வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை - கல்லூரிகளுக்கு புதிய உத்தரவு

பல்கலைக்கழகம், கல்லூரிகள் யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ., இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் பிரத்யேக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் பல்கலைக்கழகம், கல்லூரிகள் கட்டாயம் உரிய விவரங்களை யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ., இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அகில இந்திய கல்விக்க வுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இந்தியாவில் உயர்கல்வி பயில்கின்றனர். அவ்வாறு பல்கலைக்கழகம், கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் முழு விவரங்களை சேர்க்கையின் போதே educationindia.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் மாணவர்களும் இணையத ளத்தில் உரிய விவரங்களை உள்ளீடு செய்து பிரத்யேக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும். இது குறித்து கலை, அறிவியல், மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், சட்ட பல்கலைக்கழக கல்லூரிகளில் ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என அகில இந்திய கல்விக்கவுன்சில் அறிவுறுத்தி யுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com