search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FIFA2018"

    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்றைய மூன்றாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தியது. #WorldCup2018 #FIFA2018 #TUNENG

    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஸ்வீடன் அணி, தென்கொரியாவையும், இரண்டாவது ஆட்டத்தில் பெல்ஜியம் அணி, பனாமாவையும் வீழ்த்தியது. இதையடுத்து நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - துனிசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

    இப்போட்டி தொடங்கியது முதலே இங்கிலாந்து வீரர்கள் அடுத்துடுத்து கோல் போட முயற்சித்தனர். முதல் ஐந்து நிமிடத்திற்குள் இரண்டு கோல் போடும் வாய்ப்புகளை இங்கிலாந்து அணி தவறவிட்டது. முதல் பாதிநேர ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.



    இதையடுத்து துனிசியா வீரர்களும் கோல் அடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். 35-வது நிமிடத்தில் துனிசியா அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் துனிசியா அணியின் பெர்சானி சஸ்சி கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமனானது. முதல் பாதிநேர ஆட்டம் முசிடில் போட்டி, 1-1 என சமனில் இருந்தது. 



    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் இரண்டாவது கோல் அடித்தார். அதன்பின் துனிசியா அணியினர் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 2-1 என வெற்றி பெற்றது.



    இன்று நடைபெற உள்ள லீக் போட்டிகளில் கொலம்பியா - ஜப்பான், போலாந்து - செனகல், ரஷியா - எகிப்து அணிகள் பலப்பரீட்சை சென்கின்றன. #WorldCup2018 #FIFA2018 #TUNENG
    உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் பனாமாவை 3-0 என பெல்ஜியம் அணி வீழ்த்தியது. #WorldCup2018 #FIFA2018 #BELPAN

    சோச்சி:

    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஸ்வீடன் அணி, தென்கொரியாவை வீழ்த்தியது. இரண்டாவது ஆட்டத்தில் ‘ஜி’ பிரிவில் இடம்பிடித்துள்ள பெல்ஜியம் - பனாமா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

    இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இதனால் இடைவேளையின் போது ஆட்டம் 0-0 என சமனில் இருந்தது. 


    பெல்ஜியம் அணியின் டிரைஸ் மெர்டன்ஸ்

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டம் தொடங்கிய 47-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் டிரைஸ் மெர்டன்ஸ் கோல் அடித்தார். இதனால் பெல்ஜியம் அணி 1-0 என முன்னிலை பெற்றது.

    அதைத்தொடர்ந்து பெல்ஜியம் அணியின் ரொமெலோ லகாகு 69 மற்றும் 75-வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்தார். இதனால் 3-0 என பெல்ஜியம் அணி முன்னிலை பெற்றது. 



    பனாமா அணியினர் இறுதிவரை மேற்கொண்டு எந்த கோலும் அடிக்கவில்லை. இதனால் பெல்ஜியம் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3 புள்ளிகளை தட்டிச் சென்றது. அடுத்ததாக நடைபெற உள்ள லீக் போட்டியில் துனிசியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை சென்கின்றன. #WorldCup2018 #FIFA2018 #BELPAN
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் மெக்சிகோவிற்கு எதிராக ஜெர்மனி வீரர்கள் மோசமாக விளையாடியதாக பயிற்சியாளர் கூறியுள்ளார். #WorldCup2018 #GERMEX
    நடப்பு சாம்பியனான ஜெர்மனி நேற்று தனது தொடக்க ஆட்டத்தில் மெக்சிகோவிடம் 1-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. 1982-ம் ஆண்டுக்கு பிறகு உலக கோப்பை தொடக்க ஆட்டத்தில் ஜெர்மனி தோற்பது இது முதல் முறையாகும்.

    இந்த தோல்வியால் ஜெர்மனி பயிற்சியாளர் ஜோசிம் லொய் அதிருப்தி அடைந்துள்ளார். அவர் கூறியதாவது:-

    முதல் பாதி ஆட்டத்தில் ஜெர்மனி வீரர்கள் ஆட்டம் மோசமாக இருந்தது. நாங்கள் கோலை நோக்கி பல ஷாட்டுகள் அடித்தோம். ஆனால் அதிர்ஷ்டம் இல்லை. எங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தாக்குதல் மற்றும் பந்தை கடத்துவதில் திறமையாக செயல்படவில்லை.

    முதல் ஆட்டத்தில் தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் அதை ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும். ஜெர்மனி அணி தோல்வி இருந்து மீண்டு வரும் திறமை வாய்ந்தது. அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெறும் என்றார்.  #WorldCup2018 #FIFA2018 #GERMEX
    உலக கோப்பை கால்பந்து தொடரில் அரையிறுதிக்குள் நுழையும் நான்கு நாடுகள் குறித்து பன்றி மூலம் ஆருடம் பார்க்கப்பட்டதில் எந்தெந்த அணி என்பது தெரியவந்துள்ளது. #WorldCup #WorldCup2018 #FifaWorldCup2018
    லண்டன்:

    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இதில் அரை இறுதிபோட்டியில் நுழையும் 4 நாடுகளை தெரிந்துகொள்ள தற்போது பல்வேறு ஆருடங்கள் மூலம் கணிப்புகள் நடைபெற்று வருகின்றன.

    இந்தநிலையில் இங்கிலாந்தில் டெர்பிஷையர் பகுதியில் ஒரு பன்றி மூலம் ஆருடம் பார்க்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஹெஜ்கிராமத்தை சேர்ந்த ஸ்டீவன்ஸ் என்பவர் தனது பண்ணையில் 100 பன்றிகளை வளர்க்கிறார்.

    அதில், மார்கஸ் என்ற ஒரு சிறிய பன்றி மூலம் ஆருடம் நிகழ்த்தப்பட்டது. உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் பங்கேற்ற நாடுகளின் கொடிகள் குத்தப்பட்ட ஆப்பிள்கள் இந்த பன்றிக்கு உணவாக வைக்கப்பட்டது.



    ஆனால் அந்த பன்றி பெல்ஜியம், அர்ஜென்டினா, நைஜீரியா மற்றும் உருகுவே ஆகிய 4 நாடுகளின் கொடிகள் குத்திய ஆப்பிள்களை மட்டும் சாப்பிடவில்லை. மற்ற அனைத்தையும் சாப்பிட்டு விட்டது.

    எனவே அரையிறுதி போட்டியில் பெல்ஜியம், அர்ஜென்டினா, நைஜீரியா மற்றும் உருகுவே ஆகிய 4 நாடுகள் இடம்பெறும் என நம்பபடுகிறது.

    இப்பன்றியின் கணிப்பு சரியாக இருக்கும் என அதன் உரிமையாளர் ஸ்டீவன்ஸ் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் தேர்தலையும் இப்பன்றி சரியாக கணித்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    2010 உலககோப்பை கால்பந்து போட்டியின் போது பால் என்ற ஆக்டோபஸ் வெற்றியாளரை சரியாக கணித்தது குறிப்பிடத்தக்கது. #WorldCup #WorldCup2018 #FifaWorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற பிரேசில், சுவிட்சர்லாந்து இடையிலான லீக் ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது. #WorldCup2018 #FIFA2018 #BRASUI

    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் செர்பியா, கோஸ்டா ரிகா அணியையும், இரண்டாவது ஆட்டத்தில் மெக்சிகோ, ஜெர்மனி அணியையும் வீழ்த்தியது. தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் ‘ஈ’ பிரிவில் இடம்பிடித்துள்ள பிரேசில் - சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.

    இப்போட்டியின் முதல் பாதி நேர ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் பிலிப்பே கவுடின்ஹோ கோல் அடித்தார். இதனால் பிரேசில் அணி 1-0 என முன்னிலை பெற்றது. சுவிட்சர்லாந்து அணியினர் எவ்வளவு முயன்றும் முதல் பாதிநேர ஆட்டத்தில் கோல் அடிக்க முடியவில்லை.



    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் ஸ்டீவன் ஜூபர் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. அதன்பின் இரு அணியினரும் கோல் போடும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். ஆனால் இறுதிவரை இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.



    இதைத்தொடர்ந்து இன்று நடைபெற உள்ள லீக் போட்டிகளில் ஸ்வீடன் - கொரியா குடியரசு, பெல்ஜியம் - பனாமா, துனிசியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #WorldCup2018 #FIFA2018 #BRASUI
    உலகக்கோப்பை கால்பந்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ‘எஃப்’ பிரிவில் நடப்பு சாம்பியனான ஜெர்மனியை 1-0 என மெக்சிகோ அணி வீழ்த்தியது. #WorldCup2018 #FIFA2018 #GERMEX

    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டத்தில் செர்பியா அணி கோஸ்டா ரிகா அணியை வீழ்த்தியது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ‘எஃப்’ பிரிவில் இடம்பிடித்துள்ள நடப்பு சாம்பியன் ஜெர்மனி - மெக்சிகோ அணிகள் மோதின.

    முதல் பாதி நேர ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் மெக்சிகோ அணியின் ஹிர்விங் லொசானோ கோல் அடித்தார். இதனால் மெக்சிகோ அணி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் மெக்சிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.



    இதைத்தொடர்ந்து நடைபெற உள்ள மூன்றாவது ஆட்டத்தில் ‘ஈ’ பிரிவில் இடம்பிடித்துள்ள பிரேசில் - சுவிட்சர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #WorldCup2018 #FIFA2018 #GERMEX
    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ‘சி’ பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரோசியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியா அணியை வீழ்த்தியது. #FIFA2018 #WolrdCup2018 #CRONGA

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 12.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள குரோசியா, நைஜீரியா அணிகள் மோதின. 

    இப்போட்டியின், முதல் பாதிநேர ஆட்டத்தின் 32-வது நிமிடம் குரோசியா வீரர் ஒருவர் கோல் அடிக்க முயற்சித்தார். அந்த பந்து நைஜீரியா வீரர் எடிபோவின் காலில் பட்டு சுய கோலாக மாறியது. இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் குரோசியா அணி 1-0 என முன்னிலை பெற்றது.



    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 71-வது நிமிடம் குரோசியா அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் குரோசியா வீரர் மோட்ரிச் கோல் அடித்தார். இதனால் குரோசியா அணி 2-0 என முன்னிலை பெற்றது.

    இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இறுதியில், குரோசியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.



    இன்று மூன்று லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கோஸ்டா ரிக்கா - செர்பியா, ஜெர்மனி - மெக்சிகோ, பிரேசில் - சுவிட்சர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #FIFA2018 #WolrdCup2018 #CRONGA
    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ‘சி’ பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டென்மார்க் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெரு அணியை வீழ்த்தியது. #FIFA2018 #WolrdCup2018 #PERDEN

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் மாலை 9.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் இடம்பிடித்துள்ள டென்மார்க், பெரு அணிகள் மோதின. பெரு அணி 36 ஆண்டுகளுக்கு பின் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் களமிறங்கியுள்ளது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் அதிக அளவில் மைதானத்துக்கு வந்திருந்தனர்.

    முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் எந்த கோலும் அடிக்காததால் ஆட்டம் 0-0 என சமனில் இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 59-வது நிமிடம் டென்மார்க் அணியின் யூசுப் யுராரி கோல் அடித்தார். இதனால் டென்மார்க் அணி 1-0 என முன்னிலை பெற்றது.



    இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், டென்மார்க் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    அடுத்ததாக நடைபெற உள்ள இன்றைய நான்காவது ஆட்டத்தில் குரோசியா - நைஜீரியா அணிகள் பலப்பரிட்சை செய்கின்றன. #FIFA2018 #WolrdCup2018 #PERDEN
    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ‘டி’ பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. #FIFA2018 #WolrdCup2018 #ARGvsICE
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் உள்ள அர்ஜென்டினா மற்றும் ஐஸ்லாந்து மோதின.

    ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் செர்ஜியோ அகிரோ ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, சிறிது நேரத்திலேயே ஐஸ்லாந்து அணியின் ஆல்பிரட் பின்பகாசன் 23-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் சமனிலை அடைந்தன. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமனிலையில் இருந்தன.

    இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், அர்ஜென்டினா மற்றும் ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி 1-1 என்ற கணக்கில் சமனிலை அடைந்தது.

    ஐஸ்லாந்து அணி முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #FIFA2018 #WolrdCup2018 #ARGvsICE
    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ‘சி’ பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது. #FIFA2018 #WolrdCup2018 #FRAvsAUS
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று மதியம் 3.30 மணிக்கு கசன் அலினாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள பிரான்ஸ்-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும்  அடிக்கவில்லை. இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் நட்சத்திர வீரர் அண்டோனி கிரீஸ்மேன் 58 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலை வகிக்க வைத்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆஸ்திரேலியாவின் மைக் ஜெடினக் 62-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனிலை வகித்தன.

    இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் பவுல் போக்பா ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் பிரான்ஸ் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

    தொடர்ந்து, ஆஸ்திரேலியா அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில், பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. #FIFA2018 #WolrdCup2018 #FRAvsAUS
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘பி’ பிரிவில் இன்று நடைபெற்ற போர்த்துகல், ஸ்பெயின் இடையேயான லீக் போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. #FIFA2018 #WolrdCup2018 #PORESP

    சோச்சி:

    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷியா 5-0 என சவுதி அரேபியாக துவம்சம் செய்தது. நேற்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் உருகுவே, எகிப்தையும், இரண்டாவது ஆட்டத்தில் ஈரான், மொராக்கோவையும் வீழ்த்தின.



    மூன்றாவது ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று இரவு 11.30 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள போர்த்துகல் - ஸ்பெயின் அணிகள் மோதின. 

    ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் போர்த்துகல் அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் அந்த அணியின் கேப்டனும்,  நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார். இதனால் மூன்றாவது நிமிடத்திலேயே போர்த்துகல் அணி 1-0 என முன்னிலை பெற்றது. 



    அதைத்தொடர்ந்து 24-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் தியாகோ கோஸ்டா சிறப்பான முறையில் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. அதன்பின் 44-வது நிமிடத்தில் போர்த்துகல் அணியின் ரொனால்டோ மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்ட முடிவில் போர்த்துகல் அணி 2-1 என முன்னிலையில் இருந்தது.



    தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதிநேர ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் தியாகோ கோஸ்டா இரண்டாவது கோல் அடித்தார். 58-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் நாச்சோ ஒரு கோல் அடித்தார். இது ஸ்பெயின் அணிக்காக அவர் அடிக்கும் முதல் கோலாகும். இதனால் ஸ்பெயின் அணி 3-2 என முன்னிலை பெற்றது.



    அதன்பின் ஆட்டம் முடிய 2 நிமிடமே இருக்கும் நிலையில், கிடைத்த பிரீ-கிக் வாய்ப்பை ரொனால்டோ சரியாக பயன்படுத்தி கொண்டு கொல் அடித்தார். இது அவரது ஹாட்ரிக் கோல் ஆகும். இதனால் ஆட்டம் மீண்டும் 3-3 என சமனானது. அதைத்தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் எந்த கோலும் அடிக்கப்படாததால் இந்த போட்டி 3-3 என சமனில் முடிந்தது. இதனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.



    நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் பிரான்ஸ் - ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா - ஐஸ்லாந்து, பெரு - டென்மார்க், குரோசியா - நைஜீரியா அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #FIFA2018 #WolrdCup2018 #PORESP
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘பி’ பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஈரான் அணி, 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அனியை வீழ்த்தியது. #FIFA2018 #WolrdCup2018 #MARIRN

    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நேற்று தொடங்குகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷியா 5-0 என சவுதி அரேபியாக துவம்சம் செய்தது. இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இன்று நடைபெற்ற ஏ பிரிவு ஆட்டத்தில் உருகுவே 1-0 என எகிப்தை வீழ்த்தியது.

    இரண்டாவது ஆட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஈரான் - மொராக்கோ அணிகள் மோதின. 



    ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் முதல்பாதி நேர ஆட்டம் கோலின்றி முடிவடைந்தது.

    2-வது பாதி நேரத்திலும் இரு அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் வலது பக்கம் கார்னர் பகுதியில் இருந்து ஈரான் அணிக்கு ப்ரீஹிக் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் மொராக்கோ அணியின் பவுஹட்டவுஸ் தலையில் பட்ட பந்து கோலானது. இதனால் ஈரான் 1-0 என முன்னிலைப் பெற்றது.



    அதன்பின் மொராக்கோ அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஈரான் 1-0 என வெற்றி பெற்றது. #FIFA2018 #WolrdCup2018 #MARIRN
    ×