search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tunisia"

    • கப்பலில் மொத்தம் 57 பேர் பயணம் செய்துள்ளனர்.
    • ஆண்டு கிட்டத்தட்ட 90,000 புலம்பெயர்ந்தோர் இத்தாலிக்கு வந்துள்ளனர்.

    துனிசியா மற்றும் மேற்கு சஹாரா கடற்கரையில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் அகதிகள் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

    வட ஆபிரிக்கக் கடற்கரையின் பெரும்பகுதி புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான பிரதான நுழைவாயிலாக மாறியுள்ளது. ஆப்பிரிக்கா கண்டத்தின் பிற பகுதிகளில் இருந்து, சிறந்த வாழ்க்கையின் நம்பிக்கையில் படகுகளில் ஆபத்தான முறையில் பயணங்கள் செய்கின்றனர்.

    இந்த கப்பலில் மொத்தம் 57 பேர் பயணம் செய்துள்ளனர். இதில், 16 பேர் உயிரிழந்த நிலையில் 44 பேரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு பேர் மீட்கப்பட்டனர். இதில் அனைவரும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

    ஐநா அகதிகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த ஆண்டு கிட்டத்தட்ட 90,000 புலம்பெயர்ந்தோர் இத்தாலிக்கு வந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் துனிசியா அல்லது அண்டை நாடான லிபியாவிலிருந்து வந்தவர்கள் என்று தெரிவித்துள்ளது.

    துனிசியா நாட்டில் அமலில் உள்ள அவசரநிலை சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு செய்து அதிபர் பேஜி சைட் எஸ்ஸெப்ஸி இன்று உத்தரவிட்டுள்ளார். #Tunisiaextendsemergency #emergencyinTunisia
    டுனிஸ்:

    துனிசியா நாட்டில் இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்கும் நோக்கத்தில் சில குழுவினர் ஆயுதமேந்திய பயங்கரவாதிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

    வெளிநாட்டினர் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் போலீசார், அரசு அதிகாரிகளை குறிவைத்து இவர்கள் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துகின்றனர்.
     
    கடந்த 2015-ஆண்டு மார்ச் மாதத்தில் தலைநகர் டுனிஸ் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் இந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு 3 மாதங்களுக்கு பின்னர் சோசீ என்னும் இடத்தில் உள்ள கடற்கரை சொகுசு விடுதிமீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 வெளிநாட்டினர் உள்பட 38 பேர் பலியாகினர்.

    அதே ஆண்டின் நவம்பர் மாதத்தில் அதிபரின் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதல்களையடுத்து அந்நாட்டில் முதன்முறையாக 2015-ம் ஆண்டில்  ‘எமர்ஜென்சி’ எனப்படும் அவசரநிலை சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது. அதைதொடர்ந்து, உள்நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிகரிக்கும் வேளைகளில் அடுத்தடுத்து அவசரநிலை சட்டம் பிரகடனம் செய்யப்படுகிறது.



    அவ்வகையில், கடந்த 6-1-2019 அன்று ஒருமாத காலத்துக்கு அவசரநிலை சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது. அந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைவதால் அவசரநிலை சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீட்டித்து துனிசியா அதிபர் பேஜி சைட் எஸ்ஸெப்ஸி இன்று உத்தரவிட்டுள்ளார். #Tunisiaextendsemergency #emergencyinTunisia  
    ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் பனாமா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் துனிசியா அணி வீழ்த்தியது. #FIFAWorldCup2018 #FIFA2018 #PANTUN

    மாஸ்கோ:

    32 நாடுகள் கலந்துகொண்டுள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றன. ‘எச்’ பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில் பனாமா, துனிசியா அணிகள் பலப்பரீட்சை செய்தன. இரு அணிகளும் முதல் இரண்டு லீக் போட்டிகளில் தோல்வியடைந்து ஏற்கனவே தொடரைவிட்டு வெளியேறிவிட்டன.

    இப்போட்டி தொடங்கியது முதல் இரு அணியும் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். முதல் பாதிநேர ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் துனிசியா அணியின் யாசின் மெரையா, தவறுதலாக எதிர் அணிக்கு ஒரு கோல் அடித்து கொடுத்தார். இதனால் பனாமா அணி 1-0 என முன்னிலை பெற்றது.  



    அதன்பின் துனிசியா அணியினர் முதல் பாதிநேர ஆட்டத்தில் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதிநேர ஆட்டம் பனாமா அணிக்கு சாதகமாக அமைந்தது.

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் துனிசியா வீரர் பென் யூசப் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. 



    அதன்பின் 66-வது நிமிடத்தில் துனிசியா வீரர் வஹ்பி காஸ்ரி கோல் அடித்தார். இதனால் துனிசியா அணி 2-1 என முன்னிலை பெற்றது.



    அதன்பின் இறுதிவரை இரு அணியும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த போட்டியில் துனிசியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் உலகக்கோப்பை போட்டிகளில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் களமிறங்கிய துனிசியா அணி துனிசியா அணி, எச் பிரிவு புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது. #FIFAWorldCup2018 #FIFA2018 #PANTUN
    ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பெல்ஜியம் அணி 5-2 என்ற கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தியது. #FIFA2018 #WorldCup2018 #BELTUN

    மாஸ்கோ:

    உலக கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று மூன்று லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    முதல் லீக் ஆட்டத்தில் ஜீ பிரிவில் இடம்பிடித்துள்ள பெல்ஜியம் - துனிசியா அணிகள் மோதின. பெல்ஜியம் அணிக்கு போட்டி தொடங்கிய ஆறாவது நிமிடமே ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் அந்த அணியின் கேப்டன் ஈடன் ஹசார்ட் கோல் அடித்தார். அதன்பின் 16-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் ரொமெலோ லகாகு கோல் அடித்தார். இதனால் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலை பெற்றது.


     பெனால்டி வாய்ப்பில் கோலடித்த ஈடன் ஹசார்ட்

    அதைத்தொடர்ந்து 18-வது நிமிடத்தில் துனிசியா வீரர் டைலன் புரோன் கோல் அடித்தார். இருப்பினும் பெல்ஜியம் அணி 2-1 என முன்னிலை வகித்தது.



    முதல் பாதிநேர ஆட்டத்தில் கூடுதலாக வழங்கப்பட்ட காயத்திற்கான நேரத்தில் பெல்ஜியம் விரர் ரொமெலோ லகாகு மீண்டும் கோல் அடித்தார். துனிசியா வீரர்கள் முதல் பாதிநேர ஆட்டத்தில் மேற்கொண்டு கோல் அடிக்காததால், இடைவேளையின் போது பெல்ஜியம் 3-1 என முன்னிலை வகித்தது.

    தொடர்ந்து இரண்டாவது பாதிநேர ஆட்டம் நடைபெற்றது. இரண்டாவது பாதிநேர ஆட்டத்திலும் பெல்ஜியம் வீரர்களே ஆதிக்கம் செலுத்தினர். 51-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் கேப்டன் ஈடன் ஹசார்ட் தனது இரண்டாவது கோலை அடித்தார். இதனால் பெல்ஜியம் அணி 4-1 என முன்னிலை பெற்றது.


    ஈடன் ஹசார்ட் மற்றும் ரொமெலோ லகாகு

    அதன்பின் துனிசியா அணியினர் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. 90-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் மிக்கி பட்ஷுவாயி கோல் அடித்தார். இது பெல்ஜியம் அணிக்கு மேலும் முன்னிலை கொடுத்தது.


    பெல்ஜியம் வீரர் மிக்கி பட்ஷுவாயி அடித்த கோல்

    இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் கூடுதலாக வழங்கப்பட்ட காயத்திற்கான நேரத்தில் துனிசியா வீரர் வாபி காஸ்ரி கோல் அடித்தார். அதன்பின் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இறுதியில் பெல்ஜியம் அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    அடுத்ததாக நடைபெறும் லீக் போட்டிகளில் கொரியா குடியரசு - மெக்சிகோ, ஜெர்மனி - ஸ்வீடன் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #BELTUN 
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்றைய மூன்றாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தியது. #WorldCup2018 #FIFA2018 #TUNENG

    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஸ்வீடன் அணி, தென்கொரியாவையும், இரண்டாவது ஆட்டத்தில் பெல்ஜியம் அணி, பனாமாவையும் வீழ்த்தியது. இதையடுத்து நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - துனிசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

    இப்போட்டி தொடங்கியது முதலே இங்கிலாந்து வீரர்கள் அடுத்துடுத்து கோல் போட முயற்சித்தனர். முதல் ஐந்து நிமிடத்திற்குள் இரண்டு கோல் போடும் வாய்ப்புகளை இங்கிலாந்து அணி தவறவிட்டது. முதல் பாதிநேர ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.



    இதையடுத்து துனிசியா வீரர்களும் கோல் அடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். 35-வது நிமிடத்தில் துனிசியா அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் துனிசியா அணியின் பெர்சானி சஸ்சி கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமனானது. முதல் பாதிநேர ஆட்டம் முசிடில் போட்டி, 1-1 என சமனில் இருந்தது. 



    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் இரண்டாவது கோல் அடித்தார். அதன்பின் துனிசியா அணியினர் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 2-1 என வெற்றி பெற்றது.



    இன்று நடைபெற உள்ள லீக் போட்டிகளில் கொலம்பியா - ஜப்பான், போலாந்து - செனகல், ரஷியா - எகிப்து அணிகள் பலப்பரீட்சை சென்கின்றன. #WorldCup2018 #FIFA2018 #TUNENG
    ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த சுமார் 180 குடியேறிகள் சென்ற படகு துனிசியா கடற்பகுதியில் கவிழ்ந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்தள்ளது. #47migrantsdead #Tunisiaboatsink #Tunisiancoast

    டுனிஸ்:

    உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். 

    மத்திய தரைக்கடல் வழியாக அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 25 லட்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர்.

    உள்நாட்டில் பசி, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் இன்றும் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக படையெடுத்தவாறு உள்ளனர். லிபியா நாட்டின் கடற்பகுதி வழியாக சென்றால் கண்காணிப்பு அதிகமாக உள்ளதால் துனிசியா கடற்பகுதி வழியாக இவர்கள் பெரும்பாலும் இத்தாலியை நோக்கிச் செல்கின்றனர்



    அந்தவகையில், ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த சுமார் 180 அகதிகள் சென்ற படகு துனிசியா கடற்பகுதியில் நேற்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 35 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் நேற்று வெளியாகின. இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட மீட்புப்பணிகளில் மேற்கொண்டு 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 67 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடலில் மூழ்கி காணாமல்போன பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. #47migrantsdead #Tunisiaboatsink #Tunisiancoast
    ×