search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rashtrapathi bhavan"

    மத்திய மந்திரி தோமருக்கு நாடாளுமன்ற விவகார துறை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பும், சதானந்த கவுடாவுக்கு வேதி மற்றும் உர துறை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. #NarendraSinghTomar #SadanandaGowda
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற விவகார துறை மற்றும் வேதி மற்றும் உர துறைக்கான மந்திரி அனந்த குமார் நேற்று உடல்நலக் குறைவால் பெங்களூருவில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை நடைபெற்றது.

    இந்நிலையில், அனந்த குமார் மறைந்த நிலையில், அவர் வகித்து வந்த பொறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்பட்டு உள்ளன.



    இதுதொடர்பாக, ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமருக்கு நாடாளுமன்ற விவகார துறை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், வேதி மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு சதானந்த கவுடாவுக்கு வழங்கப்பட்டு உள்ளது.  பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தலின்படி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என தெரிவித்துள்ளது. #NarendraSinghTomar #SadanandaGowda 
    ×