இந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெறுகிறார் நெய்மர்

பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் ஜூனியர் தனது ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் தனது கால்பந்து பயணத்தை முடித்துக்கொள்ள இருப்பதாக கூறியுள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெறுகிறார் நெய்மர்
Published on

பிரேசில் நாட்டிற்காக அதிக கோல்கள் (மொத்தம் 79) அடித்த வீரராக இருக்கும் நெய்மர், இந்த ஆண்டு இறுதியில் கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

காயம் காரணமாக பல போட்டிகளைத் தவறவிட்ட நெய்மர், தற்போது தனது சிறு வயது அணியான சந்தோஷ் கிளப்பில் விளையாடி வருகிறார். பார்சிலோனா, பிஎஸ்ஜி அணிகளுக்காக விளையாடியுள்ளார் நெய்மர்.

இந்த ஆண்டு கால்பந்து உலகக் கோப்பையில் பங்கேற்க நெய்மர் இன்னும் உடல் தகுதி பெறவில்லை என பிரேசில் அணி பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நெய்மர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இப்போது என்னாகும் என்று தெரியவில்லை. அடுத்த ஆண்டு குறித்தும் தெரியாது. அநேகமாக டிசம்பர் வந்ததுடன் நான் ஓய்வு பெறுவேன் என நினைக்கிறேன். ஆண்டின் இறுதியில் என் மனது என்ன நினைக்கிறதோ அப்படிதான் நடக்கும். இந்த ஆண்டு மிக முக்கியமானது. சந்தோஷ் கிளப்பிற்கு மட்டுமல்ல, பிரேசில் தேசிய அணிக்கும். உலகக் கோப்பை நடைபெறும் ஆண்டு என்பதால் எனக்கும் முக்கியமானது. இந்த சீசனில் 100 சதவீதம் விளையாட விரும்புகிறேன் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com