search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Belgium"

    • முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.
    • இதே மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    லண்டன்:

    9 அணிகள் இடையிலான 4-வது புரோ ஹாக்கி லீக் போட்டி தொடர் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஐரோப்பிய சுற்று ஆட்டம் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று தொடங்கியது.

    இந்த சுற்றில் முதலாவது ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அணியான பெல்ஜியம், தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்தியாவை எதிர்கொண்டது. இரு அணிகளும் தொடக்கம் முதலே தாக்குதல் பாணியை தொடுத்தன. 17-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி அந்த அணி வீரர் திபாயு ஸ்டாக்புரோக்ஸ் பந்தை கோல் வலைக்குள் திணித்தார்.

    21-வது நிமிடத்தில் இந்திய அணி பதிலடி கொடுத்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி மன்தீப் சிங் கோல் திருப்பினார். இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.

    இதைத்தொடர்ந்து பெல்ஜியம் அணியினர் அடிக்கடி இந்திய அணியின் கோல் எல்லையை நோக்கி படையெடுத்து கடும் குடைச்சல் கொடுத்தனர். இதன் பலனாக அந்த அணிக்கு பல பெனால்டி கார்னர் வாய்ப்பு கிட்டியது. இதனை கோலாக்க அவர்கள் எடுத்த முயற்சியை இந்திய அணியின் பின்கள வீரர்கள் மற்றும் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் அபாரமாக தடுத்து முறியடித்தனர்.

    கடைசி 2 நிமிடம் இருக்கையில் பெல்ஜியம் அணியின் எல்லா வீரர்களும் இந்திய அணியின் கோல் எல்லைப்பகுதியை சுற்றி வளைத்து நெருக்கினர். அந்த சமயத்தில் பெல்ஜியம் வீரர் அடித்த பந்தை இந்திய வீரர் ஜர்மன்பிரீத் சிங் மட்டையின் பின்பகுதியை வைத்து தடுத்ததாக நடுவரிடம் அப்பீல் செய்தனர். இதனை ஆய்வு செய்த நடுவர் பெல்ஜியம் அணிக்கு பெனால்டி கார்னர் (59-வது நிமிடம்) வாய்ப்பை வழங்கினார். இதனை கச்சிதமாக பயன்படுத்தி அந்த அணியின் நெல்சன் ஒனானா கோலடித்தார். அதுவே வெற்றியை தீர்மானிக்கும் கோலாக அமைந்தது.

    முடிவில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் வீழ்ந்தது. 9-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். 5-வது ஆட்டத்தில் ஆடிய பெல்ஜியம் அணிக்கு இது 3-வது வெற்றியாகும். இதே மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    உலககோப்பை ஹாக்கியில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெனால்டி ஷுட் முறையில் நெதர்லாந்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெல்ஜியம் அணி. #HockeyWorldCup2018 #Netherlands #Belgium
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக், காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் முடிந்துள்ளன.

    இன்று நடைபெற்ற மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதின. இதில் 8 - 1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதுடன் வெண்கலம் வென்றது. 
    இந்நிலையில், உலககோப்பையை வெல்லப் போகும் அணிக்கான போட்டியில் நெதர்லாந்தும், பெல்ஜியமும் மோதின.



    இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதின. இதனால் முதல் பாதி மட்டுமின்றி ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    இதையடுத்து, இந்த தொடரில் இரண்டாவது முறையாக பெனால்டி ஷுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் பெல்ஜியம் அணி என்ற 3 - 2 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி உலககோப்பையை வென்றது.

    உலககோப்பை இறுதிப்போட்டியை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்குடன் சேர்ந்து அமர்ந்து கண்டுகளித்தார். #HockeyWorldCup2018 #Netherlands #Belgium
    ஒடிசாவில் நடைபெற்று வரும் உலககோப்பை ஹாக்கி போட்டிக்கான ஏற்பாடுகளை திறம்பட செய்த முதல் மந்திரி நவீன் பட்நாயக்குக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். #HockeyWorldCup2018 #SachinTendulkar
    புதுடெல்லி:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின.

    இதில் முதலில் நடந்த அரையிறுதியில் இங்கிலாந்தை 6- 0 என்ற கோல் கணக்கில் வென்ற பெல்ஜியம் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.



    இந்நிலையில், உலககோப்பை ஹாக்கி போட்டிக்கான ஏற்பாடுகளை திறம்பட செய்த ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்குக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உலக அளவில் தரமாக செய்துள்ளதற்கு பாராட்டுக்கள். கலிங்கா மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியை நேரில் காண பார்வையாளனாக வரவுள்ளேன். எனது ஆதரவு என்றும் உண்டு என பதிவிட்டுள்ளார். #HockeyWorldCup2018 #SachinTendulkar
    உலககோப்பை ஹாக்கியில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை 6-0 என்ற கணக்கில் தோற்கடித்த பெல்ஜியம் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #HockeyWorldCup2018 #Belgium #England
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின.

    இன்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பெல்ஜியம் வீரர் டாம் பூன் 8-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து 19வது நிமிடத்திலும் பெல்ஜியம் வீரர் சைமன் கோக்னார்டு ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் பெல்ஜியம் அணி 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.



    ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் பெல்ஜியம் வீரர்கள் அதிரடியாக ஆடினர். 37வது நிமிடத்தில் செட்ரிக் சார்ப்லியர் ஒரு கோல் அடித்தார். அவரை தொடர்ந்து, ஆட்டத்தின் 45 மற்றும் 50வது நிமிடத்தில் அலெக்சாண்டர் ஹென்ரிக்ஸ் தலா ஒரு கோல் அடித்தார். 53வது நிமிடத்தில் செபாஸ்டியன் டாகியர் ஒரு கோல் அடித்தார்.

    பெல்ஜியம் வீரர்களின் அதிரடி ஆட்டத்துக்கு இங்கிலாந்து வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. இங்கிலாந்து அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

    இறுதியில், பெல்ஜியம் அணி இங்கிலாந்தை 6 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் பெல்ஜியம் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.  #HockeyWorldCup2018 #Belgium #England
    ஒடிசாவில் நடந்துவரும் உலககோப்பை ஹாக்கி போட்டியில் இன்று அரையிறுதியில் மோதும் அணிகள் வெற்றி பெற சுதர்சன் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்தியுள்ளார். #HockeyWorldCup2018 #Belgium #England #Australia #Netherlands #SandArtistSudarsan
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின.

    இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகளும், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளும் மோதுகின்றன.

    இந்நிலையில், ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசா கடற்கரையில் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மணல் சிற்பம் வரைந்துள்ளார்.

    அந்த சிற்பத்தில் உலக கோப்பை போட்டிகளில் மோதவுள்ள அணிகளுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்த அவர் 4 நாடுகளின் கொடிகளை வரைந்து வாழ்த்தியுள்ளார்.  #HockeyWorldCup2018 #Belgium #England #Australia #Netherlands #SandArtistSudarsan
    ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் பெல்ஜியம் அணியிடம் 5 - 0 என்ற கோல் கணக்கில் தோற்று போட்டியில் இருந்து வெளியேறியது பாகிஸ்தான். #HockeyWorldCup2018 #Pakistan #Belgium
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பெல்ஜியம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பெக்ஜியம் வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் அலெக்சாண்டர் ஹென்ரிக்ஸ் முதல் கோல் அடித்தார். அவரை தொடர்ந்து, தாமஸ் பிரெய்ல்ஸ் 13வது நிமிடத்திலும், செட்ரிக் சார்லியர் 27வது நிமிடத்திலும், செபாஸ்டியன் டாக்கியர் 35வது நிமிடத்திலும், டாம் பூன் 53வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.

    பெல்ஜியம் வீரர்களின் ஆட்டத்துக்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர்களால் போராட முடியவில்லை.

    இறுதியில், பெல்ஜியம் அணி பாகிஸ்தானை 5 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பெல்ஜியம் அணி காலிறுதிக்குள் நுழைந்தது. பெல்ஜியம் வீரர் சைமன் குக்னார்டு ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #HockeyWorldCup2018 #Pakistan #Belgium
    ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான போட்டி 2 - 2 என சமனில் முடிந்தது. #HockeyWorldCup2018 #India #Belgium
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, பெல்ஜியம் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் 8-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் அலெக்சாண்டர் ஹென்ரிக்ஸ் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடியும் வரை இரு அணிகளும் கோல் போடாததால் பெல்ஜியம் 1-0 என முன்னிலை பெற்றது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இந்தியாவின் ஹர்மன்பிரித் சிங் 39வது நிமிடத்திலும், சிம்ரன் ஜித் சிங் 47வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்தனர். இதனால் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.

    ஆனால், 58-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் சைமன் குக்னார்ட் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமனானது.

    இறுதியில், இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2 - 2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. #HockeyWorldCup2018 #India #Belgium
    உலக கோப்பை ஹாக்கிப் போட்டியில் நாளை நடக்கவுள்ள ஆட்டத்தில் பெல்ஜியத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது. #WorldCupHockey2018 #India #Belgium
    புவனேஷ்வர்:

    உலக கோப்பை ஹாக்கிப் போட்டி ஒடிசா தலைநகர் புவனேஷ்வரத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் போட்டியில் விளையாடும் மன்பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பெல்ஜியம், கனடா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அந்த பிரிவில் உள்ளன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை நாளை (2-ந்தேதி) எதிர்கொள்கிறது.

    இந்திய அணி பெல்ஜியத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியதால் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. பெல்ஜியம் அணி தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி இருந்தது. இந்திய அணி மோதும் ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. மற்றொரு ஆட்டத்தில் இதே பிரிவில் உள்ள தென்ஆப்பிரிக்கா- கனடா அணிகள் மோதுகின்றன.

    நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை (‘பி’ பிரிவு) வீழ்த்தியது. இங்கிலாந்து- சீனா அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

    இன்று நடைபெறும் ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் உள்ள நெதர்லாந்து-மலேசியா (மாலை 5 மணி), ஜெர்மனி- பாகிஸ்தான் (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன. #WorldCupHockey2018 #India #Belgium
    12-வது ஆசிய ஐரோப்பிய நாடுகளுக்கான மாநாட்டில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பெல்ஜியம் சென்றடைந்தார். #VenkaiahNaidu #ASEM2018
    பிரஸ்ஸல்ஸ்:

    12-வது ஆசிய ஐரோப்பிய நாடுகளுக்கான மாநாடு பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு இன்று தொடங்குகிறது. வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, சுற்றுலா ஆகிய துறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒத்துழைப்பு நல்க ஆசிய ஐரோப்பிய நாடுகளுக்கு இது மிகவும் முக்கியமான கூட்டமாக அமைந்துள்ளது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியா சார்பில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று டில்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சை சென்றடைந்த அவருக்கு அந்நாட்டு தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

    பெல்ஜியம் சென்றுள்ள வெங்கையா நாயுடு, அந்நாட்டு அரசர் பிலிப், பிரதமர் சார்லஸ் மைக்கேல் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.

    மேலும்,, அந்நாட்டில் உள்ள ஜெயின் கலாச்சார மையத்தில் பெல்ஜியம்வாழ் இந்திய மக்களிடம் உரையாற்ற உள்ளார். அதன் பின்னர், பிரஸ்ஸல்ஸின் ஆண்ட்வர்ப் பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #VenkaiahNaidu #ASEM2018
    தொழில்நுட்ப கோளாறு காரணமாக தனது வான் போக்குவரத்து எல்லையை பெல்ஜியம் மூடியதால், பல விமானங்கள் வேறு பாதைக்கு திரும்பி விடப்பட்டுள்ளன. #Belgium
    பிரசெல்ஸ்:

    ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் விமான போக்குவரத்து சர்வரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரனமாக வழக்கமான பணிகள் முடங்கின. விமானம் வருகை, புறப்பாடு குறித்த தகவல்களை பார்க்க முடியாத காரணத்தால் தனது வான் போக்குவரத்து எல்லையை தற்காலிகமாக மூடுவதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது.

    இதனால், விமானங்கள் புறப்படமுடியாமல் மற்றும் தரையிறங்க முடியாத நிலை உள்ளது. மேலும், பெல்ஜியத்தின் வான் எல்லையை பயன்படுத்தும் விமானங்களும் வேறு பாதைக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 
    உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் பெல்ஜியம்-இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
    செயின்ட் பீட்டர்ஸ்பர்க்:

    21-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இந்த கால்பந்து திருவிழாவில் இன்னும் 2 ஆட்டங்களே எஞ்சியுள்ளன. நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் அணி, குரோஷியாவை எதிர்கொள்கிறது. முன்னதாக வெண்கலப்பதக்கம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் பெல்ஜியம்- இங்கிலாந்து அணிகள் இன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் மோதுகின்றன.

    லீக் சுற்றில் அதிக கோல்கள் அடித்த அணியான பெல்ஜியம், இந்த தொடரில் பிரமிக்கத்தக்க வகையில் விளையாடியது. கால்இறுதியில் முன்னாள் சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆனால் பெல்ஜியத்துக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போய் விட்டது. அரைஇறுதியில் பிரான்சிடம் ஒரு கோல் வாங்கி தோல்வியை தழுவியது.

    1986-ம் ஆண்டில் 4-வது இடம் பிடித்ததே உலக கோப்பையில் பெல்ஜியத்தின் சிறந்த நிலையாகும். இந்த முறை மேலும் ஒரு படி முன்னேறும் வேட்கையில் இருக்கிறார்கள். எடன் ஹசார்ட், ரோம்லு லுகாகு, பெல்லானி, கெவின் டி புருன் உள்ளிட்டோர் பெல்ஜியம் அணியில் நல்ல பார்மில் உள்ளனர்.

    இளம் வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி அரைஇறுதியில் 1-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவிடம் தோற்று இறுதிசுற்று வாய்ப்பை கோட்டை விட்டது. 1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து அணி அதன்பிறகு உயரிய நிலையுடன் தாயகம் திரும்புவதில் ஆர்வம் காட்டும்.

    இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேன் இதுவரை 6 கோல்கள் அடித்து தங்க ஷூ வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருக்கிறார். இந்த ஆட்டத்திலும் ஒன்றிரண்டு கோல்கள் போட்டால் அந்த விருது அவருக்கு உறுதியாகி விடும். ஏற்கனவே லீக் சுற்றில் இங்கிலாந்து அணி 0-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோற்று இருந்தது. அந்த தோல்விக்கு பழிதீர்க்க இங்கிலாந்து வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.

    3-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.161 கோடியும், 4-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.148 கோடியும் பரிசுத்தொகையாக கிடைக்கும்.

    இங்கிலாந்து பயிற்சியாளர் காரெத் சவுத்கேட் கூறுகையில், ‘அரைஇறுதியில் ஏற்பட்ட தோல்வியால் எங்களது வீரர்களுக்கு கடந்த சில நாட்கள் மனரீதியாக மிகவும் கடினமாக இருந்தது. ஒரு வழியாக வீரர்கள் நேற்று மீண்டும் பயிற்சியை தொடங்கினர். இந்த உலக கோப்பையில் பெல்ஜியத்தின் பயணம் பிரமாதமாக இருந்தது. வெற்றியுடன் இந்த தொடரை முடிக்க அவர்கள் விரும்புவார்கள். நாங்களும் அப்படி தான். இந்த உலக கோப்பையில் நாங்கள் முன்னணி அணிகளை வீழ்த்தவில்லை. அதனால் இந்த வாய்ப்பை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார்.

    இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி டென்2, சோனி இ.எஸ்.பி.என். சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. #FIFA2018 #England #Belgium
    உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நாளை நடக்கவுள்ள 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியம்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றனர். #FIFA2018 #fifa2018 #England #Belgium
    செயின்ட் பீட்டர்ஸ்பர்க்:

    21-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்த கால்பந்து திருவிழா முடிய இன்னும் 2 ஆட்டங்களே எஞ்சியுள்ளன.

    இறுதிப்போட்டி வருகிற 15-ந்தேதி நடக்கிறது. இதில் 1998-ம் சாம்பியனான பிரான்ஸ்- குரோஷியா அணிகள் மோதுகின்றன.

    அதற்கு முன்னதாக 3-வது இடத்துக்கான ஆட்டம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி நாளை (14-ந்தேதி) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    இதில் பெல்ஜியம்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. எந்த அணி 3-வது இடத்தை வெல்லபோகிறது? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெல்ஜியம்- இங்கிலாந்து அணிகள் இந்த உலகக்கோப்பையில் மோதுவது இது 2-வது முறையாகும். ‘லீக்’ ஆட்டத்தில் பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று இருந்தது. 16 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே அணிகள் 2-வது முறையாக மோதுகின்றன. 2002-ல் பிரேசில்- துருக்கி அணிகள் 2 தடவை மோதின.

    இந்தப்போட்டி தொடரில் சிறப்பாக விளையாடிய பெல்ஜியம் அதிர்ஷ்டம் இல்லாமல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. அரை இறுதியில் 0-1 என்ற கணக்கில் பிரான்சிடம் தோற்றது.

    பெல்ஜியம் அணி 1986-ல் 4-வது இடத்தை பிடித்தே சிறந்த நிலையாக இருக்கிறது. தற்போது அதில் இருந்து முன்னேற்றம் காண இங்கிலாந்தை வீழ்த்தி 3-வது இடத்தை பிடிக்கும் ஆர்வத்துடன் உள்ளது.

    பெல்ஜியம் அணியில் ஈடன் ஹசாட், லுகாகு, டுபுரு யன், பெலானி போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

    1966-ம் ஆண்டு சாம்பியான அந்த அணி இதற்கு முன்பு 1990-ல் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இத்தாலியிடம் தோற்று இருந்தது. தற்போது அதே மாதிரி நடந்துவிடாமல் இருக்க வெற்றி பெற போராடும். இங்கிலாந்து அணியில் ஹாரிகேன், லிங்கார்டு, ஸ்டெர்லிங் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகளும் 21 முறை மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 15-ல், பெல்ஜியம் 1-ல் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டம் ‘டிரா’ ஆனது.

    இங்கிலாந்து அணி அரை இறுதியில் குரோஷியாவிடம் தோற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது. #FIFA2018 #fifa2018 #England #Belgium
    ×