என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Foreign Students"

    • அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
    • அமெரிக்காவில் பல மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டன.

    அமெரிக்க அதிபர் டிரம்ப், குடியேற்றம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இதில் அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கடும் விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டன.

    டிரம்ப் அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் 2025-26ம் கல்வி ஆண்டில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் புதிய சர்வதேச மாணவர்களின் சேர்க்கை சரிவை சந்தித்துள்ளது.

    சர்வதேசக் கல்வி நிறுவனத்தின் (Institute of International Education) அறிக்கைப்படி, 2025-26ம் கல்வி ஆண்டில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் புதிய சர்வதேச மாணவர்களின் சேர்க்கை 17% சரிந்துள்ளது.

    2023-24 உடன் ஒப்பிடுகையில் இளங்கலையில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 11.3% அதிகரித்துள்ளது. அதே சமயம் முதுகலை பிரிவில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 9.5% சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவுக்கு புதிய விசா நடைமுறை இதற்கு ஒரு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சமீபத்தில் சில வெளிநாட்டு மாணவர்களின் விசாவை அமெரிக்கா ரத்து செய்தது.
    • சர்வதேச மாணவர்களை நிலையான தங்கும் காலங்களுக்கு உட்படுத்தும் வகையில் இந்த விதி உள்ளது.

    அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சமீபத்தில் சில வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாட்டை விதிக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி வெளிநாட்டு மாணவர்களின் விசாவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தகுதி வாய்ந்ததாக மாற்றும் விதியை உள்நாட்டு பாதுகாப்புத்துறை முன்மொழிந்துள்ளது. சர்வதேச மாணவர்களை நிலையான தங்கும் காலங்களுக்கு உட்படுத்தும் வகையில் இந்த விதி உள்ளது.

    தற்போது சர்வதேச மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் தங்கள் முழுநேர மாணவர் அந்தஸ்தை கடைபிடித்தால் அவர்கள் படிப்பு முடியும் வரை அமெரிக்காவில் தங்கலாம். இதை முன்னரே தீர்மானிக்கப்பட்ட தங்கும் காலத்திற்கு மாற்ற டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இதனால் விசாவில் ஒரு நிலையான காலாவதி தேதியுடன் சர்வதேச மாணவர்கள் அடிக்கடி விசா நீட்டிப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டியதிருக்கும். இது கூடுதல் தேவையற்ற தாமதங்கள், நிதிச் சுமை மற்றும் மாணவர்களுக்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • வெளிநாட்டு மாணவர்களை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்தது.
    • ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டில் இருந்து பலர் படித்து வருகின்றனர்.

    அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் அதிபர் டிரம்புக்கு எதிராக செயல்படுவதால் தொடர்ந்து இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறது. 389 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பல்கலைக்கழகம் உலக அளவில் பிரபலமான ஒன்றாக உள்ளது.

    வளாகத்தில் நடக்கும் மாணவர் போராட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று டிரம்ப் பல்கலைக்கழகங்களைக் கோரியிருந்தார். ஆனால் ஹார்வர்டு பல்கலைக்கழகம் அதை ஏற்க மறுத்தது. எனவே அதற்கு சேர வேண்டிய 2.2 பில்லியன் டாலர் மானியங்களையும் 60 மில்லியன் டாலர் ஒப்பந்தங்களையும் டிரம்ப் தடாலடியாக நிறுத்தினார்.

    இந்த சூழலில், வெளிநாட்டு மாணவர்களை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்தது. ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டில் இருந்து ஆண்டுக்கு சுமார் 800 பேர் சேர்ந்து பயின்று வரும் நிலையில், டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கை பல்கலைக்கழகத்திற்கு நெருக்கடியாக அமைந்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து ஹார்வர்டு பல்கலைக்கழகம் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் டிரம்பின் உத்தரவை தாற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்த உத்தரவு ஹார்வர்டில் படிக்கும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களுக்குத் தற்காலிக ஆறுதலை அளித்துள்ளது.

    இந்நிலையில், பெல்ஜியம் நாட்டின் இளவரசியும், வருங்கால ராணியுமான எலிசபெத் (வயது 23) ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவர் முதலாம் ஆண்டு படிப்பை முடித்துள்ளார். தற்போது டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவால் இளவரசி எலிசபெத் தனது படிப்பை தொடருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பெல்ஜிய அரச அரண்மனையின் செய்தித் தொடர்பாளர் லோர் வாண்டூர்ன் கூறும்போது, "இளவரசி எலிசபெத் தனது முதலாம் ஆண்டு படிப்பை முடித்துள்ளார். டிரம்ப் நிர்வாகத்தின் முடிவின் தாக்கம் வரும் நாட்களில் தெளிவாகும். தற்போது நிலைமையை ஆராய்ந்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.

    • சேர வேண்டிய 2.2 பில்லியன் டாலர் மானியங்களையும் 60 மில்லியன் டாலர் ஒப்பந்தங்களையும் டிரம்ப் நிறுத்தினார்.
    • இந்த உத்தரவை எதிர்த்து ஹார்வர்டு பல்கலைக்கழகம் நீதிமன்றத்தை நாடியது.

    அமெரிக்காவில் பிரபாலான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அதிபர் டிரம்ப் உடைய இரும்புக்கரத்துக்கு எதிராக செயல்படுவதால் தொடர்ந்து இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறது. 389 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பல்கலைக்கழகம் உலக அளவில் பிரபலமான ஒன்றாக உள்ளது.

    வளாகத்தில் நடக்கும் மாணவர் போராட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று டிரம்ப் பல்கலைக்கழகங்களைக் கோரியிருந்தார். ஆனால் ஹார்வர்டு பல்கலைக்கழகம் அதை ஏற்க மறுத்தது. எனவே அதற்கு சேர வேண்டிய 2.2 பில்லியன் டாலர் மானியங்களையும் 60 மில்லியன் டாலர் ஒப்பந்தங்களையும் டிரம்ப் தடாலடியாக நிறுத்தினார்.

    இந்த சூழலில், வெளிநாட்டு மாணவர்களை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்தது. பல்கலைக்கழகத்திற்கு எதிராக நடைபெறும் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்தது.

    ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டில் இருந்து ஆண்டுக்கு சுமார் 800 பேர் சேர்ந்து பயின்று வரும் நிலையில், டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கை பல்கலைக்கழகத்திற்கு நெருக்கடியாக அமைந்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து ஹார்வர்டு பல்கலைக்கழகம் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் டிரம்பின் உத்தரவை தாற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்த உத்தரவு ஹார்வர்டில் படிக்கும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களுக்குத் தற்காலிக ஆறுதலை அளித்துள்ளது.  

    • சேர வேண்டிய 2.2 பில்லியன் டாலர் மானியங்களை டிரம்ப் தடாலடியாக நிறுத்தினார்.
    • ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டில் இருந்து ஆண்டுக்கு சுமார் 800 பேர் சேர்ந்து பயில்கின்றனர்.

    அமெரிக்காவில் பிரபாலான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அதிபர் டிரம்ப் உடைய இரும்புக்கரத்துக்கு எதிராக செயல்படுவதால் தொடர்ந்து இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறது.

    அதாவது, வளாகத்தில் நடக்கும் மாணவர் போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று டிரம்ப் பல்கலைக்கழகங்களைக் கோரியிருந்தார். ஆனால் ஹார்வர்டு பல்கலைக்கழகம் அதை ஏற்க மறுத்தது. எனவே அதற்கு சேர வேண்டிய 2.2 பில்லியன் டாலர் மானியங்களையும் 60 மில்லியன் டாலர் ஒப்பந்தங்களையும் டிரம்ப் தடாலடியாக நிறுத்தினார்.

    இந்த சூழலில் தற்போது, வெளிநாட்டு மாணவர்களை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது. பல்கலைக்கழகத்திற்கு எதிராக நடைபெறும் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

    ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டில் இருந்து ஆண்டுக்கு சுமார் 800 பேர் சேர்ந்து பயின்று வரும் நிலையில், டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கை பல்கலைக்கழகத்திற்கு நெருக்கடியாக அமைந்துள்ளது. அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டவர் மீது டிரம்ப் தனது அடாவடி உத்தரவுகள் மூலம் தொடர்ந்து வெறுப்பை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • பல்கலைக்கழகம், கல்லூரிகள் யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ., இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
    • பிரத்யேக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும்.

    திருப்பூர் :

    வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் பல்கலைக்கழகம், கல்லூரிகள் கட்டாயம் உரிய விவரங்களை யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ., இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அகில இந்திய கல்விக்க வுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

    பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இந்தியாவில் உயர்கல்வி பயில்கின்றனர். அவ்வாறு பல்கலைக்கழகம், கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் முழு விவரங்களை சேர்க்கையின் போதே educationindia.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் மாணவர்களும் இணையத ளத்தில் உரிய விவரங்களை உள்ளீடு செய்து பிரத்யேக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும். இது குறித்து கலை, அறிவியல், மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், சட்ட பல்கலைக்கழக கல்லூரிகளில் ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என அகில இந்திய கல்விக்கவுன்சில் அறிவுறுத்தி யுள்ளது.

    • அறையை பயன்படுத்தி வந்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
    • அதிகாரிகள் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரிடம் ஆலோசனை.

    குஜராத் பல்கலைக்கழக தங்கும் விடுதியில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளை சேர்ந்த ஆறு மாணவர்கள் அறையை காலி செய்ய வலியுறுத்தப்பட்டு இருப்பதாக பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தங்குவதற்கான அவகாசம் முடிந்த பிறகும், அறையை பயன்படுத்தி வந்ததால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    முன்னதாக தங்கும் விடுதியில் நமாஸ் செய்த மாணவர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மார்ச் 16 ஆம் தேதி நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆப்கன் மற்றும் காம்பியாவை சேர்ந்த அதிகாரிகள் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரிடம் ஆலோசனை நடத்தினர்.

    "தங்குவதற்கான கால அவகாசம் முடிந்த பிறகும், தங்கும் விடுதியை பயன்படுத்தி வந்த ஆறு ஆப்கன் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க மாணவர்கள் அறையை காலி செய்ய வலியுறுத்தப்பட்டனர். இவர்கள் படிப்பை நிறைவு செய்துவிட்டனர். எனினும், அலுவல் பணிகள் முழுமை பெறாததால் தங்கும் விடுதியை பயன்படுத்தி வந்தனர்," என்று துனை வேந்தர் நீரஜ் குப்தா தெரிவித்தார்.

    "அவர்களுக்கான அலுவல் பணிகள் முழுமை பெற்ற நிலையில், அவர்கள் பாதுகாப்பாக அவர்களது நாட்டிற்கு செல்ல முடியும். முன்னாள் மாணவர்கள் யாரையும் தங்கும் விடுதியில் தங்க வைக்க நாங்கள் விரும்பவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் மாணவர்களிடம் விடுதியை காலி செய்ய அறிவுறுத்தி உள்ளனர்," என்று அவர் மேலும் தெரிவித்தார். 

    • இந்திய அதிகாரிகளைக் கனடா அரசு உளவு பார்த்தாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
    • இந்தியா - கனடா உறவில் விரிசல் விழுந்துள்ளது.

    கனடாவைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு உள்ளதாக கனடா குற்றம்சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இருநாட்டு தலைவர்களும் தூதர்களை வெளியேற்றினர்.

    இதற்கிடையே, கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளைக் குறிவைத்து வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத்தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டதாகக் கனடா வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மாரிசன் குற்றம்சாட்டினார். இதை கண்டித்து மாரிசனுக்கு எதிராக இந்தியா சம்மன் அனுப்பியது.

    மேலும் இந்திய அதிகாரிகளைக் கனடா அரசு உளவு பார்த்தாக மத்திய அரசு நேற்றைய தினம் புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. ஆடியோ மற்றும் வீடியோ மூலம் கனடா அரசால் இந்திய தூதரக அதிகாரிகள் உளவு பார்க்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கனடா, தங்களின் பாதுகாப்பாகவே அவர்கள் கண்காணிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.

    இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து கனடா வரும் மாணவர்கள் விரைவில் விசா பெற உதவும் Direct Stream Program (SDS) என்ற திட்டத்தை திடீரென கனடா அரசு ரத்து செய்துள்ளது.

    இந்தியா, சீனா உட்பட 14 நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கான விசா செயல்முறையை எளிதாக்கும் SDS திட்டம், 2018 ஆண்டு கொண்டு வரப்பட்டது.

    கனடாவில் உள்ள தற்காலிக குடியிருப்பாளர்களின் அளவைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

    SDS திட்டத்தின் மூலம், குறைந்தது 2 வாரங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கிடைக்கும். இதுவே சாதாரண முறையில் விசா பெற வேண்டும் என்றால் குறைந்தது 8 வாரங்கள் வரை ஆகும். இதனால் கனடா சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் இனி நீண்ட நாட்கள் விசாவுக்காக காத்திருக்க நேரிடும்.

    ×