என் மலர்
நீங்கள் தேடியது "செனகல்"
- செனகல் கால்பந்து சங்கத்துக்கு ரூ.5½ கோடியும், மொராக்கோ கால்பந்து சங்கத்துக்கு சுமார் ரூ.3 கோடியும் அபராதமாக விதித்துள்ளது.
- செனகல் தலைமை பயிற்சியாளர் பாப் தியாவுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
கேப்டவுன்:
நேஷன்ஸ் ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கடந்த 18-ந்தேதி இரவு மொராக்கோவின் ரபாத் நகரில் நடந்தது. இதில் செனகல் அணி கூடுதல் நேரத்தில் கோல் அடித்து 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
முன்னதாக கடைசி நிமிடத்தில் மொராக்கோ அணிக்கு பெனால்டி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடுவரிடம் வாக்குவாதம் செய்த செனகல் வீரர்கள் பயிற்சியாளரின் அறிவுறுத்தலின் பேரில் மைதானத்தை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த குழப்பத்தால் 14 நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது. சமாதானத்திற்கு பிறகு மீண்டும் களம் திரும்பிய செனகல் வாகை சூடியது. ஆனால் ஆட்டத்தின் பாதியில் நடையை கட்டிய வீரர்களின் செயலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் கடுமையாக கண்டித்தது.
இந்த நிலையில் இது குறித்து விசாரித்த ஆப்பிரிக்க கால்பந்து சம்மேளனம், வீரர்களின் மோசமான நடத்தைக்காக செனகல் கால்பந்து சங்கத்துக்கு ரூ.5½ கோடியும், மொராக்கோ கால்பந்து சங்கத்துக்கு சுமார் ரூ.3 கோடியும் அபராதமாக விதித்துள்ளது.
மேலும் விளையாட்டின் புகழுக்கு களங்கம் விளைவித்ததாக செனகல் தலைமை பயிற்சியாளர் பாப் தியாவுக்கு 5 ஆப்பிரிக்க போட்டிகளில் பணியாற்ற தடையும், ரூ.92 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதே போல் ஒழுங்கீன செயலுக்காக செனகல் வீரர்கள் லிமன் என்டியாயே, இஸ்மைலா சர் ஆகியோருக்கு 2 ஆப்பிரிக்க போட்டிகளிலும், மொராக்கோ கேப்டன் அச்ரப் ஹாகிமிக்கு 2 போட்டிகளிலும், இஸ்மைல் சாய்பரிக்கு 3 போட்டிகளிலும் விளையாட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
- நேஷன்ஸ் ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் செனகல்- மொராக்கோ அணிகள் மல்லுக்கட்டின.
- கடைசி நிமிடத்தில் மொராக்கோ அணிக்கு பெனால்டி வாய்ப்பை நடுவர் வழங்கினார்
ரபாத்:
நேஷன்ஸ் ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் மொராக்கோவின் ரபாத் நகரில் நடந்தது. இதில் செனகல்- மொராக்கோ அணிகள் மல்லுக்கட்டின. தொடக்கம் முதலே பரபரப்பாக நகர்ந்த ஆட்டத்தில் வழக்கமான நேரத்தில் எந்த அணியினரும் கோல் போடவில்லை.
கடைசி நிமிடத்தில் மொராக்கோ அணிக்கு பெனால்டி வாய்ப்பை நடுவர் வழங்கினார். இது ஒருதலைபட்சமான முடிவு என்று எதிர்ப்பு தெரிவித்த செனகல் வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர்.
அத்துடன் மைதானத்திற்குள் ரசிகர்கள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சர்ச்சையால் 14 நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது. பிறகு ஒரு வழியாக சமாதானம் அடைந்த செனகல் வீரர்கள் மீண்டும் களம் திரும்பினர்.
பெனால்டி வாய்ப்பில் மொராக்கோ வீரர் பிராஹிம் டியாஸ் அடித்த ஷாட்டை செனகல் கோல் கீப்பர் எடுவர்டோ மென்டி எளிதில் தடுத்தார். தொடர்ந்து கூடுதல் நேரத்தில் செனகல் வீரர் பாப் கியே கோல் போட்டு அசத்தினார்.
முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் செனகல் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை சொந்தமாக்கியது. ஆனால் ஆட்டத்தில் பாதியில் நடையை கட்டிய வீரர்களின் செயலை வன்மையாக கண்டித்துள்ள சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் இன்பான்டினோ இது போன்ற சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். செனகல் அணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
- செனகலில் எதிர்க்கட்சி தலைவர் உஸ்மான் சோன்கோ வழக்கு ஒன்றில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- போலீசாருக்கும், எதிர்க்கட்சி தலைவரின் ஆதரவாளர்களுக்கும் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் எதிர்க்கட்சி தலைவர் உஸ்மான் சோன்கோ வழக்கு ஒன்றில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவரது கட்சியினர் போராட்டம் நடத்தினர். தலைநகர் டக்கார் மற்றும் தெற்கில் உள்ள ஜிகுயின்ச்சோர் நகரில் பெரும் வன்முறை மூண்டது. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. வன்முறையை ஒடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதில் போலீசாருக்கும், எதிர்க்கட்சி தலைவரின் ஆதரவாளர்களுக்கும் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டன. இந்த மோதலில் 9 பேர் பலியானார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதையடுத்து சமூக ஊடக தளங்களுக்கு அரசாங்கம் தடை விதித்து உள்ளது. இது தொடர்பாக உள்துறை மந்திரி அன்டோயின் பெலிக்ஸ் அப்துலே டியோம் கூறும்போது, "வன்முறையை தூண்டுவதற்காக போராட்டக்காரர்கள் பயன்படுத்திய சில சமூக ஊடக தளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்றவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
- 78 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
- இந்த விபத்தை அடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் உள்ள பிரதான விமான நிலையத்தில் 78 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
ஏர் செனகல் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட டிரான்சைர் ஏர்லைனுக்கு சொந்தமான போயிங் 737-300 விமானம் மாலி நாட்டுக்கு புறப்படும் பொது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தை அடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.






