search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nashik"

    • பிரம்மனுக்கும், சிவபெருமானுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது.
    • சிவபெருமான் முன்பு நந்தி சிலை இல்லை.

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ள பஞ்சவதி கபாலீசுவரர் மகாதேவ் ஆலயத்தில் சிவபெருமான் முன்பு நந்தி சிலை இல்லை. நாட்டிலேயே நந்தி இல்லாத சிவன் கோவில் இதுமட்டும் தான்.

    ஒருமுறை இந்திரசபையில் பிரம்மனுக்கும், சிவபெருமானுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. வெகுண்டெழுந்த சிவபெருமான் பிரம்மாவின் தலையை கொய்தார். இந்த செயலால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதற்கு பரிகாரம் தேடி பூலோகம் முழுவது அலைந்து திரிந்தார்.

    ஒருநாள் சோமேஸ்வரர் என்ற இடத்திற்கு சிவபெருமான் வந்தபோது பசு ஒன்று தன் கன்றுடன் பேசுவதைக் கண்டார். பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளான கன்றுக்கு தாய் பசு பரிகாரம் சொல்லிக்கொண்டு இருந்தது.

    பஞ்சவதி அருகே வந்ததும், கோதாவரி ஆற்றில் பசுங்கன்று நீராடி தனது பிரம்மஹத்தி பாவத்தில் இருந்து விடுபட்டு பழைய நிலைக்கு திரும்பியது. அதேஇடத்தில் சிவபெருமானும் நீராடி தனது பாவத்தை போக்கிக்கொண்டார். பின்னர் அருகே இருந்த மலையில் சிவபெருமான் குடிகொண்டார். சிவனை பின்தொடர்ந்து சென்ற பசு அவருக்கு முன் மண்டியிட்டு அமர்ந்தது. ஆனால் இதற்கு சிவபெருமான் ஒப்புக்கொள்ளவில்லை.

    தன்னை பிரம்மஹத்தில் பாவத்தில் இருந்து விடுவித்ததால் நீ எனக்கு குருவுக்கு சமமானவர் என்றும் அதனால் என் முன்னால் அமரவேண்டாம் என்றும் நந்தியை கேட்டுக்கொண்டார் சிவபெருமான். ஆனால் நந்தியோ சிவபெருமான் மீது கொண்ட அளவுகடந்த பக்தியால் கோவிலில் இருந்து வெறியேற மறுத்து தன்னை அனுமதிக்குமாறு சிவபெருமானிடம் மன்றாடியது. இருப்பினும் சிவபெருமான் கண்டிப்புடன் வெளியேற சொன்னதால் அந்த சிவாலயத்தில் இருந்து கண்ணீருடன் வெளியேறியது நந்தி என்று புராணவரலாறு கூறுகிறது. எனவே பஞ்சவதி கபாலீசுவரர் மகாதேவ் கோவிலில் நீங்கள் நந்தி இல்லாத சிவபெருமானை தான் தரிசிக்க முடியும்.


    மகாரஷ்டிரா மாநிலம் நாசிக்கில் சிறுத்தை கூட்டத்திற்குள் புகுந்து தாக்கியதில் பத்திரிகையாளர்கள் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். #leopardattack
    நாசிக்:

    மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் அடர்ந்த காடுகள் உள்ளன. இக்காடுகளில் சிறுத்தை, ஓநாய், கழுதைப் புலி மற்றும் நரி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. சிறுத்தை போன்ற மிருகங்கள் அருகில் உள்ள ஊருக்குள் அடிக்கடி மக்களை அச்சுறுத்தி வரும்.

    இந்நிலையில் இன்று காலை பொதுமக்கள் வசிக்கும் இடமான சவர்கார் அருகே சிறுத்தை ஒன்று நடமாடியது. இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் காட்சியை பார்ப்பதற்கு அப்பகுதியில் பொதுமக்கள் அதிக அளவில் கூடினர். வீடியோ எடுப்பதற்காக செய்தி சேனல்களும் அங்கு வந்தன.

    கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த கெய்க்வாட் என்பவரும், இரண்டு பத்திரிகையாளர்கள் வீடியோ எடுப்பதற்கும் முயற்சி செய்தனர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்திற்குள் சிறுத்தை பொதுமக்களை நோக்கி பாய்ந்தது. இதில் மேற்கொண்ட மூன்று பேரும் காயமடைந்தனர்.

    பின்னர் வனத்துறையினர் சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேல் போராடி சிறுத்தையை பிடித்தனர். பிடிபட்ட சிறுத்தை அருகில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் கொண்டு விடப்பட்டது. #leopardattack
    வெங்காய விலை வீழ்ச்சி மற்றும் கடன் பிரச்சினை காரணமாக மகாராஷ்டிராவில் விவசாயிகள் 2 பேர் தற்கொலை செய்தனர். #Onionfarmers #Suicide
    மும்பை:

    வடமாநிலங்களில் வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி காணப்படுகிறது.

    நாசிக் மாவட்டத்தில் உள்ள பதாளே கிராமத்தை சேர்ந்தவர் கைர்னார் (44). விவசாயியான இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காததால் தனது நிலத்தில் விளைந்த 500 குவிண்டால் வெங்காயத்தை விற்க முடியாமல் அவர் கவலையுடன் இருந்தார். மேலும் வங்கியில் வாங்கிய ரூ.11 லட்சத்தை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக கைர்னார் தற்கொலை செய்து கொண்டார்.

    இதே போல அதே மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் தாண்டேஜ் (33) என்ற விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    அவர் வங்கியில் ரூ.21 லட்சம் கடன் வாங்கி இருந்தார். மேலும் மொத்த விலை சந்தையில் வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காமல் விரக்தியில் இருந்தார். இதனால் அவர் தற்கொலை செய்துள்ளார்.

    நாட்டின் மொத்த உற்பத்தியில் 50 சதவீத வெங்காயத்தை நாசிக் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் சாகுபடி செய்கிறார்கள். ஆனால் வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காததால் அவர்கள் தற்போது பரிதாப நிலையில் உள்ளனர். #Onionfarmers #Suicide

    கேட்டதை விட ஐந்து மடங்கு அள்ளிக்கொடுத்த ஏ.டி.எம்.மை பொதுமக்கள் முற்றுகையிட போலீசாருக்கு விஷயம் தெரிந்து வருவதற்குள் 2 லட்சம் ரூபாய் காலியாகியுள்ளது.
    ஜெய்ப்பூர்:

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ள விஜய் நகர் பகுதியில் இருக்கும் ஆக்சிஸ் வங்கி ஏ.டி.எம்.மில் நேற்று ஒருவர் 1000 ரூபாய் எடுக்க சென்று இயந்திரத்தில் என்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு ஐந்து மடங்கு அதிகமாக 5 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது. சிறிது அதிர்ச்சியடைந்தாலும் அவர் தனது நண்பர்களுக்கு இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார்.

    இதனை அடுத்து, அப்பகுதியில் இந்த செய்தி பரவ அனைவரும் ஏ.டி.எம் கார்டுடன் ஏ.டி.எம்.மை முற்றுகையிட்டனர். ஆயிரம் கேட்டவருக்கு 5 ஆயிரம், 4 ஆயிரம் கேட்டவருக்கு 20 ஆயிரம் என ஐந்து மடங்கு அதிகமாக பணத்தை அள்ளி கொடுத்துள்ளது இயந்திரம்.

    தகவல் அறிந்து போலீசார் அங்கு வருவதற்குள்ளாக இயந்திரத்தில் இருந்த 2 லட்சம் ரூபாயும் காலியாகியுள்ளது. இதனை அடுத்து அங்கு வந்த வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம். அறையை பூட்டினர். சாப்ட்வேர் கோளாறு காரணமாக இந்த தவறு நடந்துள்ளது. சிசிடிவி மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்டு தகவல்களை அடிப்படையாக கொண்டு யார் பணம் எடுத்துள்ளனர் என்ற விபரங்களை சேகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×