search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Morocco"

    • நிலநடுக்கம் அந்நாட்டின் தெற்கில் உள்ள மராகேஷ் நகரை மையமாக கொண்டு உண்டானது.
    • நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல்.

    மொரோக்காவில் நேற்று இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவவரை 1037 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 1200 பேர் கயாமுற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    நிலநடுக்கம் பற்றி வருத்தம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில் அதனை பகிர்ந்து கொண்டார். இது குறித்த பதிவில், "மொரோக்கா நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளால் வருத்தம் அடைந்துள்ளேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில், எனது நினைவுகள் முழுக்க பாதிக்கப்பட்ட மொரோக்கா மக்களுடனேயே உள்ளது. இதில் உயிரிழந்தோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமுற்றவர்கள் விரைந்து குணம் பெற வேண்டுகிறேன். இந்த கடினமான சூழ்நிலையில், மொரோக்காவுக்கு தேவையான உதவிகளை செய்ய இந்தியா தயார் நிலையில் உள்ளது," என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

     

    வடஆப்பிரிக்க நாடான மொரோக்கோ, அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலின் எல்லையில் அமைந்துள்ளது. இங்கு நேற்று இரவு அந்நாட்டின் நேரப்படி 11.11 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் அந்நாட்டின் தெற்கில் உள்ள மராகேஷ் நகரை மையமாக கொண்டு உண்டானது. நகரில் இருந்து தென்மேற்கே 71 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹைஅட்லஸ் மலைகளில் 18.5 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    மொரோக்கோவின் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம், நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 ஆக பதிவானது என்று தெரிவித்து இருக்கிறது. நிலநடுக்கம் சில நொடிகள் வரை நீடித்தது இருக்கிறது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கி இடிந்து விழுந்தன. இரவு நேரம் என்பதால் மக்கள் தூங்கி கொண்டிருந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பலரால் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற முடியவில்லை.

    இதனால் கட்டிட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். அதே நேரத்தில் வீடுகளை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். அதன்பின் 19 நிமிடங்களுக்கு பிறகு 4.9 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வடமேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் 19 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்-பெண்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கும் சட்டத்துக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. #Morocco
    ரபாட்:

    வடமேற்கு ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள மொராக்கோ நாட்டில் ஆறாம் முஹம்மது தலைமையிலான மன்னராட்சி நடைபெற்று வருகிறது. அரசு மற்றும் முப்படைகளின் தலைவராக மன்னர் விளங்கி வருகிறார். அந்நாட்டின் பாராளுமன்றத்தில் இரு அவைகள் உள்ளன.

    பாராளுமன்றத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களில் இருந்து பிரதமர் தேர்வு செய்யப்படுகிறார். ஆட்சி நிர்வாகத்தை பிரதமரால் நியமிக்கப்பட்ட மந்திரிசபை நடத்தி வருகிறது. சாடெடைன் ஒத்மானி தற்போது பிரதமர் பதவியை வகித்து வருகிறார்.

    சுமார் மூன்றரை கோடி மக்கள் வாழ்ந்துவரும் மொராக்கோவின் முதன்மை மதமாக இஸ்லாம் உள்ளது. மக்கள்தொகையில் பெரும்பான்மையானவர்கள் அராபிய - பெர்பர் வம்சாவளியினராவார்கள்.

    அந்நாட்டில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள பகுதியில் வேலைவாய்ப்பு மற்றும் உதவித்தொகை கேட்டு வலியுறுத்தி சமீபகாலமாக போராட்டங்கள் பெருகி வருகின்றன. இது மன்னருக்கு எதிரான புரட்சியில் முடியலாம் என அந்நாட்டு அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.


    மன்னர் ஆறாம் முஹம்மது.

    இந்நிலையில், போராட்ட உணர்வுகளை குறைப்பதற்கும், நாட்டுப்பற்றை அதிகரிக்கச் செய்யும் வகையிலும், மக்களுக்கான உரிமைகள் மற்றும் பொறுப்புகளை புரிய வைக்கவும் 19 முதல் 25 வயதுக்கு இடையிலான ஆண்-பெண் இருபாலருக்கும் கட்டாயமாக ஓராண்டு காலத்துக்கு ராணுவ பயிற்சி அளிக்கும் சட்ட முன்வரைவுக்கு மொராக்கோ மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

    பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக்கு பின்னர் மன்னர் கையொப்பமிட்ட பின்னர் இந்த சட்டம் விரைவில் அமலுக்கு வரும் என தெரிகிறது. #Morocco ##Moroccomilitary
    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. #WorldCup2018 #SPAMOR
    உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்துள்ள ஸ்பெயின் மற்றும் மொராக்கோ அணிகள் மோதின.

    போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் முதல் பாதியில் 14-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் காலித் பவுடாய் ஒரு கோல் அடித்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்பெயின் அணியின் இஸ்கோ 19-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால்
    ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. 

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 81-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் யூசுப் என் நெய்ஸ்ரி ஒரு கோல் அடித்தார். இதனால் மொராக்கோ வெல்லும் என எதிர்பார்த்தனர்.

    ஆனால், கூடுதலாக வழங்கப்பட்ட நிமிடங்களில் முதலிலேயே, 91வது நிமிடத்தில் ஸ்பெயினின் லாகோ அஸ்பாஸ் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டு வந்தார்.

    இறுதியில், ஸ்பெயின் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
    இதனால் இரு அணிகளுக்கும் தலாஒரு புள்ளி கிடைத்தது. ஆனாலும், புள்ளிகள் அடிப்படையில் ஸ்பெயின் அணி அடுத்த சுற்றில் நுழைந்தது. அடுத்த சுற்றில் ரஷ்யா அணியுடன் மோதவுள்ளது.
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘பி’ பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஈரான் அணி, 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அனியை வீழ்த்தியது. #FIFA2018 #WolrdCup2018 #MARIRN

    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நேற்று தொடங்குகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷியா 5-0 என சவுதி அரேபியாக துவம்சம் செய்தது. இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இன்று நடைபெற்ற ஏ பிரிவு ஆட்டத்தில் உருகுவே 1-0 என எகிப்தை வீழ்த்தியது.

    இரண்டாவது ஆட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஈரான் - மொராக்கோ அணிகள் மோதின. 



    ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் முதல்பாதி நேர ஆட்டம் கோலின்றி முடிவடைந்தது.

    2-வது பாதி நேரத்திலும் இரு அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் வலது பக்கம் கார்னர் பகுதியில் இருந்து ஈரான் அணிக்கு ப்ரீஹிக் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் மொராக்கோ அணியின் பவுஹட்டவுஸ் தலையில் பட்ட பந்து கோலானது. இதனால் ஈரான் 1-0 என முன்னிலைப் பெற்றது.



    அதன்பின் மொராக்கோ அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஈரான் 1-0 என வெற்றி பெற்றது. #FIFA2018 #WolrdCup2018 #MARIRN
    ×