என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Junior World Cup Hockey"

    • 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன.
    • மற்ற அணிகள் 9 முதல் 24-வது இடத்துக்கான ஆட்டங்களில் விளையாடும்.

    சென்னை:

    14-வது ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் மதுரை ரேஸ்கோர்சில் உள்ள சர்வதேச ஹாக்கி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதின. லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி (ஏ), இந்தியா (பி), அர்ஜென்டினா (சி), ஸ்பெயின் (டி), நெதர்லாந்து (இ), பிரான்ஸ் (எப்) ஆகியவை தங்கள் பிரிவில் முதலிடம் பிடித்தும், 2-வது இடம் பிடித்த இரண்டு சிறந்த அணிகளான நியூசிலாந்து (சி), பெல்ஜியம் (டி) என 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன. மற்ற அணிகள் 9 முதல் 24-வது இடத்துக்கான ஆட்டங்களில் விளையாடும்.

    இந்த போட்டி தொடரில் நேற்று ஓய்வு நாளாகும். இன்று மதுரையில் நடைபெறும் 17 முதல் 24-வது இடத்தை நிர்ணயிப்பதற்கான ஆட்டங்களில் நமிபியா-ஆஸ்திரியா (காலை 9 மணி), வங்காளதேசம்-ஓமன் (காலை 11.30 மணி), தென்கொரியா-எகிப்து (பிற்பகல் 2 மணி), சீனா-கனடா (மாலை 4.30 மணி) அணியும், சென்னையில் நடைபெறும் 9 முதல் 16-வது இடத்தை தீர்மானிப்பதற்கான ஆட்டங்களில் இங்கிலாந்து- சிலி (பகல் 12.30 மணி), தென்ஆப்பிரிக்கா- மலேசியா (பிற்பகல் 3 மணி), சுவிட்சர்லாந்து- அயர்லாந்து (மாலை 5.30 மணி), முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா -ஜப்பான் (இரவு 8 மணி) அணியும் மோதுகின்றன.

    • இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி தொடர்ந்து 3-வது வெற்றியை ருசித்து கால்இறுதியை எட்டியது.
    • இந்திய அணி கால்இறுதி ஆட்டத்தில் பெல்ஜியத்தை எதிர் கொள்கிறது.

    சென்னை:

    14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோதின. நேற்றுடன் லீக் முடிவடைந்தன.

    'பி' பிரிவின் இறுதி லீக்கில் இந்தியா- சுவிட்சர்லாந்து அணிகள் மதுரையில் நேற்றிரவு மல்லுகட்டின. மழையால் சற்று தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் வரிந்து கட்டிய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து கோல் போட்டு முதல் பாதியில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றனர். பிற்பாதியில் மேலும் ஒரு கோல் திணித்தனர்.

    முடிவில் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி தொடர்ந்து 3-வது வெற்றியை ருசித்து கால்இறுதியை எட்டியது. அதே சமயம் சுவிட்சர்லாந்து 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் வெளியேறியது.

    இதே போல 7 தடவை உலக கோப்பையை வென்ற ஜெர்மனி (ஏ பிரிவு), 2 முறை பட்டம் வென்ற அர்ஜென்டினா (சி), ஸ்பெயின் (டி), நெதர்லாந்து (இ), பிரான்ஸ் (எப்) ஆகிய அணிகளும் தங்கள் பிரிவில் முதல் இடத்தை பிடித்து கால் இறுதிக்கு முன்னேறின. 2-வது இடத்தை பிடித்த சிறந்த 2 அணிகளான நியூசிலாந்து (சி பிரிவு), பெல்ஜியம் (டி) ஆகியவையும் தகுதி பெற்றன.

    இன்று ஓய்வு நாளாகும். ரேங்கிங் ஆட்டங்கள் நாளை நடக்கிறது. கால்இறுதி போட்டிகள் நாளை மறுநாள் ( வெள்ளிக்கிழமை) சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

    இந்திய அணி கால்இறுதி ஆட்டத்தில் பெல்ஜியத்தை எதிர் கொள்கிறது. இரவு 8 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது. மற்ற கால்இறுதி ஆட்டங்களில் ஸ்பெயின்- நியூசிலாந்து (மதியம் 12.30 மணி), ஜெர்மனி-பிரான்ஸ் (மாலை 3 மணி), நெதர்லாந்து-அர்ஜென்டினா (மாலை 5.30) அணிகள் மோதுகின்றன.

    17 முதல் 24 இடங்களுக்கான போட்டி நாளை நடக்கிறது. மதுரையில் நடைபெறும் ஆட்டங்களில் நமீபியா-ஆஸ்திரியா (காலை 9 மணி), வங்காளதேசம்-ஓமன் (காலை 11.30 மணி) தென்கொரியா-எகிப்து (பிற்பகல் 2 மணி), சீனா-கனடா (மாலை 4.30 மணி) அணிகள் மோதுகின்றன.

    சென்னையில் நடைபெறும் போட்டிகளில் இங்கிலாந்து-சிலி (பிற்பகல் 12.30 மணி), தென் ஆப்பிரிக்கா-மலேசியா (மாலை 3 மணி), சுவிட்சர்லாந்து-அயர்லாந்து (மாலை 5.30 மணி), ஆஸ்திரேலியா-ஜப்பான் (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன.

    • ஜூனியர் உலக கோப்பை ஹாக்கிப் போட்டியில் 2 முறை சாம்பியனான இந்திய அணி (2001, 2016) ‘பி’ பிரிவில் உள்ளது.
    • இந்த போட்டியிலும் வென்று ஹாட்ரிக்குடன் இந்தியா கால் இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

    சென்னை:

    14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரையில் நடைபெற்று வருகிறது. வருகிற 10-ந்தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.

    ஜூனியர் உலக கோப்பை ஹாக்கிப் போட்டியில் 2 முறை சாம்பியனான இந்திய அணி (2001, 2016) 'பி' பிரிவில் உள்ளது.

    ரோகித் தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் சிலியை 7-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. 2-வது போட்டியில் 17-0 என்ற கோல் கணக்கில் ஓமனை வீழ்த்தியது. 2 ஆட்டத்திலும் சேர்த்து 24 கோல்களை அடித்துள்ளது. ஒரு கோல் கூட வாங்கவில்லை.

    இந்திய அணி கடைசி லீக் போட்டியில் சுவிட்சர்லாந்தை இன்று எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு மதுரை ரேஸ்கோர்ஸ் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

    இந்த போட்டியிலும் வென்று ஹாட்ரிக்குடன் கால் இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. டிரா செய்தாலே தகுதி பெற்று விடும். ஏனென்றால் 19 கோல்கள் வித்தியாசத்தில் இருக்கிறது. இந்திய வீரர் தில்ராஜ் சிங் 6 கோல்கள் அடித்து 3-வது இடத்தில் உள்ளார். சுவிட்சர்லாந்து அணியும் ஓமன் (4-0), சிலியை ( 3-2) தோற்கடித்து இருந்தது.

    • ஜெர்மனி ஹாட்ரிக் வெற்றியுடன் கால் இறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.
    • 2-வது ஆட்டத்தில் இதே பிரிவில் உள்ள தென் ஆப்பிரிக்கா-கனடா அணிகள் மோதுகின்றன.

    சென்னை:

    14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரை ஆகிய 2 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    வருகிற 10-ந் தேதி வரை இந்த போட்டியில் 24 நாடுகள் பங்கேற்று உள்ளன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்று உள்ளன.

    4-வது நாளான இன்று பிற்பகலில் மதுரையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் உள்ள ஜெர்மனி-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

    ஜெர்மனி ஹாட்ரிக் வெற்றியுடன் கால் இறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 4-0 என்ற கணக்கிலும், 2-வது போட்டியில் கனடாவை 7-0 என்ற கணக்கிலும் வென்று இருந்தது. அயர்லாந்து முதல் ஆட்டத்தில் கனடாவை (4-3) வென்றது. அடுத்து தென் ஆப்பிரிக்காவிடம் (1-2) தோற்றது.

    2-வது ஆட்டத்தில் இதே பிரிவில் உள்ள தென் ஆப்பிரிக்கா-கனடா அணிகள் மோதுகின்றன.

    சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் போட்டிகளில் 'சி' பிரிவில் உள்ள நியூசிலாந்து-ஜப்பான் (மாலை 5.45 மணி), அர்ஜென்டினா-சீனா (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன.

    அர்ஜென்டினா, நியூசிலாந்து, அணிகள் 1 வெற்றி, 1 டிராவுடன் தலா 4 புள்ளிகள் பெற்றுள்ளன. ஜப்பான் 1 வெற்றி, 1 தோல்வியுடன் 3 புள்ளி பெற்றுள்ளது. சீனா 2 ஆட்டத்திலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை.

    இந்த பிரிவில் முதல் இடத்தை பிடித்து கால் இறுதியில் நுழைய அர்ஜென்டினா, நியூசிலாந்து இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடைசி ஆட் டத்திலும் வெற்றி பெறும் போது இரு அணிகளும் தலா 7 புள்ளிகளை பெறும் கோல்கள் அடிப்படையில் முடிவு நிர்ணயம் செய்யப் படும். 

    • இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் சிலி 7-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
    • ஓமன் அணி முதல் ஆட்டத்தில் 0-4 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்திடம் தோற்றது.

    சென்னை:

    14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரையில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. டிசம்பர் 10-ந்தேதி வரை இந்த ஹாக்கி திருவிழா நடக்கிறது.

    இந்த போட்டியில் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. 2 முறை சாம்பியனான இந்திய அணி (2001, 2016) 'பி' பிரிவில் உள்ளது.சுவிட்சர்லாந்து, சிலி, ஓமன் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் இடம் பெற்று பெற்றுள்ளன.

    இந்திய அணி நேற்றைய தொடக்க ஆட்டத்தில் சிலியை எதிர்கொண்டது. இதில் 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    ரோகித் தலைமையிலான இந்திய ஜூனியர் ஹாக்கி அணி 2-வது ஆட்டத்தில் ஓமனை சந்திக்கிறது. இன்று இரவு 8 மணிக்கு எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடக்கிறது. ஓமனை வீழ்த்தி இந்திய அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. ஓமன் அணி முதல் ஆட்டத்தில் 0-4 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்திடம் தோற்றது.

    நேற்று நடந்த மற்ற ஆட்டங்களில் பெல்ஜியம் 12-1 என்ற கோல் கணக்கில் நமீபியாவையும், ஸ்பெயின் 8-0 என்ற கணக்கில் எகிப்தையும் (டி பிரிவு) நியூசி லாந்து 5-3 என்ற கணக்கில் சீனாவையும் , அர்ஜென்டினா 4-1 என்ற கணக்கில் ஜப்பானையும் (சி), அயர்லாந்து 4-3 என்ற கணக்கில் கனடாவையும், ஜெர்மனி 4-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவையும் (எ) தோற்கடித்தன.

    • இரண்டு முறை சாம்பியனான இந்திய அணி பி பிரிவில் இடம் பிடித்துள்ளது.
    • முதல் போட்டியில் அதிரடியாக ஆடிய இந்திய வீரர்கள் கோல் அடித்து கலக்கினர்.

    சென்னை:

    14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி முதல் முறையாக தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. சென்னை, மதுரை ஆகிய 2 நகரங்களில் டிசம்பர் 10-ம் தேதி வரை 13 நாள் ஹாக்கி போட்டிகள் பெறுகிறது.

    இந்தப் போட்டியில் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. முதல் முறையாக 24 அணிகள் கலந்துகொண்டன. இதுவரை 16 நாடுகள் மட்டுமே பங்கேற்றன. இந்த 24 நாடுகளும் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன.

    இரண்டு முறை சாம்பியனான இந்திய அணி பி பிரிவில் உள்ளது. சுவிட்சர்லாந்து, சிலி, ஓமன் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் இடம் பெற்று பெற்றுள்ளன.

    இந்நிலையில், சென்னையில் நேற்று ரோகித் தலைமையிலான இந்திய ஜூனியர் ஹாக்கி அணி முதல் போட்டியில் சிலியை எதிர்கொண்டது. அதிரடியாக ஆடிய இந்திய வீரர்கள் கோல் அடித்து கலக்கினர்.

    இறுதியில், இந்தியா 7-0 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தி வெற்றியோடு தொடங்கியது.

    • 2 முறை சாம்பியனான இந்திய அணி (2001,2016 ) ‘பி’ பிரிவில் உள்ளது.
    • சுவிட்சர்லாந்து, சிலி, ஓமன் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் இடம் பெற்று பெற்றுள்ளன.

    சென்னை:

    14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி முதல் முறையாக தமிழ் நாட்டில் நடத்தப்படுகிறது. சென்னை, மதுரை ஆகிய 2 நகரங்களில் இன்று முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை 13 நாட்கள் ஹாக்கி போட்டி கள் கோலாகலமாக நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. முதல் முறையாக 24 அணிகள் கலந்து கொண்டன. இதுவரை 16 நாடுகள் மட்டுமே பங்கேற்றன. இந்த 24 நாடுகளும் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன.

    2 முறை சாம்பியனான இந்திய அணி (2001,2016 ) 'பி' பிரிவில் உள்ளது. சுவிட்சர்லாந்து, சிலி, ஓமன் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் இடம் பெற்று பெற்றுள்ளன.

    7 முறை மற்றும் நடப்பு சாம்பியனான ஜெர்மனி, கனடா, தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து (குரூப் ஏ) 2 தடவை கோப்பையை வென்ற அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஜப்பான், சீனா (சி), ஸ்பெயின், பெல்ஜியம், எகிப்து, நமீபியா (டி) நெதர்லாந்து, மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரியா (இ), 1997-ம் ஆண்டு சாம்பியனான ஆஸ்திரேலியா, பிரான்ஸ், தென்கொரியா, வங்காளதேசம் (எப்) ஆகிய நாடுகள் மற்ற பிரிவுகளில் இடம் பெற்று உள்ளன.

    தொடக்க நாளான இன்று 8 ஆட்டங்கள் நடக்கிறது. மதுரையில் இன்று காலை நடந்த தொடக்க ஆட்டத்தில் ஏ பிரிவில் உள்ள ஜெர்மனி-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் 19-வது நிமிடத்தில் ஜெர்மனி கோல் அடித்தது. இந்த கோலை ஜஸ்டஸ் வார்வெக் அடித்தார். பதில் கோல் அடிக்க தென் ஆப்பிரிக்க வீரர்கள் கடுமையாக போராடினார்கள்.

    ரோகித் தலைமையிலான இந்திய ஜூனியர் ஹாக்கி அணி முதல் போட்டியில் சிலியை எதிர்கொள்கிறது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. இந்த ஆட்டம் சென்னையில் இரவு 8.30 மணிக்கு நடக்கிறது.

    ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் விவரம்:-

    கோல்கீப்பர்கள்: பிக்ரம்ஜித் சிங், பிரின்ஸ்தீப் சிங்.

    பின்களம்: ரோகித் (கேப்டன்) அமீர் அலி, அன்மோல் எக்கா, தலிம் பிரியோபார்தா, சுனில் பாலக்ஷப்பா பென்னுர், ஷர்தானந்த் திவாரி.

    நடுகளம்: அங்கித் பால், அத்ரோகித் எக்கா, தோனவ் ஜாம் இங்கலெம்பா லுவாங், மன்மீத் சிங், ரோசன் குஜூர், குர்ஜோத் சிங்.

    முன்களம்: சவுரவ் ஆனந்த் குஷ்வாஹா, அர்ஷ்தீப் சிங், அஜீத் யாதவ், தில்ராஜ் சிங்.

    உலக தரவரிசையில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. தென்அமெரிக்க நாடான சிலி 18-வது இடத்தில் உள்ளது.

    • 14-வது ஜூனியர் உலக கோப்பையை நடத்தும் வாய்ப்பை முதல் முறையாக தமிழ்நாடு பெற்றுள்ளது.
    • கடைசியாக 2023-ம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த போட்டியில் ஜெர்மனி கோப்பையை கைப்பற்றியது.

    சென்னை:

    21 வயதுக்குட்பட்டவருக்கான ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி 1979-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பிரான்சில் நடந்த அந்த போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது.

    கடைசியாக 2023-ம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த போட்டியில் ஜெர்மனி கோப்பையை கைப்பற்றியது. இதுவரை 13 போட்டி நடைபெற்றுள்ளது. இதில் ஜெர்மனி 7 முறை பட்டம் வென்று சாதித்துள்ளது. அதற்கு அடுத்தப்படியாக இந்தியா, அர்ஜென்டினா தலா 2 தடவையும், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் தலா ஒரு முறையும் உலக கோப்பையை கைப்பற்றியுள்ளன. 14-வது ஜூனியர் உலக கோப்பையை நடத்தும் வாய்ப்பை முதல் முறையாக தமிழ்நாடு பெற்றுள்ளது.

    சென்னை,மதுரையில் நடைபெறும் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி நாளை (28-ந்தேதி) தொடங்குகிறது.

    டிசம்பர் 10-ந்தேதி வரை 13 நாட்கள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் மதுரை ரேஸ்கோர்ஸ் ஸ்டேடியத்தில் ஹாக்கி கோலாகலம் நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் 24 நாடுகள் பங்கேற்கின்றன. முதல் முறையாக 24 அணிகள் கலந்து கொள்கின்றன. இதுவரை 16 நாடுகள் பங்கேற்றன.மேலும் 8 அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்த 24 நாடுகளும் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள நாடுகள் விவரம்:-

    குரூப் ஏ: நடப்பு சாம்பியன் ஜெர்மனி, கனடா, தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து.

    குரூப் பி : இந்தியா, சுவிட்சர்லாந்து, சிலி, ஓமன்.

    குரூப் சி : அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஜப்பான், சீனா.

    குரூப் டி : ஸ்பெயின், பெல்ஜியம்,எகிப்து, நமீபியா.

    குரூப் இ: நெதர்லாந்து, மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரியா.

    குரூப் எப்: ஆஸ்திரேலியா, பிரான்ஸ், தென் கொரியா, வங்காளதேசம்.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகளும், 2-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 2 அணிகள் என 8 நாடுகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

    2-வது இடத்தை பிடிக்கும் மற்ற 4 அணிகளும் 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகளும் 9 முதல் 10-வது இடத்துக்கான போட்டியில் மோதும். எஞ்சிய அணிகள் 17 முதல் 24 இடங்களுக்கு மோதும்.

    டிசம்பர் 2-ந்தேதி வரை 4 நாட்கள் 'லீக்' ஆட்டங்கள் நடைபெறும். 3-ந்தேதி ஓய்வுநாளாகும். டிசம்பர் 4-ந்தேதியில் இருந்து நாக் அவுட் சுற்று நடைபெறுகிறது.

    ரோகித் தலைமையில் இந்திய அணி ஜூனியர் உலக கோப்பையில் சாதிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி முதல் முறையாக 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஜூனியர் உலக கோப்பையை கைப்பற்றியது. அதன்பிறகு சொந்த மண்ணில் 2016-ல் 2-வது தடவையாக உலக கோப்பையை வென்று தற்போது சொந்த மண்ணில் நடைபெறும் போட்டியில் 3-வது தடவையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    ஜூனியர் உலக கோப்பை போட்டிக்காக சென்னை, மதுரை தயார் நிலையில் உள்ளன. மதுரையில் 5,500 பேரும், சென்னையில் 2 ஆயிரம் பேரும் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு டிக்கெட் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான இணையதளம் அல்லது செயலியில் பதிவு செய்து டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். ஒருநபர் 4 டிக்கெட் வரை பெற்றுக் கொள்ளலாம்.

    இந்தப் போட்டியையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

    ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் சென்னையில் வருகிற 28-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது.
    • 24 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கின்றன.

    சென்னையில் வருகிற 28-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை ஆண்களுக்கான ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறுகிறது. இதில் 24 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன. ஜூனியர் உலக கோப்பையில் அதிக அணிகளும், அதிக போட்டிகளும் நடைபெறும் தொடராக இது அமைந்துள்ளது.

    இந்த நிலையில் மாணவர்கள், இளம் விளையாடடு வீரர்கள், குடும்பத்தினர் மற்றும் ஹாக்கியை விரும்புவர்கள் போட்டியை நேரில் கண்டுகளிக்கும் வகையில் இலவச டிக்கெட் அறிவிக்கப்படுகிறது என ஹாக்கி இந்தியா தலைவர் திலிப் திர்கே தெரிவித்துள்ளார்.

    ticketgenie இணைய தளம் அல்லது ஹாக்கி இந்திய ஆப் மூலம் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். பேரார்வம் கொண்ட ரசிகர்களால் சூழ்நிலையை உருவாக்குவது எப்போதுமே மிகப்பெரிய பலம். எல்லோராலும் சர்வதேச ஹாக்கியை அணுக முடியம் என்பதை உருவாக்க உறுதிப்பூண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

    • இந்திய ஜூனியர் ஹாக்கி அணியினர் எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் தீவிர பயிற்சி பெற்று வருகிறது.
    • சொந்த நாட்டு ரசிகர்கள் முன்பு விளையாடுவதை நன்றாக உணர்கிறேன்.

    சென்னை:

    14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி தமிழ்நாட்டில் முதல் முறையாக நடத்தப்படுகிறது. இந்தப்போட்டி வருகிற 28-ந் தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை சென்னை, மதுரையில் நடக்கிறது.

    ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் 24 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன.

    போட்டியை நடத்தும் இந்தியா 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. சிலி, சுவிட்சர்லாந்து, ஓமன் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. 28-ந்தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி சிலியை எதிர் கொள்கிறது.

    உலக கோப்பையில் விளையாடுவதற்காக ரோகித் தலைமையிலான இந்திய ஜூனியர் ஹாக்கி அணி ஏற்கனவே சென்னை வந்து விட்டது. அதைத் தொடர்ந்து வங்கதேசம், அர்ஜென்டினா அணிகளும் வந்துள்ளன.

    இந்திய ஜூனியர் ஹாக்கி அணியினர் எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் தீவிர பயிற்சி பெற்று வருகிறது.

    பயிற்சிக்கு பிறகு பேட்டி அளித்த கேப்டன் ரோகித், ஜூனியர் உலக கோப்பையில் சிறப்பாக ஆடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    எனக்கு எந்தவித நெருக்கடியும் இருப்பதாக நினைக்கவில்லை. நான் இயல்பாகவே இருக்கிறேன். அணியில் 4 முதல் 5 சீனியர் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு வழிகாட்டுவார்கள். அவர்கள் கடந்த காலத்தில் கேப்டனாக பணியாற்றினார்கள். நெருக்கடியை எப்படி கையாள்வது என்பதை பற்றி பயிற்சியாளர் எங்களுக்கு அறிவுறுத்துவார்.

    சொந்த நாட்டு ரசிகர்கள் முன்பு விளையாடுவதை நன்றாக உணர்கிறேன். உள்ளூர் ரசிகர்கள் ஆதரவு மிகவும் முக்கியமானது. ஜூனியர் உலக கோப்பையில் நாங்கள் சிறப்பாக ஆடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு ரோகித் கூறி உள்ளார்.

    பயிற்சியாளரும், இந்திய அணியின் முன்னாள் கோல் கீப்பருமான ஸ்ரீஜேஷ் கூறும் போது, கேப்டன் ரோகித் ஒரு அற்புதமான வீரர். அணியில் மிகவும் அங்கீகரிக்கப்பட்டவர். 4 சீனியர் வீரர்களில் அவர் கேப்டனாக உள்ளார். அவர்கள் ஒருவரை ஒருவர் மதிக்கிறார்கள். கேப்டனாக அவர் தேர்வானது கூட்டு முடிவு என்றார்.

    21 வயதான ரோகித் அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டம் டப்ரா கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். 2022-ம் ஆண்டு ஜூனியர் அணியில் இணைந்தார். ஆசிய கோப்பை மற்றும் சுல்தான் ஜோகா் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார். இதனால் டிராக்பிளிக்கரான அவர் சில சீனியர்களை விட கேப்டனாக தேர்வு பெற்றார்.

    ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி திருவிழா 13 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக சென்னை, மதுரை மைதானங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த ஹாக்கி திருவிழாவை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளனர்.

    • இந்தப் போட்டியில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
    • பி பிரிவில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளன.

    சென்னை:

    14-வது ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) உலகக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை மற்றும் மதுரையில் வரும் நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை எந்தெந்த பிரிவில் இடம்பெற வேண்டும் என்பதை குலுக்கல் மூலம் நேற்று சர்வதேச ஹாக்கி சம்மேளனம் முடிவு செய்தது.

    'ஏ' பிரிவு: நடப்பு சாம்பியன் ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, கனடா, அயர்லாந்து

    'பி' பிரிவு: முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான், சிலி, சுவிட்சர்லாந்து

    'சி' பிரிவு: முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஜப்பான், சீனா

    'டி' பிரிவு: ஸ்பெயின், பெல்ஜியம், எகிப்து, நமீபியா

    'இ' பிரிவு: நெதர்லாந்து, மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரியா

    'எப்' பிரிவில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, தென்கொரியா, வங்காளதேச அணிகளும் இடம்பிடித்துள்ளன.

    ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் பிரான்சிடம் தோல்வி அடைந்தது.
    புவனேஸ்வர்:

    12-வது ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. வருகிற 5-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜெர்மனி, பெல்ஜியம், பாகிஸ்தான் உள்பட 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

    முதல் நாளில் பி பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பிரான்சை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 4-5 என்ற கணக்கில் பிரான்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற பி பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா, கனடா அணிகள் மோதின. முதல் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்த இந்திய அணி இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. இதனால் முதல் பாதியி இந்தியா 4-1 என முன்னிலை வகித்தது.

    இரண்டாவது பாதியிலும் இந்தியாவின் ஆக்ரோஷம் தொடர்ந்தது. இந்திய வீரர்கள் சஞ்சய், அராய்ஜித் சிங் ஹாட்ரிக் கோல் அடித்தனர். 

    இறுதியில், இந்தியா 13-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    ×