search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக கோப்பை கால்பந்து - இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது குரோஷியா
    X

    உலக கோப்பை கால்பந்து - இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது குரோஷியா

    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 2- 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரோஷியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. #WorldCup2018 #ENGCRO
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

    இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - குரோஷியா அணிகள் மோதின.

    ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் கிரன் டிரிப்பர் அபாரமாக ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால், முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகித்தது.



    இதையடுத்து, இரண்டாவது பாதியில் குரோஷியா அணி வீரர்கள் கடுமையாக போராடினர் இதற்கு பலன் அளிக்கும் விதமாக 68-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் பெர்சிக் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமனிலை அடைந்தன. அதன்பின்னர் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இரண்டாவது பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. இதையடுத்து, முதல் கூடுதல் நேரத்திலும் எண்ட அணியும் கோல் அடிக்கவில்லை.

    இரண்டாவதாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் குரோஷியா வீரர் மாரியோ மாண்ட்சிக் 109வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    இதைத்தொடர்ந்து, குரோஷியா அணி அபாரமாக விளையாடி இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியதுடன் இறுதி போட்டியிலும் நுழைந்தது.

    உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் குரோஷியா முதல் முறையாக நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #WorldCup2018 #FifaWorldCup2018 #ENGCRO #CROENG #EnglandvCroatia
    Next Story
    ×