என் மலர்
நீங்கள் தேடியது "மொராக்கோ"
- லூக்கோஸ் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து, அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது.
- சிடி ஸ்லிமானே மாகாணத்தின் கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
மொராக்கோ:
மொராக்கோவில் கடந்த சில வாரமாக கனமழை மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அங்கு பெய்த கனமழையால் கசார், எல்கெபிர் நகரம் வெள்ளத்தில் மூழ்கியது.
லூக்கோஸ் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து, அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. சிடி ஸ்லிமானே மாகாணத்தின் கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
சார், எல்-கெபிர் நகரில் மட்டும் சுமார் 50,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். 7 ஆண்டு வறட்சிக்குப் பிறகு பெய்துள்ள இந்த கனமழையால் அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன.
- செனகல் கால்பந்து சங்கத்துக்கு ரூ.5½ கோடியும், மொராக்கோ கால்பந்து சங்கத்துக்கு சுமார் ரூ.3 கோடியும் அபராதமாக விதித்துள்ளது.
- செனகல் தலைமை பயிற்சியாளர் பாப் தியாவுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
கேப்டவுன்:
நேஷன்ஸ் ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கடந்த 18-ந்தேதி இரவு மொராக்கோவின் ரபாத் நகரில் நடந்தது. இதில் செனகல் அணி கூடுதல் நேரத்தில் கோல் அடித்து 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
முன்னதாக கடைசி நிமிடத்தில் மொராக்கோ அணிக்கு பெனால்டி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடுவரிடம் வாக்குவாதம் செய்த செனகல் வீரர்கள் பயிற்சியாளரின் அறிவுறுத்தலின் பேரில் மைதானத்தை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த குழப்பத்தால் 14 நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது. சமாதானத்திற்கு பிறகு மீண்டும் களம் திரும்பிய செனகல் வாகை சூடியது. ஆனால் ஆட்டத்தின் பாதியில் நடையை கட்டிய வீரர்களின் செயலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் கடுமையாக கண்டித்தது.
இந்த நிலையில் இது குறித்து விசாரித்த ஆப்பிரிக்க கால்பந்து சம்மேளனம், வீரர்களின் மோசமான நடத்தைக்காக செனகல் கால்பந்து சங்கத்துக்கு ரூ.5½ கோடியும், மொராக்கோ கால்பந்து சங்கத்துக்கு சுமார் ரூ.3 கோடியும் அபராதமாக விதித்துள்ளது.
மேலும் விளையாட்டின் புகழுக்கு களங்கம் விளைவித்ததாக செனகல் தலைமை பயிற்சியாளர் பாப் தியாவுக்கு 5 ஆப்பிரிக்க போட்டிகளில் பணியாற்ற தடையும், ரூ.92 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதே போல் ஒழுங்கீன செயலுக்காக செனகல் வீரர்கள் லிமன் என்டியாயே, இஸ்மைலா சர் ஆகியோருக்கு 2 ஆப்பிரிக்க போட்டிகளிலும், மொராக்கோ கேப்டன் அச்ரப் ஹாகிமிக்கு 2 போட்டிகளிலும், இஸ்மைல் சாய்பரிக்கு 3 போட்டிகளிலும் விளையாட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
- அருகருகே அமைந்த அந்த இரண்டு குடியிருப்பு கட்டடங்களிலும் எட்டு குடும்பங்கள் வசித்து வந்தன.
- இந்த விபத்தானது மொராக்கோவில் இந்தாண்டு நடைபெற்ற 2வது பெரிய விபத்தாகும்.
மொராக்கோவின் 2வது பெரிய நகரமான ஃபெஸ் நகரில் இரண்டு நான்கு மாடி குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து விழுந்து நேற்று பெரும் விபத்து ஏற்பட்டது.
அருகருகே அமைந்த அந்த இரண்டு குடியிருப்பு கட்டடங்களிலும் எட்டு குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் நேற்று ஏற்பட்ட விபத்தில் 19 பேர் உயிரிழந்தர். மேலும் 16 பேர் காயங்களுடன் சிகிச்சை அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
இடிபாடுகளுக்கும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தெரியாததால் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெறுகின்றன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொங்க உள்ளது.
இந்த விபத்தானது மொராக்கோவில் இந்தாண்டு நடைபெற்ற 2வது பெரிய விபத்தாகும். முன்னதாக மொராக்கோவில் கடந்த மே மாதம் ஏற்பட்ட மற்றொரு கட்டட விபத்தில் 10 போ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
வடமேற்கு ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள மொராக்கோ நாட்டில் ஆறாம் முஹம்மது தலைமையிலான மன்னராட்சி நடைபெற்று வருகிறது. அரசு மற்றும் முப்படைகளின் தலைவராக மன்னர் விளங்கி வருகிறார். அந்நாட்டின் பாராளுமன்றத்தில் இரு அவைகள் உள்ளன.
பாராளுமன்றத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களில் இருந்து பிரதமர் தேர்வு செய்யப்படுகிறார். ஆட்சி நிர்வாகத்தை பிரதமரால் நியமிக்கப்பட்ட மந்திரிசபை நடத்தி வருகிறது. சாடெடைன் ஒத்மானி தற்போது பிரதமர் பதவியை வகித்து வருகிறார்.
சுமார் மூன்றரை கோடி மக்கள் வாழ்ந்துவரும் மொராக்கோவின் முதன்மை மதமாக இஸ்லாம் உள்ளது. மக்கள்தொகையில் பெரும்பான்மையானவர்கள் அராபிய - பெர்பர் வம்சாவளியினராவார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக்கு பின்னர் மன்னர் கையொப்பமிட்ட பின்னர் இந்த சட்டம் விரைவில் அமலுக்கு வரும் என தெரிகிறது. #Morocco ##Moroccomilitary








