என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "daughter in law"

    • மருமகள் ஸ்ரீதேவி கிராம மக்கள் உதவியுடன் இறுதி சடங்குகளை செய்தார்.
    • ஆதிலட்சுமியின் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர்.

    ஆந்திர மாநிலம் கோன சீமா மாவட்டம் சி.எச்.குன்னே பள்ளியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி. இவரது கணவர், மகன் ஏற்கனவே இறந்து விட்டனர். இவரது மருமகள் ஸ்ரீதேவி மற்றும் பேரன், பேத்திளுடன் வசித்து வந்தார்.

    ஆதிலட்சுமியை அவருடைய மருமகள் ஸ்ரீதேவி கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார். இந்த நிலையில் ஆதிலட்சுமி நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். அவருக்கு இறுதி சடங்குகள் செய்ய யாரும் இல்லை. இதனால் மருமகள் ஸ்ரீதேவி கிராம மக்கள் உதவியுடன் இறுதி சடங்குகளை செய்தார்.

    ஆதிலட்சுமியின் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர். அங்கு கொள்ளிக்குடம் உடைத்து ஸ்ரீதேவி கொள்ளிவைத்தார். இதனைக் கண்ட கிராம மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

    மாமியாரும் மருமகளும் கீரியும், பாம்புமாக உள்ள காலத்தில் மாமியாருக்கு மருமகள் இறுதி சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

    • சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றித்தரக்கோரி அவரது மருமகள் ஹர்ஜீத்கவுர் கேட்டு வந்துள்ளார்.
    • அந்த சிறுவன் அம்மா, பாட்டியை அடிப்பதை நிறுத்துங்கள் என கெஞ்சுகிறான்.

    பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கோத்தே கிராமத்தை சேர்ந்தவர் குர்பஜன்கவுர். இவரது கணவர் தொடக்க கல்வி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவர் இறந்து விட்டார்.

    இதனால் குர்பஜன்கவுர் தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றித்தரக்கோரி அவரது மருமகள் ஹர்ஜீத்கவுர் கேட்டு வந்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர்களுக்கிடையே கடந்த சில நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஹர்ஜீத்கவுர் தனது மாமியார் குர்பஜன்கவுரை கொடூரமாக தாக்கியுள்ளார். மாமியாரின் தலைமுடியை பிடித்து இழுத்து மீண்டும் மீண்டும் கடுமையாக அவர் தாக்கி உள்ளார்.

    இதை ஹர்ஜீத்கவுரின் மகன் பார்த்து அதிர்ச்சி அடைந்தான். உடனே அந்த சிறுவன் அம்மா பாட்டியை அடிப்பதை நிறுத்துங்கள் என கெஞ்சுகிறான்.

    ஆனால் ஹர்ஜீத்கவுர் கேட்காமல் தொடர்ந்து மாமியாரை தாக்குகிறார். இதனால் வேதனையடைந்த சிறுவன் தனது தாயார் பாட்டியை தாக்குவதை செல்போனில் வீடியோ எடுத்த அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த பலரும் சம்பந்தபட்ட பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டனர்.

    இதற்கிடையே பஞ்சாப் மகளிர் ஆணையம் இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.

    மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு குர்தாஸ்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கடிதம் அனுப்பியது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • வதோதரா மாவட்டத்தில் 40 வயதான பெண்ணுக்கு 2024 பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது.
    • செயற்கை முறையில் கருத்தரிக்க முயற்சி செய்யலாம் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளார்.

    குஜராத் மாநிலத்தில் மாமனாரே மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வதோதரா மாவட்டத்தில் 40 வயதான பெண்ணுக்கு 2024 பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. அப்பெண்ணுக்கு 40 வயது ஆகியுள்ளதால் கருவுறுதல் பிரச்சனை இருக்கலாம் என்பதற்காக அந்த தம்பதி மருத்துவரை அணுகியுள்ளனர்.

    அப்போது மருத்துவர்கள் அவரது கணவரின் விந்தணு எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதால் இயற்கையான முறையில் கருத்தரிக்க முடியாது என்றும் செயற்கை முறையில் கருத்தரிக்க முயற்சி செய்யலாம் என்று அறிவுரை கூறியுள்ளார்.

    அப்பெண்ணுக்கு செயற்கை முறையில் கருத்தரிக்க விருப்பம் இல்லாததால் குழந்தையை தத்தெடுக்க விரும்பியுள்ளார். ஆனால் அதற்கு பெண்ணின் குடும்பம் சம்மதிக்கவில்லை.

    இந்நிலையில் 2024 ஜூலை மாதம் அப்பெண்ணை அவரது மாமனார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அவரது கணவரிடம் கூற, அவரோ எனக்கு குழந்தை வேண்டும், ஆதலால் இதை பற்றி நீ வெளியில் சொல்ல கூடாது. இதனை மீறினால் உன்னுடைய நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மனைவியை கணவன் மிரட்டியுள்ளார்.

    இதனையடுத்து மருமகளை பலமுறை மாமனார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஆனாலும் அப்பெண் கர்ப்பம் தரிக்கவில்லை.

    இதனால் 2024 டிசம்பர் மாதம் கணவரின் தங்கையினுடைய கணவர் குழந்தைக்காக அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். பல மாதங்கள் தொடர்ந்து அவர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததன் விளைவான இந்தாண்டு ஜுன் மாதம் அப்பெண் கருத்தரித்தார். ஆனால் சில வாரங்களில் அப்பெண்ணின் கரு கலைந்தது.

    இதனையடுத்து அப்பெண் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சேலத்தில் கடந்த 16-ந் தேதி இளம்பெண் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இளம்பெண்ணின் தற்கொலைக்கு தூண்டிய மாமியார் கைது செய்யப்பட்டார்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமர்.

    இவரது மனைவி கவிதா (வயது 25). இவர் கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை அதிகாரி உதவி கமிஷனர் அசோகன் தொடர்ந்து உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.

    அதில், கவிதா தற்கொலைக்கு அவரது மாமியார் கல்யாணி (52), தொந்தரவு செய்ததே காரணம் என தெரியவந்தது. இதனால் கல்யாணியை நேற்று போலீசார் கைது செய்தனர்.

    • ராமசாமி அரிவாளால் ஜோதிலட்சுமியை திடீரென வெட்டினார்.
    • சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னிமலை:

    சென்னிமலை மணிமலை கரடு பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவரது மனைவி ஜோதிலட்சுமி (வயது 43). நாச்சிமுத்துவின் தந்தை ராமசாமி சென்னிமலை அடுத்த மேலப்பாளையத்தில் சரவணா நகரில் வசித்து வருகிறார்.

    இவர் தனது பூர்வீக நிலத்தை விற்று அதில் 3 மகன்களுக்கும் வீடு கட்டி தந்துள்ளார்.

    இந்த நிலையில் ராமசாமி மணிமலை கரடு பகுதியில் உள்ள தனது மகன் குமார் வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு வந்த ஜோதிலட்சுமியிடம், ராமசாமி செய்வினை வைத்து விட்டாய். உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    மேலும் ராமசாமி தான் வைத்திருந்த தேங்காய் போடும் அரிவாளால் ஜோதிலட்சுமியை திடீரென வெட்டினார். இதில் ஜோதிலட்சுமி படுகாயம் அடைந்து கீழே விழுந்தார்.

    இதை கண்ட அவரது மகன்கள் ராமசாமியை தடுக்க சென்றனர். பின்னர் அவர் தன்னை தடுத்தால் அனைவரையும் கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

    பின்னர் ராமசாமி அரிவாளை போட்டு விட்டு அங்கு இருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து படுகாயம் அடைந்த ஜோதிலட்சுமி 108 ஆம்புலன்சு மூலம் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமவைாக உள்ள ராமசாமியை போலீசார் வலை வீசி தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    • திருச்சி சிறையில் இருந்த ஜேம்சை ஜாமீனில் எடுக்க அவருடைய மனைவி பாத்திமா பானு எந்த முயற்சி எடுக்கவில்லை.
    • திடீரென ஆரோக்கிய மேரி மற்றும் பாத்திமாபானு இடையே ஜாமீன் எடுப்பது சம்பந்தமாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கழுகுப்புலிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 38). இவரது மனைவி பாத்திமா பானு (35). இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜேம்ஸ்சுக்கும், பாத்திமா பானுவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இது குறித்து பாத்திமா பானு பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜேம்சை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். திருச்சி சிறையில் இருந்த ஜேம்சை ஜாமீனில் எடுக்க அவருடைய மனைவி பாத்திமா பானு எந்த முயற்சி எடுக்கவில்லை.

    இந்நிலையில் ஜேம்ஸ்சின் தாயார் ஆரோக்கிய மேரி ( 57) தன்னுடைய மகனை ஜாமீனில் எடுக்க முயற்சி செய்து உள்ளார். இதனை கேள்விப்பட்ட பாத்திமா பானு மாமியாரிடம் தன்னுடைய கணவரை ஜாமீனில் எடுக்க வேண்டாம். அவ்வாறு எடுத்தால் அவர் வெளியில் வந்த பிறகு என்னை கொலை செய்து விடுவார் என்று கூறிதடுத்துள்ளார்.

    ஆனால் அதை கேட்காத ஆரோக்கிய மேரி தனது மகனை ஜாமீனில் எடுக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஆரோக்கிய மேரி மற்றும் பாத்திமாபானு இடையே ஜாமீன் எடுப்பது சம்பந்தமாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோபம் அடைந்த பாத்திமா பானு தன்னுடைய மாமியார் ஆரோக்கியமேரியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆரோக்கிய மேரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து பாத்திமாபானுவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஜாமின் மனு மீதான உத்தரவை பிப். 6-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
    • பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் தொடர்பாக இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இ.கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் மாத சம்பளம் அடிப்படையில் வீட்டு வேலைக்கு சேர்ந்தார்.

    ஆனால் அந்த பெண்ணுக்கு பேசியபடி சம்பளம் கொடுக்காமல் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி வேலை வாங்கியதுடன், அவரை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின்பேரில் திருவான்மியூர் அனைத்து மகளிர் போலீசார் ஆண்ட்ரோ மதிவாணன், அவருடைய மனைவி மெர்லினா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து தலைமறைவான அவர்களை ஆந்திராவில் கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    இந்த வழக்கின் விசாரணை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்றது.

    மனுதாரர்கள் தரப்பில், சமூக ஊடகங்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக போலீசார் அவசர கதியில் செயல்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் பக்கம் பெரிய நபர்கள் இருந்திருந்தால் எப்படி இருவரும் கைது செய்யப்பட்டிருப்பார்கள்? இந்த விவகாரத்தில் எஸ்.சி., எஸ்.டி. சட்டப்பிரிவு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

    பாதிக்கப்பட்ட பெண் தரப்பில், குற்றம்சாட்டப்பட்டவர்களின் பின்புலத்தில் முக்கிய நபர்கள் இருக்கின்றனர். இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் உண்மைகள் தெரிய வரும் என்று விவாதிக்கப்பட்டது. போக்சோ பிரிவிலும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.

    பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் தொடர்பாக இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    பின்னர், தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன் மற்றும் மருமகள் ஜாமின் மனு மீதான உத்தரவை பிப். 6-ம் தேதிக்கு தள்ளி வைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன்படி, இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வந்தது.

    அப்போது, வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்ட பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • திருமணம் நடந்தபோது, 600 சவரன் தங்கம், ரூ.1.65 கோடி மதிப்புள்ள 2 கார்கள், 20 கிலோ வெள்ளி ஆகியவை கொடுக்கப்பட்டது.
    • மகளின் வாழ்க்கைக்காக நேரில் சென்று பேசினால் மேலும் 500 சவரன், ரூ.10 கோடி கே.பி.கந்தன் கேட்கிறார்.

    சென்னை:

    சோழிங்கநல்லூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தன் மீது அவரது மருமகள் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் வரதட்சணை புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில்,

    திருமணத்தின்போது 1000 சவரன் வரதட்சணை கேட்டனர். 2018ம் ஆண்டு திருமணம் நடந்தபோது, 600 சவரன் தங்கம், ரூ.1.65 கோடி மதிப்புள்ள 2 கார்கள், 20 கிலோ வெள்ளி ஆகியவை கொடுக்கப்பட்டது. மேலும் 400 சவரன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

    கே.பி.கந்தனின் மருமகள் ஸ்ருதி பிரியதர்ஷினி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அவரது தந்தை கூறுகையில்,

    வரதட்சணை கேட்டு, தனது மகளை கே.பி.கந்தன் குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தினர்.

    பெண் குழந்தை பிறந்த பிறகு 2021ல் தனது மகளை கே.பி.கந்தன் குடும்பத்தினர் வீட்டை விட்டு விரட்டி விட்டனர்.

    மகளின் வாழ்க்கைக்காக நேரில் சென்று பேசினால் மேலும் 500 சவரன், ரூ.10 கோடி கே.பி.கந்தன் கேட்கிறார்.

    மகள் மருத்துவம் படித்தபோது, சக மருத்துவர்களுடன் எடுத்த புகைப்படங்களை தவறாக சித்தரித்து அவதூறு பரப்புகிறார்கள்.

    கே.பி.கந்தன், அவரது மனைவி, மகன் கே.பி.கே.சதீஷ்குமார் மற்றும் மகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • பவித்ரா-ஏழுமலை தம்பதியினருக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.
    • இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சிங்காரப்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட சிங்காரப்பேட்டை அடுத்த கரியபெருமாள் வலசை கிராமத்தை சேர்ந்தவர் அலமேலு (வயது 48). இவருக்கு ஏழுமலை (20), சேட்டு (18) என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் அலமேலுவின் மூத்த மகன் ஏழுமலை கோயம்புத்தூரில் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அலமேலுவின் அண்ணன் நடேசனின் மகள் பவித்ரா (20) என்பவரை, ஏழுமலைக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

    இதில் பவித்ரா-ஏழுமலை தம்பதியினருக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மணிகண்டன், ஊத்தங்கரை தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். இவருக்கும் பவித்ராவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி 2 பேரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு இதை அறிந்த அலமேலு 2 பேரையும் கண்டித்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஆடு மேய்க்க சென்ற பவித்ரா மாலை நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரை தேடி ஆடு மேய்க்கும் இடத்திற்கு மாமியார் அலமேலு சென்றுள்ளார். அப்போது பவித்ரா மற்றும் கள்ளக்காதலன் மணிகண்டன் ஆகியோர் ஒன்றாக இருந்துள்ளனர். இதனை கண்ட அலமேலு அவர்களை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் மற்றும் பவித்ரா 2 பேரும் சேர்ந்து அலமேலுவை அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் வழக்கம்போல் 2 பேரும் வீட்டுக்கு சென்று அவரவர் வேலையை செய்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் அலமேலுவின் இளைய மகன் சேட்டு வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த போது நீண்ட நேரம் ஆகியும் தாய் வீடு திரும்பாததால் அக்கம் பக்கம் உறவினர்கள் மற்றும் வேலை செய்யும் இடங்களில் தேடி வந்துள்ளார்.

    எங்கும் அவர் கிடைக்காததால் விரக்தி அடைந்த அவர் மீண்டும் தனது நண்பர் ராஜேந்திரன் என்பவருடன் இரவு தனது தாயார் அலமேலுவை தேடி சென்று உள்ளனர்.

    இந்த நிலையில் காட்டு பகுதியில் ஓர் இடத்தில் தீ எரிவதைக் கண்ட சேட்டு மற்றும் அவரது நண்பர் ராஜேந்திரன் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது காட்டுப் பகுதியில் பாதி எரிந்த நிலையில் இருந்த அலமேலுவின் உடலைக் கண்டு மிரண்டு போன 2 பேரும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் இது குறித்து ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அலமேலு உடலை கைப்பற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவப் பகுதிக்கு சென்று ஊத்தங்கரை டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் கடந்த 22-ந் தேதி அன்று பிறந்தநாள் கொண்டாட முடியாத கள்ளக்காதலர்கள் நேற்று கொண்டாடிய பொழுது மாமியார்களிடம் சிக்கியதும். அதை மாமியார் அலமேலு கண்டித்தையும், இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் மற்றும் பவித்ரா 2 பேரும் சேர்ந்து அலமேலுவை அடித்து கொன்று தீ வைத்து எரித்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் சிங்காரப்பேட்டை போலீசார் இரவோடு இரவாக கைது செய்தனர்.மேலும் இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மாமியார் கொடுமையால் தான் தங்களது மகள் தற்கொலை செய்ததாக பெண்ணின் குடும்பத்தினர் புகார்
    • பெண்ணின் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரை குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    கணவன் வீட்டில் மாமியார் கொடுமைப்படுத்தியதால் மனைவி தற்கொலை செய்தது தொடர்பான வழக்கில் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட தண்டனையை 20 ஆண்டுகள் கழித்து பம்பாய் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    தன் மாமியார் வீட்டில் துன்புறுத்தப்பட்டதால் தான் தங்களது மகள் தற்கொலை செய்துள்ளார் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பு விசாரணை நீதிமன்றத்தில் பெண்ணின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.

    எங்களது மகளின் தனிப்பட்ட சுதந்திரங்களை கணவனின் குடும்பத்தினர் பறித்தனர் என்று இந்த கிழக்கில் பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டினர். டிவி பார்க்கக் கூடாது, கோவிலுக்கு தனியாக செல்லக்கூடாது, பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் வீடுகளுக்கு தனியாக செல்லக்கூடாது. கம்பளத்தின் மேல் தான் படுத்து தூங்க வேண்டும் என்று எங்கள் மகளை கணவனின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தினர் என்று பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டினார்.

    இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், பெண்ணின் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது.

    விசாரணை நீதிமன்றத்தின் தண்டனைக்கு எதிராக கணவன் வீட்டார் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், டிவி பார்க்கக் கூடாது, கோவிலுக்கு தனியாக செல்லக்கூடாது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் என்பதெல்லாம் கொடுமையின் கீழ் வராது என்று கூறி கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்தது.

    • பெங்களூருவில் தனது மாமியாரை கொலை செய்ய மருத்துவரிடம் பெண் ஒருவர் மாத்திரை கேட்டுள்ளார்.
    • மருத்துவர் போலீசில் புகார் அளிக்க, சம்மந்தப்பட்ட பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் தனது மாமியாரை கொலை செய்ய மருத்துவரிடம் பெண் ஒருவர் மாத்திரை கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக மருத்துவர் போலீசில் புகார் அளிக்க, சம்மந்தப்பட்ட பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்த புகார் தொடர்பாக பேட்டி அளித்த மருத்துவர் சுனில் குமார், "பிப்ரவரி 17 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு தனக்கு வாட்சப்பில் சஹானா என்ற பெண் மெசேஜ் அனுப்பினார். பெங்களூரில் இருந்து பேசுவதாக கூறிய அவர், தன் மாமியாரைக் கொல்ல 2 மாத்திரைகளை பரிந்துரைக்கச் சொன்னாள்.

    உயிர்களை காப்பாற்றுவது தான் மருத்துவர்களின் கடமை, உயிரை எடுப்பது அல்ல என்று அவளிடம் நான் கூறினேன்.ஆனால் அவளோ, மாத்திரைகளின் பெயர்களை மெசேஜ் அனுப்புமாறு என்னிடம் கெஞ்சினார். நான் அதிர்ச்சியடைந்து அவளுடைய கோரிக்கையை நிராகரித்தேன். தொடர்ந்து சஹானா தொடர்ந்து பலமுறை மெசேஜ் அனுப்பி வந்தார்.

    பின்னர் சஹானா என்னிடம் மன்னிப்பு கேட்டாள். தன்னைப் பற்றி புகார் செய்ய வேண்டாம் என்று என்னிடம் கெஞ்சினாள். ஏன் இப்படி ஒரு செயலைச் செய்ய நினைக்கிறாய் என்று நான் கேட்டபோது, அவளுடைய மாமியார் தன்னைத் துன்புறுத்தி வருவதாகவும், இனிமேலும் இந்த சித்திரவதையைத் தாங்க முடியாது என்று கூறினார். ஆகவே இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளேன். காவல்துறையினர் விரைவான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்" என்று தெரிவித்தார்.

    • விசாரணைக்கு பின் நீதிமன்றத்திற்கு வெளியே மாமியார் மருமகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • சிறிது நேரத்திலேயே மொத்த குடும்பமும் சண்டையில் ஈடுபட்டது

    மகாராஷ்டிராவில் நீதிமன்றத்துக்கு வெளியே மாமியாரும் மருமகளும் சண்டை போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை தொடர்பான வழக்கு விசாரணைக்கு பின் நீதிமன்றத்திற்கு வெளியே மாமியார் மருமகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை மூண்டுள்ளது.

    சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வரும் இந்த வீடியோவில், மாமியாரும் மருமகளும் ஒருவரையொருவர் உதைத்தும், குத்தியும் தாக்கிக் கொள்கிறார்கள். தலைமுடியை பிடித்து இழுப்பதும் உடைகளை கிழிப்பதும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

    சிறிது நேரத்திலேயே மொத்த குடும்பமும் சண்டையில் ஈடுபட்டது நிலைமையை இன்னும் மோசமாக்கியது.

    சம்பவ இடத்தில் இருந்த சில பெண் போலீசும் வழக்கறிஞர்களும் ஆரம்பத்தில் இருந்து வேடிக்கை மட்டுமே பார்த்து நின்றனர். சிறிது நேரத்திற்குப் பிறகு வேறு சிலர் நிலைமை மோசமடைவதை கவனித்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். இதன் பின்னர், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    ×