search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "senegal"

    • 78 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
    • இந்த விபத்தை அடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

    மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் உள்ள பிரதான விமான நிலையத்தில் 78 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

    ஏர் செனகல் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட டிரான்சைர் ஏர்லைனுக்கு சொந்தமான போயிங் 737-300 விமானம் மாலி நாட்டுக்கு புறப்படும் பொது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்தை அடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

    • செனகலில் எதிர்க்கட்சி தலைவர் உஸ்மான் சோன்கோ வழக்கு ஒன்றில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    • போலீசாருக்கும், எதிர்க்கட்சி தலைவரின் ஆதரவாளர்களுக்கும் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.

    மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் எதிர்க்கட்சி தலைவர் உஸ்மான் சோன்கோ வழக்கு ஒன்றில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவரது கட்சியினர் போராட்டம் நடத்தினர். தலைநகர் டக்கார் மற்றும் தெற்கில் உள்ள ஜிகுயின்ச்சோர் நகரில் பெரும் வன்முறை மூண்டது. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. வன்முறையை ஒடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதில் போலீசாருக்கும், எதிர்க்கட்சி தலைவரின் ஆதரவாளர்களுக்கும் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.

    போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டன. இந்த மோதலில் 9 பேர் பலியானார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதையடுத்து சமூக ஊடக தளங்களுக்கு அரசாங்கம் தடை விதித்து உள்ளது. இது தொடர்பாக உள்துறை மந்திரி அன்டோயின் பெலிக்ஸ் அப்துலே டியோம் கூறும்போது, "வன்முறையை தூண்டுவதற்காக போராட்டக்காரர்கள் பயன்படுத்திய சில சமூக ஊடக தளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்றவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

    கால்பந்து வரலாற்றில் இப்படி ஒரு விதியால் முதன்முறையாக அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாத சோகம் செனகல் அணிக்கு ஏற்பட்டுள்ளது. #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. ‘எச்’ பிரிவில் கொலம்பியா, செனகல், ஜப்பான், போலந்து அணிகள் இடம்பிடித்திருந்தன.

    நேற்று இந்த நான்கு அணிகளும் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் மோதின. ஒரு ஆட்டத்தில் செனகல் அணி கொலம்பியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 1-0 என கொலம்பியா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. அதேவேளையில் போலந்திடம் 0-1 என ஜப்பான் தோல்வியடைந்தது.

    இந்த பிரிவில் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும் மற்றொரு அணி எது என்பதில் ஜப்பான், செனகல் அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. இரண்டு அணிகளும் தலா நான்கு புள்ளிகள் பெற்றிருந்ததால் எந்த அணி அதிக கோல் அடித்துள்ளது என்று பார்க்கப்பட்டது. அப்போது இரு அணிகளும் தாலா நான்கு கோல்கள் அடித்து சமநிலைப் பெற்றிருந்தது.



    இதனால் எந்த அணி குறைவான கோல் வாங்கியிருக்கிறது என்று பார்க்கப்பட்டது. அப்போது இரு அணிகளும் தலா நான்கு கோல்கள் விட்டுக்கொடுத்து சமநிலையில் இருந்தது. இதனால் போட்டியின்போது அதிக தவறுகள் செய்தற்காக வழங்கப்படும் மஞ்சள் அட்டை எந்த அணி குறைவாக பெற்றிருக்கிறது என்று பார்க்கப்பட்டது.



    இதில் செனகல் அணி பின்னடைவை சந்தித்தது. ஜப்பான் அணி நான்கு மஞ்சள் அட்டை பெற்றிருந்தது. அதேவேளையில் செனகல் 6 மஞ்சள் அட்டை பெற்றிருந்தது. இதனால் வீரர்களின் நன்னடத்தையில் யார் சிறந்தவர்கள் என்ற விதியின்படி ஜப்பான் முன்னணி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    இதன்மூலம் நன்னடத்தை விதி மூலம் கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் வெளியேறிய முதல் அணி சாதனைக்கு உள்ளாகி செனகல் அணி சோகத்துடன் வெளியேறியது.
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் போலந்தை 2-1 என வீழ்த்தி செனகல் அணி வெற்றி பெற்றுள்ளது. #WorldCup2018
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு போலந்து மற்றும் செனகல் அணிகள் மோதின.

    போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 37வது நிமிடத்தில் செனகல் அணியின் தியாகோ சியோனெக் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் செனகல் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் எம் பாயே நியாங் ஒரு கோல் அடிக்க, செனகல் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    தொடர்ந்து ஆடிய போலந்து அணி ஆட்டத்தின் இறுதியில் 86 வது நிமிடத்தில் கிரிசோவியக் ஒரு கோல் அடித்தார். அதன்பின் ஆட்டம் முடியும் வரை போலந்து அணி மற்றொரு கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், செனகல் அணி போலந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. #FIFA2018 #WorldCupRussia2018 #WorldCup2018
    ×