என் மலர்
நீங்கள் தேடியது "TN Assembly"
- சட்டசபையில் 2 நாட்களாக நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
- தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும்.
2026-27-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த 17-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து சட்டசபையில் 2 நாட்களாக நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
சட்டசபையில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஐயப்பன் கூறியதாவது:
வருகின்ற சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆசியோடும், புரட்சி தலைவி அம்மா ஆசியோடும் மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என்று அவரை வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2021 தேர்தலில் வெற்றி பெற்றபோது மகிழ்ச்சியோடு கவலையாக இருந்தது.
- நிதிநிலை சீராக இல்லாத நிலையிலும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.
சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* 2021 தேர்தலில் வெற்றி பெற்றபோது மகிழ்ச்சியோடு கவலையாக இருந்தது.
* மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் ஆட்சி நடத்த முடியுமா? என்ற கவலை இருந்தது.
* நமக்கு சிறிதும் ஒத்துழைக்காத ஓரவஞ்சனை காட்டும் மத்திய அரசு.
* நிதிநிலை சீராக இல்லாத நிலையிலும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.
* கடந்த 5 ஆண்டுகளில் எனக்கும், எனது மனசாட்சிக்கும் மட்டுமே கட்டுப்பட்டு உழைத்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகன் விரைவில் மீண்டு வர விரும்புகிறேன்.
- சட்டசபையை கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் நடத்திய சபாநாயகர் அப்பாவு அவர்களுக்கு நன்றி.
சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகன் விரைவில் மீண்டு வர விரும்புகிறேன். அவருக்கு என் நன்றி.
* குறைகளை சுட்டிக்காட்டுவதில் கண்ணியத்தை கடைபிடித்த எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி.
* சட்டசபையை கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் நடத்திய சபாநாயகர் அப்பாவு அவர்களுக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
- எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக கையாண்டிருக்கிறேன்.
- எனக்கும், ஆளுநருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த முரணும் கிடையாது.
சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* 5 ஆண்டுகள் ஆட்சி குறித்த மனநிறைவோடு நான் உங்கள் முன்னால் நிற்கிறேன்.
* எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக கையாண்டிருக்கிறேன்.
* தமிழகத்தின் சுயமரியாதைக்கு இழுக்கு வந்தால் அதனை எதிர்க்கும் முதல் நபராக நான் இருப்பேன்.
* தமிழகத்தின் 234 தொகுதிகளையும் எனது தொகுதிகளாக பாவித்து பணியாற்றி வருகிறேன்.
* வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாகுபாடும் இன்றி பணியாற்றி இருக்கிறேன்.
* அடுத்த 2 மாதத்தில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.
* எனக்கும், ஆளுநருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த முரணும் கிடையாது.
* தமிழ்நாட்டை இன்னும் வலிமையாக்கும் நம்பிக்கையை பெற்றுள்ளோம். மீண்டும் ஆட்சிக்கு வந்து திட்டங்களை தொடர்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திராவிட மாடல் அரசானது சமூகநீதியை காப்பதற்காக என்றென்றும் போராடும்.
- ரூ.1000 கொடுப்பதை தடுத்து நிறுத்த நினைத்தால் ரூ.5000 கொடுப்பேன் என்கிறார் முதலமைச்சர்
2026-27-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த 17-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து சட்டசபையில் 2 நாட்களாக நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* சமூக நீதி அடிப்படையிலான திராவிட மாடல் அரசின் கொள்கைகள் நாட்டிற்கே வழிகாட்டுகிறது.
* பெரியார் வழியில் வந்த திராவிட மாடல் அரசு சமூகநீதியைக் காத்து நிலைநாட்டிட பாடுபட்டு வருகிறது.
* திராவிட மாடல் அரசானது சமூகநீதியை காப்பதற்காக என்றென்றும் போராடும்.
* சமூகநீதிக்கு பங்கம் வரும்போதெல்லாம் தமிழ்நாடு உரத்த குரல் கொடுக்கும்.
* மெட்ரோ ரெயில் திட்டம், ஜல் ஜீவன் திட்டத்திற்கு நிதி தருவதை மத்திய பா.ஜ.க. அரசு நிறுத்தி வைத்துள்ளது.
* மகளிர் உரிமைத்தொகையை நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும்.
* அந்த கொந்தளிப்பு இருக்கும்வரை தமிழ்நாட்டை ஸ்டாலின் ஆள்கிறார் என்றே அர்த்தம்.
* மகளிர் உரிமைத்தொகை திட்டமானது நாட்டிற்கே வழிகாட்டும் திட்டமாக உள்ளது.
* தமிழ்நாட்டில் 1.31 கோடி மகளிருக்கு ரூ.5,000 உதவித்தொகை வழங்கி உள்ளார் முதலமைச்சர்.
* ரூ.1000 கொடுப்பதை தடுத்து நிறுத்த நினைத்தால் ரூ.5000 கொடுப்பேன் என்கிறார் முதலமைச்சர்
* தமிழ்நாடு பிற மாநிலங்களுடன் போட்டி போடவில்லை. வளர்ந்த நாடுகளுடன் போட்டி போடுகிறது.
* தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் தான் தமிழ்நாடு போட்டி போடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை மற்றும் கோவையில் மல்டி லெவல் பார்க்கிங் அமைத்தும் சரியான பயன்பாடு இல்லை.
- ஊட்டி கொடைக்கானலுக்கு இது அவசியம் என்றாலும் நிலத்தின் விலை அதிகமாக உள்ளது.
ஊட்டியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதை கருத்தில் கொண்டு மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைத்து தர வேண்டும் எனவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முன்பாக அதனை அமைத்து தர வேண்டும் என சட்டசபையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மற்றும் கோவையில் மல்டி லெவல் பார்க்கிங் அமைத்தும் சரியான பயன்பாடு இல்லை. ஊட்டி கொடைக்கானலுக்கு இது அவசியம் என்றாலும் நிலத்தின் விலை அதிகமாக உள்ளது. இருப்பினும் அவசியம் கருதி ஊட்டியில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- இலவச மடிக்கணினி, 7.5% இடஒதுக்கீடு, நீட் தேர்வு ரத்து விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி.
- நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. அரசு என்ன சாதித்தது.
சட்டசபையில் இலவச மடிக்கணினி, 7.5% இடஒதுக்கீடு, நீட் தேர்வு ரத்து விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக அவர் பேசுகையில்,
* நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. அரசு என்ன சாதித்தது.
* நீட் தேர்வை ரத்து செய்தீர்களா?
* நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
- ஆளுநர் மாளிகைக்கு முன்பாக எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. நடத்திய போராட்டத்தால் 7.5% இடஒதுக்கீடு சட்டமானது.
- 7.5% இடஒதுக்கீட்டிற்காக நாங்கள் பேசினோம் என்ற ஆதாரத்தை காட்ட சொல்லுங்கள்.
சட்டசபையில் 7.5% இடஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க. - அ.தி.மு.க. உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
அவையில் கே.பி.முனுசாமி பேசுகையில், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் சேர 7.5% இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆளுநர் மாளிகைக்கு முன்பாக எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. நடத்திய போராட்டத்தால் 7.5% இடஒதுக்கீடு சட்டமானது என்று கூறினார்.
தளவாய் சுந்தரம், விஜயபாஸ்கர் உங்களுடைய இடத்திற்கு செல்லுங்கள் இல்லையென்றால் நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
நடவடிக்கை எடுத்து என்ன செய்யப்போகிறீர்கள் உண்மைக்கு புறம்பான கருத்தை அமைச்சர் சொல்கிறார்.
7.5% இடஒதுக்கீட்டிற்காக நாங்கள் பேசினோம் என்ற ஆதாரத்தை காட்ட சொல்லுங்கள், அமைச்சர் தவறான கருத்தை பதிவு செய்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
- அதிகாரம் ஓரிடத்தில் குவிந்து விடாமல் பரவலாக்கப்பட வேண்டும்.
- பன்முக தன்மை கொண்ட இந்தியாவிற்கு கூட்டாட்சி தான் அடிப்படை.
சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட சதிகளை முறியடிக்க ஒரே வழி மாநில சுயாட்சி தான்.
* இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நாம் மாற்ற வேண்டும்.
* முயன்றால் மீண்டும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்த முடியும்.
* அதிகாரம் ஓரிடத்தில் குவிந்து விடாமல் பரவலாக்கப்பட வேண்டும்.
* இந்தியாவை முதிர்ச்சி அடைந்த கூட்டாட்சி நாடாக மாற்றுவதற்கான முயற்சியை நாம் தொடங்க வேண்டும்.
* பன்முக தன்மை கொண்ட இந்தியாவிற்கு கூட்டாட்சி தான் அடிப்படை.
* மாநிலங்கள் வளர்ந்தால் தான் நாடும் வளரும் என்பதை மத்திய அரசிற்கு உணர்த்துவோம்.
* இது தனிப்பட்ட ஒரு அரசியல் கட்சியின் கோரிக்கை அல்ல. இந்திய மக்களின் வாழ்வியலுக்கும் வளர்ச்சிக்குமான கோரிக்கை என்று கூறினார்.
இதையடுத்து மத்திய - மாநில அரசு உறவு குறித்து ஆய்வு செய்த உயர்நிலைக் குழு அறிக்கையை சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
- அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு தன் வசம் வைத்துள்ளது.
- மாநில அரசுகளை மத்திய அரசு ஒருபோதும் மதிப்பதில்லை.
சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது தி.மு.க.
* அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக இருந்து வருகிறது தமிழ்நாடு.
* நிதி உரிமைக்காக தமிழ்நாடு இன்னமும் போராட வேண்டிய நிலைதான் உள்ளது.
* அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு தன் வசம் வைத்துள்ளது.
* அனைத்து மாநிலங்களும் சுயாட்சியை பெற்றிருக்க வேண்டும்.
* மாநில சுயாட்சி கொள்கையை அரசியல் எல்லைகளை கடந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
* மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு அடிப்படை உரிமையை மத்திய அரசிடம் போராடி பெற வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளோம்.
* மாநில அரசுகளை மத்திய அரசு ஒருபோதும் மதிப்பதில்லை.
* அனைத்து அதிகாரங்களையும் வைத்துக்கொண்டு மத்திய அரசு ஏதேச்சதிகாரமாக செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பட்ஜெட் மீதான விவாதத்தின் இறுதியாக பிப்.20-ந்தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் உரையாற்றுவார்.
- இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறும்.
தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். இதையடுத்து வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட பிறகு அவையின் நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.
சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்கள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்? என்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.
இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிப்.20-ந்தேதி வரை நடைபெறும் சட்டப்பேரவை அமர்வில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்.
பட்ஜெட் மீதான விவாதத்தின் இறுதியாக பிப்.20-ந்தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் உரையாற்றுவார்.
இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதிதாக 31 இடங்களில் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் கட்டப்படும்.
- பால் உற்பத்தியாளர்களுக்கான ஊக்கத்தொகைக்காக 730 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிலையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ரூ.495 கோடியில் 3.30 லட்சம் மெட்ரிக் கடன் கொள்ளளவு கொண்ட 130 நவீன சேமிப்பு தளங்கள்.
* ரூ.331 கோடியில் 4 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
* 31 இடங்களில் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் கட்டப்பட உள்ளன.
* பயிர்க்கடன் உள்ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்காக வட்டி மானியம் ரூ.3,002 கோடி வழங்கப்பட்டுள்ளது.
* 5 ஆண்டுகளில் 101 புதிய பயிர் ரகங்கள் அறிமுகம். பனையில் குட்டை ரகத்தை உருவாக்க ஆராய்ச்சி நடைபெறுகிறது.
* விவசாயிகளுக்காக 24 சேவைகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட உழவர் செயலியை இதுவரை 20 லட்சம் விவசாயிகள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
* வெள்ளக்காலங்களில் நெல்மணிகள் வீணாவதை தடுக்க ரூ.495 கோடியில் 130 நவீன சேமிப்பு தளங்கள் கட்டப்பட்டுள்ளது.
* புதிதாக 31 இடங்களில் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் கட்டப்படும்.
* பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்க லிட்டருக்கு 3 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
* பால் உற்பத்தியாளர்களுக்கான ஊக்கத்தொகைக்காக 730 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 5 ஆண்டுகளில் அரசு மீன் பண்ணைகள் மூலம் 48 கோடி மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
* அலைகள் திட்டம் மூலம் 15 ஆயிரம் விவசாயிகளுக்கு நுண் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
* விபத்தில் உயிரிழக்கும் நிலமற்ற வேளாண் தொழிலாளருக்கான மரண இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் ஆடு, பன்றி, கோழி வளர்ப்பு பண்ணை சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
* தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வேளாண்மைத்துறைக்கு ரூ.47,248 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






