என் மலர்
நீங்கள் தேடியது "ஜெர்மனி அணி"
- இந்திய அணி அரை இறுதியில் 7 தடவை உலக கோப்பையை கைப்பற்றிய ஜெர்மனியை எதிர்கொண்டது.
- இந்திய அணி ஜெர்மனியை தோற்கடித்து 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்ப்பு நிலவியது.
14-வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி சென்னை, மதுரையில் நடைபெற்று வருகிறது. கடந்த 28-ந் தொடங்கிய இந்த போட்டியில் நாக் அவுட்டான கால் இறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.
2 முறை சாம்பியனான இந்திய அணி பெல்ஜியத்தை வீழ்த்தி 7-வது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
போட்டியின் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது. இதனால் வெற்றி- தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்- அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 4- 3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய அணி அரை இறுதியில் 7 தடவை உலக கோப்பையை கைப்பற்றிய ஜெர்மனியை எதிர்கொண்டது. சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடமாகியது.
ரோகித் தலைமையிலான இந்திய அணி ஜெர்மனியை தோற்கடித்து 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் 4 சுற்றுகள் முடிவில் 5-1 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி ஜெர்மனி வீழ்த்தியது. இதன் மூலம் ஜெர்மனி அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியை ஜெர்மனி எதிர்கொள்ள உள்ளது. வரும் 10 ஆம் தேதி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
- வெற்றி- தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்- அவுட் கடைபிடிக்கப்பட்டது.
- ஜெர்மனி பலம் வாய்ந்தது என்பதால் அந்த அணியை வீழ்த்துவது சவாலானது.
14-வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி சென்னை, மதுரையில் நடைபெற்று வருகிறது. கடந்த 28-ந் தொடங்கிய இந்த போட்டியில் நாக் அவுட்டான கால் இறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.
2 முறை சாம்பியனான இந்திய அணி பெல்ஜியத்தை வீழ்த்தி 7-வது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
போட்டியின் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது. இதனால் வெற்றி- தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்- அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 4- 3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய அணி அரை இறுதியில் 7 தடவை உலக கோப்பையை கைப்பற்றிய ஜெர்மனியை எதிர்கொள்கிறது. சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது.
ரோகித் தலைமையிலான இந்திய அணி ஜெர்மனியை தோற்கடித்து 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது. ஜெர்மனி பலம் வாய்ந்தது என்பதால் அந்த அணியை வீழ்த்துவது சவாலானது.
உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். இதை வீரர்கள் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். தோல்வியை சந்திக்காமல் அரை இறுதி வாய்ப்பை பெற்ற இந்தியா லீக் சுற்றில் சிலி ( 7-0), ஓமன் (17-0), சுவிட்சர்லாந்து (5-0) ஆகிய அணிகளை தோற்கடித்தது.
ஜெர்மனி அணி லீக் சுற்றில் தென் ஆப்பிரிக்கா (4-0), கனடா (7-0), அயர்லாந்து (5-1) ஆகிய வற்றையும், கால் இறுதியில் பிரான்சையும் தோற்கடித்தது. இந்தியாவை போலவே ஜெர்மனியும் கால் இறுதியில் பிரான்சை பெனால்டி ஷூட் அவுட்டில் (3-1) வீழ்த்தியது. போட்டி முடிவில் 2-2 என்ற சமநிலை இருந்தது.
13-வது முறையாக அரை இறுதியில் விளையாடும் ஜெர்மனி அணி இந்தியாவை தோற்கடித்து 10-வது தடவையாக இறுதி போட்டிக்கு நுழையும் வேட்கையில் உள்ளது.
முன்னதாக நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதியில் ஸ்பெயின்- அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.
5 முதல் 8-வது இடங்களுக்கான போட்டிகளில் பெல்ஜியம்- பிரான்ஸ் (மதியம் 2.30 மணி), நெதர்லாந்து-நியூசிலாந்து (மாலை 3 மணி) அணிகள் மோதுகின்றன.
இந்த தோல்வியால் ஜெர்மனி பயிற்சியாளர் ஜோசிம் லொய் அதிருப்தி அடைந்துள்ளார். அவர் கூறியதாவது:-
முதல் பாதி ஆட்டத்தில் ஜெர்மனி வீரர்கள் ஆட்டம் மோசமாக இருந்தது. நாங்கள் கோலை நோக்கி பல ஷாட்டுகள் அடித்தோம். ஆனால் அதிர்ஷ்டம் இல்லை. எங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தாக்குதல் மற்றும் பந்தை கடத்துவதில் திறமையாக செயல்படவில்லை.
முதல் ஆட்டத்தில் தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் அதை ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும். ஜெர்மனி அணி தோல்வி இருந்து மீண்டு வரும் திறமை வாய்ந்தது. அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெறும் என்றார். #WorldCup2018 #FIFA2018 #GERMEX
21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 14-ந் தேதி ரஷியாவில் தொடங்குகிறது.
உலக கோப்பை போட்டிக்கான 23 பேர் கொண்ட ஜெர்மனி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆச்சரியம் அளிக்கும் வகையில், தாக்குதல் ஆட்டத்தில் சிறந்த நடுகள வீரரான லராய் சானேவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக எந்த போட்டியிலும் ஆடாமல் இருந்த கோல் கீப்பர் மானுல் நுவர் கடந்த வாரம் நடந்த ஆஸ்திரியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆடினார். இந்த நிலையில் அவர் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணியில் கோல் கீப்பர் பெர்ட் லினோ, முன்கள வீரர் நில்ஸ் பீட்டர்சன், பின்கள வீரர் ஜோனதன் ஆகியோருக்கும் இடம் கிடைக்கவில்லை. ஜெர்மனி அணி ‘எப்’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
23 பேர் கொண்ட பெரு அணியில் நடுகள வீரர் செர்ஜியோ பெனோவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ‘உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடிக்க முடியாமல் போனது தனது விளையாட்டு வாழ்க்கையில் கடினமான தருணமாகும்’ என்று செர்ஜியோ பெனோ கருத்து தெரிவித்துள்ளார்.
ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கி 14 மாத தடை விதிக்கப்பட்டு, பின்னர் உலக விளையாட்டு தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்து தண்டனையில் இருந்து தற்காலிகமாக விலக்கு பெற்ற கேப்டன் பாலோ குர்ரேரோ பெரு அணியில் இடம் பிடித்து இருக்கிறார். பெரு அணி ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது.
எகிப்து அணியில், கடந்த மாதம் நடந்த சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் தோள்பட்டையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் முன்கள வீரர் முகமது சலா சேர்க்கப்பட்டு இருக்கிறார். ஆனால் அவர் உடல் தகுதி பெற்று லீக் ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது. கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் விளையாடாமல் இருக்கும் நடுகள வீரர் முகமது எல்னெனி அணியில் இடம் பிடித்துள்ளார். 45 வயதான கோல் கீப்பர் இஸ்சாம் எல் ஹடாரி அணியில் இடம் பெற்றுள்ளார். இந்த போட்டியில் இஸ்சாம் எல் ஹடாரி ஆடினால், உலக கோப்பை போட்டியில் விளையாடிய அதிக வயதுடைய வீரர் என்ற சிறப்பை பெறுவார். #ManuelNeuer #WorldCupFootball






