search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பலத்த மழையால் ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு
    X

    மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ள காட்சி


    பலத்த மழையால் ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு

    • சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
    • பொக்லைன் உதவியுடன் மண் சரிவு சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. விடிய விடிய பலத்தமழை கொட்டி தீர்த்தது. அவ்வப்போது இடி மின்னலுடன் சூறைக்காற்றும் வீசியதால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன.

    சேலம் மாவட்டம் ஏற்காட்டிலும் கன மழை பெய்தது. கனமழையினால் ஏற்காடு பகுதியில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் மின் கம்பிகளும் சேதம் அடைந்தன. இதனிடையே ஏற்காட்டுக்கு செல்லும் குப்பனூர் மலைச்சாலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.

    ஏற்காட்டில் இருந்து கொட்டசேடு வழியாக சேலம் செல்லும் சாலையில் ஆத்துபாலம் என்ற இடத்தில் மன்சரிவு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மண் சரிவை சீரமைக்கும் படியில் ஈடுபட்டு வருகின்றனர். பொக்லைன் உதவியுடன் மண் சரிவு சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    மேலும் மழையினால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க ஏற்காடு மலைச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊழியர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

    Next Story
    ×