search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Surcharge"

    • விதிகளை மீறும் ஆம்னி பஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்து இருந்தது.
    • 223 பஸ்கள் விதிகளை மீறி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    சென்னை:

    பண்டிகை காலங்களில் வெளியூர் செல்லும் மக்களிடம் ஆம்னி பஸ்களில் தாறுமாறான கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம். இது தொடர்பாக உரிமையாளர்களுடன் பேசி கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டது.

    தீபாவளி பண்டிகையின் போது விதிகளை மீறும் ஆம்னி பஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்து இருந்தது.

    கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்கள் 6699 ஆம்னி பஸ்களை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது 1223 பஸ்கள் விதிகளை மீறி செயல்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது

    இதையடுத்து அந்த பஸ்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது அபராதமாக ரூ.18 லட்சத்து 76 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

    கூடுதல் கட்டணம் வசூலித்த எட்டு ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். இதேபோல் ஊர்களுக்கு சென்றவர்கள் நாளை முதல் திரும்பி வர தொடங்குவார்கள். அப்போதும் ஆம்னி பஸ்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் உரம் விற்பனை உரிமம் ரத்து என்று கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி தகவல் தெரிவித்துள்ளார்.
    • அதிகபட்ச சில்லரை விலை ப்பட்டியலின் விவரங்களை தகவல் பலகையில் விவசாயி களின்பார்வைக்கு தெரியும் வண்ணம் வைக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்து ள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் பருத்தி, மக்காச்சோளம், நெல், கம்பு போன்ற பயிர்களு பயிர் செய்து வருகிறது. மேலும் ஏற்க னவே உள்ள பயிர்க ளுக்கு விவசாயிகள் உர ங்கள்இட்டும் பராமரித்து வருகின்றனர். தற்சமயம் இம்மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் யூரியா 1189 மெ.டன், டி.ஏ.பி 939 மெ.டன். பொட்டாஷ் 1421 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 889 மெ,டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 5362 மெ.டன் அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் உர விற்பனையாளர்கள் அரசு நிர்ணயித்த விலைக்கு மிகாமல் உரங்களை விவசா யிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். இரசாயன உரங்களின் இருப்பு மற்றும் அதிகபட்ச சில்லரை விலை ப்பட்டியலின் விவரங்களை தகவல் பலகையில் விவசாயி களின்பார்வைக்கு தெரியும் வண்ணம் வைக்க வேண்டும். உர விற்பனையாளர்கள் விவசாயிகளின் விருப்ப த்திற்கு மாறாக உரங்களுடன் இணை இடுபொருட்களை வாங்கிட கட்டாயப்படுத்த கூடாது. மேலும் உர விற்பனை யாளர்கள் உரங்களை விற்பனை செய்யும் போது விற்பனை ரசீது வழங்கிட வேண்டும். மேற்கண்ட அரசு விதிகளை மீறும் உர விற்பனையாளர்கள் மீது 1985- உரச்சட்டத்தின் அடிப்படையில் கடுமை யான நடவடிக்கை மேற்கொ ள்வதுடன் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×