இருந்து தென்காசி மார்க்கமாக செல்லும் பஸ்கள் காட்சி மண்டபத்தில் இருந்து கோடீஸ்வரன் நகர், புதுப்பேட்டை பஸ் நிறுத்தம் வழியாக சென்று பழைய பேட்டை சோதனை சாவடி வழியாக தென்காசி நான்கு வழி சாலையில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
கடந்த 10 நாட்களாக இந்த வழியாக பஸ்கள் இயங்கி வரும் நிலையில் எந்த விதமான அரசு அறிவிப்பும் இன்றி கூடுதல் கட்டணமாக ரூ.3 வசூல் செய்யப்படுகிறது. இதேபோல் மறுமார்க்கமாக தென்காசியில் இருந்து நெல்லைக்கு வரும் அரசு பஸ்களிலும் கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தென்காசியில் இருந்து நெல்லைக்கு ரூ.32 கட்டண மாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.35 வசூலிக்கப்படுகிறது.
இதுகுறித்து கண்டக்டரிடம் பயணிகள் கேட்கும் போது, அவர்கள் போக்கு வரத்து கழக உத்தரவு என்று கூறிவிட்டு டிக்கெட்டை வசூல் செய்து விடுகின்றனர். இது தொடர்பாக சில பயணிகள் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அடிக்கடி தென்காசி செல்லும் பஸ்களில் நடக்கிறது.
ஆனாலும் பஸ்கள் வழக்கமான பாதையை பயன்படுத்தாமல், மாற்றுப்பாதையில் சுற்றி செல்வதால் டீசல் செலவை ஈடுகட்டும் வகையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறுகின்றனர்.
இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கோவை மண்டலத்தில் 1200 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் சில வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களில் அரசு அனுமதித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து பொது தொழிலாளர் சங்க மாநில பொது செயலாளர் சுப்பிரமணியம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மண்டல போக்குவரத்து அதிகாரியிடம் சில தகவல்கள் கேட்டார். அதில் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு ரூ.45 கட்டணம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் ரூ.64 வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்துதுறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சாதாரண பஸ்களில் கட்டணம் ரூ.45 மட்டும் தான். வால்பாறை- பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் பஸ்களில் தான் ரூ.64 கட்டணமாக உள்ளது என கூறுகின்றனர். ஆனால் வால்பாறை- பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் சாதாரண பஸ்களை கூட எக்ஸ்பிரஸ் பஸ் என பெயரை மட்டும் மாற்றி விட்டு, ரூ.64 கட்டணமாக வசூலிக்கின்றனர் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து கோவை கன்ஸ்யூமர்காஸ் அமைப்பின் நிர்வாகி கதிர்மதியோன் கூறியதாவது:-
கோவையில் இருந்து சில வழித்தடங்களில் இயக்கப்படும் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கோவை -திருப்பூருக்கு அரசு கட்டணம் ரூ.33-க்கு பதிலாக சில பஸ்களில் ரூ.36 வசூலிக்கப்படுகிறது.
கோவையில் இருந்து ஈரோட்டுக்கு அரசு அனுமதித்த ரூ.61-க்கு பதிலாக ரூ.85 வசூலிக்கின்றனர். ஆனால் தனியார் பஸ்களில் ரூ.65 மட்டும் வசூலிக்கின்றனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் போக்குவரத்து இணை கமிஷனரிடம் புகார் செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
நாடாளுமன்ற விவகார துறை மற்றும் வேதி மற்றும் உர துறைக்கான மந்திரி அனந்த குமார் நேற்று உடல்நலக் குறைவால் பெங்களூருவில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை நடைபெற்றது.
இந்நிலையில், அனந்த குமார் மறைந்த நிலையில், அவர் வகித்து வந்த பொறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்பட்டு உள்ளன.

இதுதொடர்பாக, ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமருக்கு நாடாளுமன்ற விவகார துறை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வேதி மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு சதானந்த கவுடாவுக்கு வழங்கப்பட்டு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தலின்படி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என தெரிவித்துள்ளது. #NarendraSinghTomar #SadanandaGowda
சென்னை கோயம்பேட்டில் இருந்து வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த பஸ்களில் சென்னை புறநகர் பகுதியில் இருந்து கோயம்பேடுக்கு பயணிகளை ஏற்றி வருகிறார்கள்.
வெளியூர் பஸ்களில் தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் பூந்தமல்லியில் இருந்து போரூர், கிண்டி வழியாக இயக்கப்பட்டன.
தற்போது மதுரவாயல் வழியாக பூந்தமல்லியில் இருந்து கோயம்பேடுக்கு செல்கின்றன. முன்பு போரூர், கிண்டி வழியாக 24 கிலோ மீட்டர் தூரத்தில் பஸ்கள் இயக்கப்பட்டன.
மெட்ரோ ரெயில் பணி மற்றும் போரூர் மேம்பாலம் பணி காரணமாக மாற்று பாதையான மதுரவாயல் வழியாக 16 கிலோ மீட்டர் தூரத்தில் இயக்கப்படுகின்றன. அப்பணிகள் முடிந்தாலும் தற்போதும் பஸ்கள் மதுரவாயல் வழியாகவே இயக்கப்படுகின்றன.
தூரத்தின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதால் பூந்தமல்லியில் இருந்து கோயம்பேடுக்கு மதுரவாயல் வழியாக செல்லும் வெளியூர் பஸ்சில் ரூ.13 கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால் ரூ.19 கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இதுகுறித்து பயணி ஒருவர் கூறும்போது, “வெளியூரில் இருந்து சென்னைக்குள் வரும் பஸ்களில் தூரம் குறைக்கப்பட்டாலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள். மதுரவாயல் வழியாக செல்லும் பஸ் குறைந்த தூரத்தில் செல்வதால் கட்டணம் குறைக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வது இல்லை. ரூ.19 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது. சில பஸ்களில் ரூ.24 கட்டணம் வசூல் செய்கிறார்கள்” என்றார்.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, “கிண்டி வழியாக பஸ்களை இயக்க போக்குவரத்து போலீசார் அனுமதி அளிப்பது இல்லை. போலீசார் அனுமதி கொடுத்தால் சென்னை நகர சாலைக்குள் பஸ்களை இயக்க தயாராக இருக்கிறோம்” என்றார்.
தினமும் கோயம்பேட்டில் இருந்து வெளியூருக்கு 500 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு மாதமும் 50 லட்சத்துக்கு மேல் வசூல் செய்யப்படுகிறது. #Buses
கும்பகோணம் பஸ் நிலையத்தில் இருந்து விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த ஒரு அரசு பஸ் நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டு சென்றது. அந்த பஸ் 20.கி.மீ. சென்று விட்ட நிலையில் டிக்கெட் வாங்கிய பயணி ஒருவர் ரூ.220 கட்டணத்துக்கு பதில் ரூ.270 கட்டணம் கேட்டதால் கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது கண்டக்டர் அணைக்கரை பகுதியில் காடுவெட்டி குருமரணத்தையொட்டி அவரது ஆதரவாளர்கள் பஸ்களின் கண்ணாடியை உடைப்பதால் பஸ் அணைக்கரை வழியாக செல்லாமல் மயிலாடுதுறை வழியாக சுற்றி செல்கிறது.
அதற்காக ரூ.50 கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த பயணி இதுபற்றி பஸ்சில் ஏறும் போது ஏன் கூறவில்லை. என்னால் கூடுதல் கட்டணம் கொடுத்து வரமுடியாது. என்னை கும்பகோணம் பஸ் நிலையத்தில் விட்டு விட்டு செல்லவேண்டும் என்று கறாராக கூறினார். எவ்வளவு கூறியும் அவர் சமாதானம் அடையாததால் அந்த பஸ்சை மீண்டும் கும்பகோணத்துக்கு ஓட்டி வந்து குறிப்பிட்ட பயணியை இறக்கி விட்டு சென்றனர்.
வழக்கமாக பஸ் டிரைவர்- கண்டக்டர்கள் பயணிகளின் கோரிக்கையை ஏற்க மாட்டார்கள். ஆனால் இந்த பஸ் டிரைவரும், கண்டக்டரும் பயணியின் நியாயமான கோரிக்கையை ஏற்று செயல்பட்டது மற்ற பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பின்னர் கூடுதல் கட்டணத்தை ஏற்று கொண்ட பயணிகளுடன் அந்த பஸ் மீண்டும் சென்னை புறப்பட்டு சென்றது. #tamilnews






