பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை வாபஸ்

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது பப்புவா நியூ கினியா.இன்று 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை வாபஸ்
Published on

கான்பெர்ரா:

அடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்து வரும் நாடு பப்புவா நியூ கினியா.

இந்நிலையில், பப்புவா நியூ கினியா நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை.

இதற்கிடையே, சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சிறிது நேரத்துக்கு பிறகு சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com