search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Neymar"

    • அவரது காயம் பெரிய அளவில் இருக்காது என அணியின் கேப்டன் கேகேமிரோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    • அவர் எங்களுக்கு முக்கியமான வீரர், அவர் தொடர்ந்து ஆடவேண்டும் என மிகவும் விரும்புகிறோம்.

    உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் பிரேசில் அணி உருகுவே அணியை எதிர்கொண்டது. முதல் பாதி ஆட்டத்தின்போது பிரேசில் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான நெய்மர் (வயது 31) பலத்த காயமடைந்து துரதிர்ஷ்டவசமாக வெளியேறினார்.

    காலில் அடிபட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டதால் அவரை ஸ்டிரெச்சரில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் இல்லாத நிலையில் பிரேசில் அணி 2-0 என தோல்வியடைந்தது. நெய்மர் காயமடைந்தது பிரேசில் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    அவரது காயம் பெரிய அளவில் இருக்காது என அணியின் கேப்டன் கேகேமிரோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    "அவர் எங்களுக்கு முக்கியமான வீரர், அவர் தொடர்ந்து ஆடவேண்டும் என மிகவும் விரும்புகிறோம். ஆனால் அவர் காயங்களால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார். காயத்தில் இருந்து குணமடைந்து பார்முக்கு திரும்பும்போது மீண்டும் காயமடைகிறார்" என்றும் கேப்டன் கேசேமிரோ கூறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல்கணக்கில் பெரு அணியை வீழ்த்தியது. அர்ஜென்டினா அணியின் இரண்டு கோல்களையும் மெஸ்சி அடித்தார். வெனிசுலா அணி சிலி அணியை 3-0 என்ற கோல்கணக்கிலும், பராகுவே அணி பொலிவியா அணியை 1-0 என்ற கோல்கணக்கிலும் வென்றன. ஈக்வடார்- கொலம்பியா அணிகள் மோதிய ஆட்டம் கோல்கள் இன்றி டிரா ஆனது.

    இதற்கிடையே ஆசிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் குரூப் சுற்று ஆட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதில், சவுதி அரேபிய கிளப் அணியான அல் ஹிலால் அணிக்காக விளையாடி வரும் நெய்மர், அடுத்து நவம்பர் 6-ம் தேதி மும்பை சிட்டி எப்.சி. அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பது சந்தேகம்தான். இப்போட்டி நவி மும்பையில் நடைபெற உள்ளது. நெய்மர் காயமடைந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

    • நெய்மர் கோல் அடிக்க கூடாது என பெரு நாட்டில் உள்ள மாந்திரீகர்கள் சடங்குகள் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
    • உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பெருவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் வெற்றி பெற்றுள்ளது.

    பிரேசிலியா:

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள பிபா உலகக்கோப்பை கால்பந்துக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் மற்றும் பெரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி வெற்றி பெற்றது. பிரேசில் வீரர் மார்கினோஸ் வெற்றிக்குரிய கோலை அடித்தார்.

    இந்த ஆட்டத்திற்கு முன்னதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் கோல் அடிக்க கூடாது என பெரு நாட்டில் உள்ள மாந்திரீகர்கள் சடங்குகள் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பெரு நாட்டு மாந்திரீகர்கள் தங்கள் நாட்டின் வெற்றிக்காக ஆசீர்வாதங்களைக் கோரி, சடங்குகள் செய்து பிரார்த்தனை செய்தனர். இதில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் ஆட்டத்தை மாற்றும் திறமை கொண்டவர் என்பதால் அவர் கோல் அடிப்பதைத் தடுக்க தனித்துவமான சடங்குகளைச் செய்தனர்.

    நெய்மர் படத்தின் மீது பழுப்பு நிற துணியை போர்த்தி, அவரது இடது காலை கட்டி, வலது காலின் மேல் ஒரு வாளை வைத்து வழிபாடு செய்தனர். எனினும்,பெருவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் நெய்மர் கோல் அடிக்கவில்லை என்றாலும் பிரேசில் வெற்றி பெற்றுள்ளது.

    நெய்மர் படத்தை வைத்து சடங்குகள் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    • உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.
    • 2026 உலக கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகியவை நடத்துகின்றன.

    சாபாவ்லோ:

    உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு கத்தாரில் நடந்த உலக கோப்பை போட்டியில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் பெற்றது.

    வரும் 2026-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகிறது. இதற்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், தென் அமெரிக்க கண்டத்தில் நடைபெற்ற தகுதிச்சுற்று ஆட்டம் ஒன்றில் பிரேசில், பொலிவியா அணிகள் மோதின. இதில் பிரேசில் 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    இதில் நட்சத்திர வீரர் நெய்மர் 61 மற்றும் 93-வது நிமிடத்தில் என 2 கோல்கள் அடித்தார். இதன்மூலம் பீலேயின் சாதனையை நெய்மர் முறியடித்தார்.

    மறைந்த பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே சர்வதேச போட்டிகளில் 77 கோல்கள் அடித்து இருந்தார். 1957 முதல் 1971 வரையிலான காலகட்டத்தில் 92 போட்டிகளில் இந்த கோல்களை அடித்தார்.

    அவரது சாதனையை நெய்மர் ஏற்கனவே சமன் செய்தார். தற்போது அடித்த 2 கோல்கள் மூலம் பீலேயின் சாதனையை அவர் முறியடித்தார்.

    31 வயதான நெய்மர் 125 சர்வதேச போட்டியில் விளையாடி 79 கோல்கள் அடித்துள்ளார். இதன்மூலம் அதிக கோல்கள் அடித்துள்ள பிரேசில் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    சர்வதேச அளவில் அதிக கோல்களை அடித்த வீரர்களில் நெய்மர் 9-வது இடத்தில் உள்ளார். அவர் 2010 முதல் சர்வதேச போட்டிகளில் ஆடி வருகிறார்.

    கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுக்கல்) 123 கோல் அடித்து (200 போட்டி) முதல் இடத்தில் உள்ளார். மற்றொரு நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்சி (அமெரிக்கா) 103 கோல்களுடன் (175 ஆட்டம்) 3-வது இடத்தில் உள்ளார்.

    • சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் கிளப் நெய்மாரை 2 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
    • அல்-நசர் என்ற சவுதி கிளப் அணியில் போர்ச்சுகலின் ரொனால்டோ விளையாடி வருகிறார்.

    ரியாத்:

    பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மார், பிரான்சில் உள்ள பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) கால்பந்து கிளப்புக்காக கடந்த 6 ஆண்டுகளாக விளையாடி வந்தார்.

    இதற்கிடையே, நெய்மாரை தங்கள் அணியில் இணைக்க சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் கிளப் முயற்சி மேற்கொண்டது. அவரை விற்க பி.எஸ்.ஜி நிர்வாகமும் ஒப்புக்கொண்டது.

    இதையடுத்து, 2 ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் அல்-ஹிலால் அணியில் இணைய நெய்மார் சம்மதம் தெரிவித்துள்ளார். அவருக்கு ரூ.908 கோடி ஊதியம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் கிளப்பில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் நெய்மார் இன்று கையெழுத்திட்டார்.

    ஏற்கனவே, சவுதி கிளப் அணியான அல்-நசர் என்ற அணியில் போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உரிய அனுமதியின்றி கட்டுமான பணிகளை நெய்மர் மேற்கொண்டு வருவதாக எழுந்த புகாரை தொடர்ந்து அந்த பணிகளை தொடர கடந்த மாதம் தடை விதிக்கப்பட்டது.
    • ரியோடிஜெனீரோ மாகாண அரசு நெய்மருக்கு ரூ.28.6 கோடியை அபராதமாக விதித்துள்ளது.

    ரியோடிஜெனீரோ:

    பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மருக்கு ரியோடிஜெனீரோ மாகாணத்தின் தெற்கு கடற்கரை பகுதியையொட்டி சொகுசு பங்களா உள்ளது. செழுமையான மரங்களை கொண்ட அந்த பண்ணை வீட்டின் அருகில் செயற்கை ஏரி அமைத்தல் உள்பட பல்வேறு வசதிகளை உருவாக்கும் வகையில் உரிய அனுமதியின்றி கட்டுமான பணிகளை நெய்மர் மேற்கொண்டு வருவதாக எழுந்த புகாரை தொடர்ந்து அந்த பணிகளை தொடர கடந்த மாதம் தடை விதிக்கப்பட்டது.

    அத்துடன் அந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் நெய்மர் சுற்றுப்புற சூழல் விதிமுறைகளை கடைபிடிக்காததுடன் முறையான அனுமதி பெறாமல் நதி நீரை திசைதிருப்புதல், மரங்களை வெட்டுதல், கற்களை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து ரியோடிஜெனீரோ மாகாண அரசு நெய்மருக்கு ரூ.28.6 கோடியை அபராதமாக விதித்துள்ளது. அத்துடன் இந்த விதிமீறல் செயல்கள் குறித்து உள்ளூர் அட்டர்னி ஜெனரல் அலுவலகம், சிவில் போலீஸ், சுற்றுச்சுழல் பாதுகாப்பு அலுவலகம் ஆகியவை தொடர்ந்து விசாரணை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நமது வாழ்க்கையின் ஒரு பகுதியான நீ என்னுடன் வேண்டும்.
    • புருனா, நான் ஏற்கனவே எனது தவறுகள், தேவையற்ற சர்ச்சைகளுக்காக மன்னிப்பு கேட்டு விட்டேன்.

    பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், தமது கர்ப்பிணி காதலியிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். இதனை சமூக ஊடக பக்கத்தில் தமது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ளார். 31 வயதான நெய்மர் தமது காதலி புருனா பியான்கார்டி-ஐ தாம் கனவு கண்டிருந்த பெண் என கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் இதனை உனக்காகவும் உனது குடும்பத்துக்காகவும் செய்கிறேன். இது பிரச்சினைகளை தீர்க்குமா என்பது எனக்கு தெரியாது. ஆனால் நான் முயற்சி செய்ய விரும்புகிறேன் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன். நமக்கான தேவை, நம் குழந்தை மீது நாம் வைத்திருக்கும் அன்பு வெல்லும். நாம் இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதல் நம்மை பலப்படுத்தும்.

    நமது வாழ்க்கையின் ஒரு பகுதியான நீ என்னுடன் வேண்டும். அதுமட்டுமின்றி, உங்களை பற்றி வெளிவந்த செய்திகள் உங்களை எவ்வளவு காயப்படுத்தியது, நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டீர்கள் என்பது எனக்கு தெரியும். இந்த சூழலில் உனக்கு ஆதரவாக இருக்கிறேன்.

    களத்தின் உள்ளே மற்றும் வெளியே நான் பல தவறுகளை செய்திருக்கிறேன். நான் செய்த தவறுக்கு தினந்தோறும் மன்னிப்பு கேட்க தயங்குகிறேன். வீட்டில் எனது தனிமை, குடும்பத்தார், நண்பர்களிடம் மட்டுமே நான் எனது தவறுகளை திருத்திக்கொள்ள முடியும்.

    இவை அனைத்தும் என் வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நபரை அதிக அளவில் பாதித்துள்ளது. என்னுடன் பயணிக்க வேண்டும் என்று நான் விரும்பிய பெண், எனது குழந்தையின் தாய் இதில் அடங்குவர். இது எனது குடும்பத்தை காயப்படுத்தி இருக்கிறது.

    அவள் சமீபத்தில்தான் கருவுற்று மகிழ்ச்சியான காலக்கட்டத்தை துவங்கி இருக்கிறாள். புருனா, நான் ஏற்கனவே எனது தவறுகள், தேவையற்ற சர்ச்சைகளுக்காக மன்னிப்பு கேட்டு விட்டேன். இதற்காக பொதுவெளியில் பேச வேண்டும் என்று கருதுகிறேன். ஒரு தனிப்பட்ட விஷயம் பொதுவெளிக்கு வந்து விட்டால், அதற்கான மன்னிப்பும் பொதுவெளியிலேயே கேட்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    நெய்மரின் இந்த பதிவுக்கு ஆதரவு குவிந்து வருகிறது. அவர் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே 7 மில்லியன் ரசிகர்கள் தங்கள் ஆதரவை பதிவு செய்துள்ளனர்.

    • அவருக்கு கணுக்காலில் தசைநார் பாதிப்புக்கு அறுவை சிகிச்சையை டாக்டர்கள் பரிந்துரைத்து உள்ளனர்.
    • ஆபரேசனின் அவசியத்தை அனைத்து நிபுணர்களும் உறுதிபடுத்தி உள்ளனர்.

    பிரபல கால்பந்து நட்சத்திர வீரர் நெய்மர். பிரேசிலை சேர்ந்த அவர், பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் கிளப் அணியில் விளையாடி வருகிறார். சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடி வரும் நெய்மர், கடந்த 20-ந்தேதி லில்லே அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது கணுக்காலில் காயம் அடைந்தார். அவரது காயத்தின் தன்மை குறித்து ஆராயப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் காயம் காரணமாக நெய்மர், எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகி உள்ளார். மேலும் அவருக்கு காலில் ஆபரேசன் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் கிளப் அணி உறுதிபடுத்தியது. இது தொடர்பாக அந்த அணி வெளியிட்ட அறிக்கையில் கணுக்காலில் காயம் அடைந்துள்ள நெய்மர் குறைந்தது 3 மாதங்களுக்கு விளையாட முடியாத சூழ்நிலை உள்ளது.

    அவருக்கு கணுக்காலில் தசைநார் பாதிப்புக்கு அறுவை சிகிச்சையை டாக்டர்கள் பரிந்துரைத்து உள்ளனர். ஆபரேசனின் அவசியத்தை அனைத்து நிபுணர்களும் உறுதிபடுத்தி உள்ளனர். அவர் பயிற்சிக்கு திரும்புவதற்கு 3 முதல் 4 மாதங்கள் ஆகும். அவருக்கு தோகாவில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

    • எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க நாங்கள் இன்னும் திட்டமிடவில்லை.
    • காயம் காரணமாக நெய்மர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    செர்பியாவுக்கு எதிரான போட்டியில் பிரேசிலின் கேப்டனும், நட்சத்திர வீரருமான நெய்மர் காயம் அடைந்தார். 79-வது நிமிடத்தில் நெய்மர் பந்தை கடத்தி சென்ற போது எதிரணி வீரர் பறிக்க முயன்றார். அப்போது கால் இடறி நெய்மர் கீழே விழுந்தார். இதில் கணுக்காலில் ஏற்பட்ட வலியால் அவர் துடித்தார்.

    உடனே அணியின் மருத்துவர் களத்துக்குள் வந்து நெய்மரை பரிசோதித்தார். பின்னர் நெய்மர் போட்டியில் இருந்து வெளியேறினார். மைதானத்துக்கு வெளியே அமர்ந்திருந்த அவரது கண்கள் கலங்கி இருந்தன.

    காயம் காரணமாக நெய்மர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக பிரேசில் அணியின் மருத்துவர் ரோட்ரிகோ லாஸ்மர் கூறியதாவது:-

    நெய்மரின் காயத்தின் தன்மை குறித்து மதிப்பீட்டை பெற நாங்கள் 24 முதல் 48 மணி நேரம் காத்திருக்க வேண்டும். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க நாங்கள் இன்னும் திட்டமிடவில்லை. நாளை (இன்று) காயம் குறித்து புதிய மதிப்பீட்டை பெறுவோம் என்றார். பயிற்சியாளர் டைட் கூறும் போது, நெய்மர் உலக கோப்பையில் அடுத்த போட்டிகளில் விளையாடுவார் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம் என்றார்.

    பிரான்ஸ் கோப்பைக்கான இறுதிப் போட்டியை கேலரியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த நெய்மர், ரசிகரின் முகத்தில் குத்து விட்டதால் மூன்று போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    பிரான்ஸ் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் பாரிஸ் ஜெயின்ட் ஜெர்மைன் - ரென்னெஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்ததால் ‘பெனால்டி’ சூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ரென்னெஸ் அணி வெற்றி பெற்றது.

    காயத்தால் தற்போது வெளியில் இருக்கும் பிஎஸ்ஜி அணியின் முன்னணி வீரரான நெய்மர், கேலரியில் இருந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார். தனது அணி தோல்வியடைந்த விரக்தியில் இருந்த நெய்மரை, ரென்னெஸ் ரசிகர் ஒருவர் படம் பிடித்ததாக தெரிகிறது.

    இதனால் கோபம் அடைந்த நெய்மர், அந்த ரசிகரின் முகத்தில் குத்து விட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி, நெய்மருக்கு மூன்று போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தியது. #Neymar #Brazil #Uruguay
    லண்டன்:

    5 முறை உலக சாம்பியன் பிரேசில்-உருகுவே அணிகள் இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று முன்தினம் நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பந்து அதிக நேரம் பிரேசில் அணியினர் வசம் இருந்தாலும் எளிதில் கோல் அடிக்க முடியவில்லை.

    76-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி நட்சத்திர வீரர் நெய்மார் கோல் அடித்தார். உருகுவே பின்கள வீரர் டியாகோ லாக்சல்ட் முரட்டு ஆட்டத்தால் பிரேசில் வீரர் டானிலோவை தடுத்ததற்காக வழங்கப்பட்ட இந்த பெனால்டி வாய்ப்புக்கு உருகுவே வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்த எதிர்ப்புக்கு நடுவர் பணியவில்லை.

    உருகுவே அணி வீரர்கள் லூயிஸ் சுவாரஸ், எடிசன் கவானி ஆகியோர் கோலை நோக்கி அடித்த அபாரமான ஷாட்களை பிரேசில் அணியின் கோல்கீப்பர் அலிசன் லாவகமாக தடுத்து நிறுத்தினார். முடிவில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தியது.
    பிரான்ஸ் அணியின் தலைசிறந்த இளம் வீரரான கிலியான் மப்பேவை எனது மகனுக்கு ரொம்ப பிடிக்கும் என நெய்மர் தெரிவித்துள்ளார். #Neymar #KylianMbappe
    பிரான்ஸ் கால்பந்து அணியின் தலைசிறந்த இளம் வீரரான கிலியான் மப்பே திகழ்ந்து வருகிறார். பிரான்ஸ் நாட்டின் முதன்மை லீக்கில் மொராக்கோ அணிக்காக விளையாடினார். பின்னர் தலைசிறந்த கிளப்பான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு மாறினார்.

    ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பிரான்ஸ் வெற்றி பெற்ற சாம்பியன் பட்டம் வென்றது. பிரான்ஸ் வெற்றி பெற கிலியான் மப்பேவின் ஆட்டம் முக்கிய காரணமாக இருந்தது. பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் கிலியான் மப்பே உடன் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் விளையாடி வருகிறார்.



    எனது மகனுக்கு கிலியான் மப்பே மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து நெய்மர் கூறுகையில் ‘‘எனது மகன் கிலியான் மப்பேவை அதிக அளவில் நேசிக்கிறான். நான் அவனை பயிற்சி இடத்திற்கு அழைத்து வந்தேன். அப்போது கிலியான் மப்பே உடனே இருந்தான்.

    அப்போது மப்பே உடன் போட்டோ எடுக்க வேண்டும். அதை பள்ளியில் தனது நண்பர்களிடம் காட்ட வேண்டும் என்று விரும்பினான். போட்டி எடுத்தப்பிறகு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்’’ என்றார்.
    பாதுகாப்பு வளையத்தை மீறி அழுது கொண்டு மைதானத்திற்குள் ஓடிவந்த சிறுவனை கட்டியணைத்து ஜெர்சியை வழங்கினார் நெய்மர். #Neymar #PSG
    பிரேசில் அணியின் முன்னணி கால்பந்து வீரர் நெய்மர். இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்றிரவு பிஎஸ்ஜி ரேன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. 90 நிமிடத்தில் பிஎஸ்ஜி 3-1 முன்னிலைப் பெற்றிருந்தது.

    அதன்பின் இன்ஜூரி நேரமாக 3 நிமிடங்கள் அதிகமாக கொடுக்கப்பட்டது. அப்போது நெய்மருக்குப் பதிலாக மாற்று வீரர் களம் இறக்கப்பட்டார். இதனால் நெய்மர் மைதானத்தை விட்டு வெளியேறினார். அப்போது திடீரென ஒரு சிறுவன் பாதுகாப்பு அதிகாரிகளை மீறி நெய்மரை நோக்கி அழுதுகொண்டே ஒடிவந்தான்.

    அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அந்த சிறுவனை பிடித்து வெளியேற்ற முயற்சி செய்தனர். இதை கவனித்த நெய்மர், அந்த சிறுவனை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று கூறி தன்னுடன் அணைத்து மைதானத்தை விட்டு வெளியேறினார். அப்போது அந்த சிறுவன் நெய்மரின் ஜெர்சியை பிடித்து ஜெர்சி வேண்டும் என சைகை காட்டினார். உடனே நெய்மர் ஜெர்சியை கழற்றி கொடுத்து அந்த சிறுவனை மகிழ்ச்சிப்படுத்தினார்.
    ×