search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FIFA World cup 2018"

    உலகின் பிரபல தேடுப்பொறி சேவையாக விளங்கும் கூகுளில் இந்த ஆண்டு மக்கள் அதிகம் தேடியவற்றை தொடர்ந்து பார்ப்போம். #Google



    உலகின் முன்னணி தேடுப்பொறி சேவையை வழங்கி வரும் கூகுள், இந்த ஆண்டிற்கான இயர் இன் சர்ச் (Year in Search) வெளியிட்டுள்ளது. 2018 ஆண்டு துவங்கியதில் இருந்து இதுவரை மக்கள் கூகுளில் அதிகம் தேடிய சம்பவங்கள் மற்றும் தலைப்புக்களை தொகுத்து ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் கூகுள் இயர் இன் சர்ச் என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கூகுள் இயர் இன் சர்ச் பட்டியலில் இடம்பெற்ற தலைப்புக்களின் விளையாட்டுக்களில் பிபா உலக கோப்பை, ஐ.பி.எல்., ஆசிய கோப்பை 2018, குளிர்கால ஒலிம்பிக்ஸ் உள்ளிட்டவை ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றன.

    கூகுளில் குழந்தைகள் அதிகம் தேடியவற்றை பார்க்கும் போது பால் வீர் மற்றும் மோடு பட்லு முன்னிலையிலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரோபோட் 2.0 திரைப்படம் உள்ளிட்டவை இடம்பிடித்து இருக்கின்றன.



    இவற்றை தொடர்ந்து மார்வெல் வெளியிட்ட அவென்ஜர்ஸ்: இன்ஃபினிட்டி வார், பிளாக் பேந்தர் மற்றும் டெட்பூல் 2 உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்கள் கூகுள் தேடலில் ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றன. இசையை பொருத்த வரை நேஹா கக்கரின் தில்பார் தில்பார், அரிஜித் சிங்கின் தெரா ஃபிதூர் உள்ளிட்டவையும் ஆங்கில மொழி தேடலில் லத்தீன் மொழியில் வெளியாகி வைரலான டெஸ்பாசிட்டோ அதிகம் பேர் தேடி இருக்கின்றனர்.

    2018இல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் ப்ரியா பிரகாஷ் வாரியர், பிரியண்கா சோப்ராவின் கணவரான நிக் ஜோனஸ், சப்னா சௌத்ரி, பிரியண்கா சோப்ரா உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். 

    இதைத்தொடர்ந்து ‘How to..’, தேடல்களில் வாட்ஸ்அப் ஸ்டிக்கர், ஆதாருடன் மொபைல் நம்பரை இணைப்பது எப்படி உள்ளிட்டவையும், ‘What is…’, தலைப்பில் சட்டப்பிரிவு 377, சிரியாவில் என்ன நடக்கிறது, கிகி சேலஞ்ச் என்றால் என்ன உள்ளிட்டவற்றை பெரும்பாலானோர் தேடியிருக்கின்றனர். #Google
    ரஷியாவில் நடைபெற்று முடிந்துள்ள உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவை 77 லட்சம் ரசிகர்கள் நேரில் பார்த்து ரசித்துள்ளனர். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ஜூன் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை ரஷியாவில் நடைபெற்றது. இதில் பிரான்ஸ் வெற்றி பெற்ற கோப்பையை கைப்பற்றியது. குரோசியா 2-வது இடம் பிடித்தது.

    ரஷியாவில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் நுழைவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் உலகக்கோப்பை தொடரை காண்பதற்காக ரசிகர்கள் அதிக அளவில் ரஷியா வரவேண்டும் என்பதற்காக அதிபர் புதின் பல்வேறு சலுகைகள் வழங்கினார்.



    இதனால் வெளிநாட்டில் இருந்து ஏராளமான ரசிகர்கள் போட்டியை ரசிப்பதற்காக ரஷியாவில் குவிந்தனர். அதேபோல் உள்ளூர் ரசிகர்களும் அதிக அளவில் நேரில் சென்று போட்டியை ரசித்தார்கள்.



    ஒட்டுமொத்த போட்டிகளையும் 77 லட்சம் ரசிகர்கள் நேரில் பார்த்து ரசித்துள்ளனர். பிரேசிலில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையை பார்த்த ரசிகளின் எண்ணிக்கையை விட 25 லட்சம் அதிகமாகும்.
    ரஷியாவில் பெய்த ஒரே நாள் கனமழையால் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக கட்டப்பட்ட மைதானம் சேதமடைந்தது. #WorldCup2018 #Volgograd
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் கடந்த மாதம் 14-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. உலகக்கோப்பை கால்பந்து தொடருக்காக ரஷியாவில் கோடிக்கணக்காக பணத்தில் பல்வேறு மைதானங்கள் கட்டப்பட்டன.

    அதில் ஒன்று தெற்குப் பகுதியில் அமைந்துள்ள வோல்கோகிராட் மைதானமும் ஒன்று. இந்த மைதானம் சுமார் 1757 கோடி ரூபாயில் கட்டப்பட்டதாகும். இங்கிலாந்து - ஜப்பான் இடையிலான நாக்அவுட் போட்டி உள்பட 8 ஆட்டங்கள் இந்த மைதானத்தில் நடைபெற்றது.

    நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாஸ்கோவில் உள்ள மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றது. போட்டி முடியும் தருவாயில் கனமழை பெய்தது. அப்போது வோல்கோகிராட்டிலும் கனமழை பெய்தது.



    அதுவும் வரலாறு காணாத மழையாக கொட்டி தீர்த்தது. இந்த மைதானம் அருகே ஏரிக்கரை அமைந்துள்ளது. இந்த ஏரியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் மைதானத்தின் வெளிப்புறத்தில் உள்ள கட்டுமானத்தை அரித்துச் சென்றது. இதனால் மைதானத்தின் வெளிப்பபுறத்தில் பல மீட்டர் தொலைவிற்கு பெரிய பள்ளம் விழுந்தது. அதில் சேறு குவிந்துள்ளது.



    பலகோடி ரூபாய் செலவிட்டு கட்டப்பட்ட மைதானம் ஒரு மழைக்கே தாங்காமல் போனது அங்குள்ள மக்களை வேதனையடையச் செய்துள்ளது. ஏற்கனவே உலகக்கோப்பை தொடருக்காக கட்டப்பட்டுள்ள மைதானங்களை ரஷியா எதற்காக பயன்படுத்தப் போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
    உலக கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்று நாடு திரும்பிய பிரான்ஸ் அணி வீரர்களுக்கு அந்த நாட்டு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். #WorldCup2018 #France
    பாரீஸ்:

    ரஷியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

    உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு உலக தலைவர்க்ள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். பிரான்ஸ் அணியின் வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் பல்வேறு இடங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர்.



    இதைத் தொடர்ந்து, பிரான்ஸ் திரும்பிய அந்நாட்டு வீரர்களுக்கு தலைநகர் பாரீசில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரணடு வரவேற்றனர். #WorldCup2018 #FifaWorldCup2018 #FRACRO #CROFRA #FrancevCroatia
    20 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து தொடரில் கோப்பையை கைப்பற்றி அசத்திய பிரன்ஸ் அணிக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். #WorldCup2018 #FRACRO
    ரஷியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு பரிசுத்தொகையாக 255 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

    உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணியின் வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ஏற்கனவே, கடந்த 1998-ம் ஆண்டு பிரான்ஸ் அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்றிருந்தது. இதன்மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இரண்டாவது தடவையாக உலக கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. #WorldCup2018 #FifaWorldCup2018 #FRACRO #CROFRA
    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோசியாவை வீழ்த்தி உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணியின் வெற்றியை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். #WorldCup2018 #FRACRO
    ரஷியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.



    சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு பரிசுத்தொகையாக 255 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இந்த முறை பிரான்ஸ் அணி தான் பங்கேற்ற லீக் போட்டிகளில் எந்த அணியிடமும் தோல்வி அடைந்ததில்லை.

    உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணியின் வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் பல்வேறு இடங்களில் கொண்டாடினர்.

    பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள ஈபிள் டவரில் திரளான ரசிகர்கள் திர்ண்டனர். பிரான்ஸ் அணி வெற்றி பெற்றதை கண்ட ரசிகர்கள் உற்சாக மிகுதியில் ஆரவாரம் செய்தனர்.



    இதேபோல், நேற்று நடைபெற்ற உலக கோப்பை போட்டியை உலகின் பல்வேறு பகுதிகளில் பெரிய திரைகள் அமைத்து ரசிகர்கள் கண்டு களித்தனர். #WorldCup2018 #FifaWorldCup2018
    உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு ஜனாதிபதி ராமநாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். #WorldCup2018 #France #RamnathKovind #PMModi #Trump
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்றைய இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

    இதுதொடர்பாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் கூறுகையில், உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணியினருக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.  

    பிரதமர் நரேந்திர மோடியும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறுகையில், உலக கோப்பையை வென்றதற்காக பிரான்சுக்கு வாழ்த்துக்கள். உலக கோப்பை இறுதிப்போட்டியில் அவர்கள் சிறப்பாக விளையாடினர். இறுதிப் போட்டியில் உற்சாகமாக விளையாடிய குரோசியாவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலகக் கோப்பையில் அவர்களின் செயல்திறன் வரலாற்று சாதனை என பதிவிட்டுள்ளார்.



    இதேபோல், அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பும் உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். #WorldCup2018 #France #RamnathKovind #PMModi #Trump
    குரோசியா கேப்டன் லூகா மோட்ரிச் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் தங்க பந்து விருதை வென்றார். #WorldCup2018 #LucaModric #GoldenBall
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்றைய இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

    இதையடுத்து, உலக கோப்பை போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

    குரோசியா அணி கேப்டன் லூகா மோட்ரிச்சுக்கு தங்க பந்து விருது வழங்கப்பட்டது. இதேபோல், உலக கோப்பையில் 6 போட்டிகளில் 6 கோல்கள் அடித்த தங்க காலணி விருது இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேனுக்கு வழங்கப்பட்டது.

    மேலும், சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கையுறை விருது பெல்ஜியம் அணியின் கோல் கீப்பர் தியாபட் கோர்டாய்க்கு வழங்கப்பட்டது. 

    இந்த உலக கோப்பையின் இளம் வீரருக்கான விருதை பிரான்ஸ் அணியின் எம்பாப்வே பெற்றார். #WorldCup2018 #FifaWorldCup2018
    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் குரோசியாவை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு 255 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. #WorldCup2018 #FRACRO
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்றைய இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

    சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு பரிசுத்தொகையாக 255 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இரண்டாவது இடம் பிடித்துள்ள குரோசியா அணிக்கு 188 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது.

    இந்த முறை பிரான்ஸ் அணி தான் பங்கேற்ற லீக் போட்டிகளில் எந்த அணியிடமும் தோல்வி அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    #WorldCup2018 #FifaWorldCup2018 #FRACRO #CROFRA #FrancevCroatia
    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் குரோசியாவை வீழ்த்தியதன் மூலம் தோல்வியையே சந்திக்காமல் கோப்பை வென்ற அணி என்ற பெருமையை பெற்றுள்ளது பிரான்ஸ் அணி. #WorldCup2018 #FRACRO
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் இன்றுடன் நிறைவடைகிறது. லீக், நாக் அவுட் சுற்றுகள், காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் முடிந்து இறுதி ஆட்டம் நடந்தது.

    இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கிய இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்த முறை பிரான்ஸ் அணி தான் பங்கேற்ற லீக் போட்டிகளில் எந்த அணியிடமும் தோல்வி அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், தான் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. #WorldCup2018 #FifaWorldCup2018 #FRACRO #CROFRA #FrancevCroatia
    இறுதிப் போட்டிக்கு நுழைந்த சந்தோசத்தில் குரோசிய பெண் அதிபர் வீரர்களுடன் சேர்ந்து ஆட்டம்போட்டு சந்தோசத்தை வெளிப்படுத்தியுள்ளார். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து - குரோசியா அணிகள் பலப்ரீட்சை நடத்தின. இதில் 2-1 என குரோசியா இங்கிலாந்தை வீழ்த்தி பிபா கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றியை குரோசியா வீரர்கள் மட்டுமல்ல, குரோசியா நாடே கொண்டாடி வருகிறது.

    குரோசியா நாக்அவுட் போட்டிகளை காண அந்நாட்டு பெண் அதிபரான கொலிண்டா கிராபர்-கிட்டாரோவிச் ரஷியா வந்துள்ளார். அவர் மைதானத்தில் அமர்ந்து போட்டியை நேராக கண்டுகளிப்பதுடன் வீரர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறார். காலிறுதியில் ரஷியாவை பெனால்டி ஷூட்அவுட் முறையில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியபோது, வீரர்கள் மற்றம் பயிற்சியாளர்களை நேரில் சென்று பாராட்டினார்.

    நேற்று நடைபெற்ற போட்டியில் குரோசியா வெற்றி பெற்றதும், வீரர்களை அறைக்குச் சென்று அவர்களுடன் சந்தோச மிகுதியில் ஆட்டம்போட்டார். நாட்டின் பெண் அதிபர் ஒருவர் வீரர்களுடன் ஆட்டம் போட்ட  வீடியோ வைரலாகி வருகிறது.
    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 2- 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரோஷியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. #WorldCup2018 #ENGCRO
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

    இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - குரோஷியா அணிகள் மோதின.

    ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் கிரன் டிரிப்பர் அபாரமாக ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால், முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகித்தது.



    இதையடுத்து, இரண்டாவது பாதியில் குரோஷியா அணி வீரர்கள் கடுமையாக போராடினர் இதற்கு பலன் அளிக்கும் விதமாக 68-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் பெர்சிக் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமனிலை அடைந்தன. அதன்பின்னர் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இரண்டாவது பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. இதையடுத்து, முதல் கூடுதல் நேரத்திலும் எண்ட அணியும் கோல் அடிக்கவில்லை.

    இரண்டாவதாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் குரோஷியா வீரர் மாரியோ மாண்ட்சிக் 109வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    இதைத்தொடர்ந்து, குரோஷியா அணி அபாரமாக விளையாடி இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியதுடன் இறுதி போட்டியிலும் நுழைந்தது.

    உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் குரோஷியா முதல் முறையாக நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #WorldCup2018 #FifaWorldCup2018 #ENGCRO #CROENG #EnglandvCroatia
    ×